வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி எழுதிய கடிதம் தொடர்பாக
வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் விஜ்ஜயவிக்ரம மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நகரசபை உறுப்பினர்களிடம் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம தெரிவித்துள்ளார்.
    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்தி பதவி விலக வேண்டும் என்றும் தமைப்பதவியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு எதிராக நாட்டில் உள்ள வேறுபகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி நகரசபை உறுப்பினர்கள் வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள். விடுத்துள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

    வெலிகம நகரசபை தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருந்தால்  அவருக்கு எதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

    0 Comments:

    Post a Comment