பள்ளிவாயல்களில் இடம்பெறும் சகல பயான்களையும் பதிவு செய்து அனுப்பவும்- அமைச்சர் ஹலீம்


குரோதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு துணைபோகும் விதமாக பள்ளிவாயல்களில் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும், அவ்வாறு இடம்பெற்றதாக கண்டறியப்பட்டால் அதற்கு பள்ளிவாயல் பரிபாலன சபை பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாயல்களில் இடம்பெறும் ஜும்ஆ நிகழ்வுகளையும், வேறு பயான் நிகழ்ச்சிகளையும் சீ.டீ.களில் பதிவு செய்து முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த நீண்ட அறிவித்தலில் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மு)


0 Comments:

Post a Comment