Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

தோல்விக்குப் பின் மத்திய கிழக்கில் இருந்து ஆப்கானை நோக்கி நகரும் ஐ.எஸ்


ஈராக் மற்றும் சிரியாவில் கொடிய போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு உறுப்பினர்கள் தனது ஜிஹாத் போராட்டத்தை தொடரும் அமெரிக்கா மீதான பாரிய தாக்குதல் ஒன்றுக்கு உதவ ஆப்கானிஸ்தானை நோக்கி படையெடுத்து வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் சுயமாக அறிவித்துக்கொண்ட கலீபத் (இஸ்லாமிய பேரரசு) தோல்வியடைந்த பின்னர் தொற்காசியாவில் பேரழிவு தாக்குதல்கள் மூலம் ஐ.எஸ் தனது பிராந்திய செல்வாக்கை உறுதிப்படுத்த விரும்புகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

“அவர்களில் சிலர் ஏற்கனவே இங்கு வந்து அவர்கள் அங்கு கற்ற தமது அறிவு, திறன் மற்றும் அனுபவத்தை இங்கு பரிமாற்ற முயற்சிக்கின்றனர்” என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க சிரேஷ்ட உளவு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“(ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நாம் தொடராவிட்டால் அவர்கள் எமது சொந்த நாட்டில் பெரும்பாலும் ஓர் ஆண்டுக்குள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவார்கள்” என்று அந்த அதிகாரி எச்சரித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தமது பெயரை வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் சதியின் தன்மை பற்றி அந்த அதிகாரி குறிப்பிடாதபோதும், 2016 ஆம் ஆண்டு பிளோரிடா துப்பாக்கிச் சூடு உட்பட ஐ.எஸ் அமெரிக்காவில் இதற்கு முன்னர் பல தாக்குதல்களை நடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. பிளோரிடா தாக்குதலில் ஓர்லாண்ட் இரவு விடுத்திக்குள் நுழைந்த ஐ.எஸ் உடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் 2,500 மற்றும் 4,000க்கு இடைப்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் இருப்பதாக ஐ.நா அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.





எனினும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் எண்ணிக்கை மற்றும் திறன் இரண்டிலும் வளர்ச்சி பெற்றிருப்பதாக அண்மையில் அங்கு விஜயம் செய்த அமெரிக்க செனட் ஆயுத சேவைக் குழு உறுப்பினரான ஜக் ரீட் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐ.எஸ் குழுவை ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக ஒழுக்கி அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் அந்த ஆண்டு திட்டம் வகுத்தது. எனினும் இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்த ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ திட்டம், அந்தக் குழுவின் தீவிரத்தன்மை குறைத்து மதிப்பிடப்பட்டதாக குறிப்பிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ் ஆறு உயர் மட்டத் தாக்குதல்களை நடத்தியதோடு 2017 இல் அந்த எண்ணிக்கை 18 ஆகவும் கடந்த ஆண்டு 24 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி அரச அமைச்சு ஒன்றின் மீதான தற்கொலை தாக்குதலுக்கும் ஐ.எஸ் உரிமை கோரியது.
Read more »

அதி தீவிர புயலாக வலுபெற்றுள்ளது ஃபானி: சென்னை வானிலை மையம்



வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இது ஒடிசாவை நோக்கி செல்லக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபானி புயல் சென்னையிலிருந்து 575 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகக் கூறினார். இந்த புயல், வடமேற்கு திசையில் பயணித்து நாளை மாலை ஒடிசா கடற்கரையை நெருங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புயலால் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த பாலச்சந்திரன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் வங்கக் கடலின் தென் மேற்குப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஃபானி புயலால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more »

இலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான்! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி

சிரியாவின் நகரமொன்றான அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்ள காணொளியொன்றின் மூலம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2014ம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.

கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி 18 நிமிடங்களை கொண்டுள்ளது.

இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்த பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அவர், எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிர​தேசம், அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பறிக்கப்பட்டது.

இதற்கு பழி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும் அதை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Read more »