8 ஆவது ஜனாதிபதித் தேர்தல்,, வெல்லப்போவது யார்...?


நமது நாட்டின் செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­வ­தற்­கான எட்­டா­வது
தேர்தல் எதிர்­வரும்16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருப்­பது நாம­றிந்­ததே. இத்­தேர்­தலில் தீவு முழு­வ­தி­லி­ருந்தும் கடந்த 2018 ஆம் வரு­டத்­திற்­கான தேருநர் இடாப்பின் பிர­காரம் 15,992,096 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றி­ருக்­கின்­றனர்.


இது கடந்த 2018 பெப்­ர­வரி 10ஆம் திகதி நமது நாட்டில் அமைந்­துள்ள 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 340 சபை­க­ளுக்கு தேர்தல் நடை­பெற்­றது. அதில் நாடு பூரா­கவும் 15,742,371 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்றுக் காணப்­பட்­டனர். (அன்று நடை­பெ­றாது தடை­பட்­டுப்­போன எல்­பிட்­டிய பிர­தேச சபைக்­கான தேர்தல் கடந்த 11 ஒக்­டோபர் 2019 இல் நடை­பெற்­றது தெரிந்­ததே). நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் வாக்­க­ளித்­த­வர்­களை விட 249,725 பேர் இம்­முறை புதி­தாக வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றி­ருக்­கின்­றனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


கடந்த 2010 ஜன­வரி 26 இல் நடை­பெற்ற ஆறா­வது நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதித் தேர்­தலில் மொத்த வாக்­கா­ளர்­களில் 74.49 வீத­மானோர் மாத்­தி­ரமே தமது வாக்­கு­களை பதிவு செய்­தி­ருந்­தனர். அதுவும் யுத்த வெற்­றியை அடுத்து நடை­பெற்ற தேர்­த­லாக இது இருந்த நிலையில் என்­பது நமது கவ­னங்­க­ளுக்­கு­ரி­யது. அது­மட்­டு­மன்றி ஆட்சி மாற்றம் வேண்டும், குடும்ப ஆட்­சியின் வலிமை அகற்­றப்­படல் வேண்­டு­மென பாரிய பரப்­பு­ரைக்கு மத்­தியில் இலங்­கையின் 7ஆவது செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதித் தேர்தல் கடந்த 08 ஜன­வரி 2015இல் நடை­பெற்­றது. அதில்­கூட அன்று வாக்­கா­ளிக்கத் தகுதி பெற்­றி­ருந்­த­வர்­களில் 81.52 வீத­மா­ன­வர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்­வதில் ஆர்வம் காட்டி இருப்­ப­தையும் பார்க்­கின்றோம். அதே­நேரம், 2018இல் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லில்­கூட 80.20 வீத­மா­னோர்தான் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். ஆகவே, இம்­முறை நடை­பெ­ற­வி­ருக்­கின்ற எட்­டா­வது செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதித் தேர்­தலில் 82 வீதத்­திற்­குள்­ளேதான் மொத்த வாக்­கு கள் பதிவு நடை­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.


எட்­டா­வது நிறை­வேற்று ஜனா­தி­பதித் தேர்­தலில் வெல்லப் போவது யார் என்­பது குறித்து பலரும் பல­வி­த­மான எதிர்வு கூறல்­களை முன்­வைத்து வரு­வதும் நாம­றிந்­ததே. எனது பார்­வையின் அனு­மா­னத்­தையும் இது விட­யத்தில் பகிர்ந்து கொள்­வதே இக்­கட்­டு­ரையின் அடிப்­ப­டை­யாகும். மாறாக, இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட கருத்­துக்­களின் ஆதா­ரப்­ப­டுத்­த­லாக எழு­தப்­ப­டு­கின்ற ஆக்­க­மல்ல. நான் அவ­தா­னித்­த­வற்றின் எடு­கோளை முன்­னி­றுத்தி, கணித்து ஆற்­றுப்­ப­டுத்தும் ஒரு கட்­டு­ரையே இது­வாகும். சில­வேளை இதில் தெரி­விக்­கப்­படும் எதிர்வு கூற­லுக்கு நேரெ­தி­ரான முடி­வு­க­ளையோ, சரி­யொத்த பெறு­பே­று­க­ளையோ நாம் சந்­திக்­கவும் வாய்ப்­பி­ருப்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.


எது எவ்­வாறு இருந்­தாலும் நடை­பெ­ற­வி­ருக்­கின்ற எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­ன­ரான சில பின்­ன­ணி­களை நமது ஞாப­கத்­துக்கு கொண்­டு­வ­ரு­வது இத்­தேர்­தலை நிறுத்துப் பார்ப்­ப­தற்கு அனு­கூ­ல­மாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்­கு­களைப் பெற்று, 1,842,749 அதி­கப்­ப­டி­யான வாக்கு வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றி­ருந்தார். நமது நாட்டில் அமைந்­துள்ள 22 தேர்தல் மாவட்­டங்­களில் உள்ள வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் அமையப் பெற்­றி­ருக்கும் 5 தேர்தல் மாவட்­டங்­களும் மத்­திய மாகா­ணத்தில் அமைந்­துள்ள நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டத்­தோடு மொத்தம் 6 மாவட்­டங்­களில் தோல்­வி­யுற்ற நிலை­யில்தான் இந்த வெற்­றியை தன்­வ­ச­மாக்கிக் கொண்டார். இது சிங்­கள மக்­களின் அதி­க­ரித்த வசீ­க­ரிப்பு. இவர் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் வெற்­றி­ய­டைந்­தவர் என்ற அடை­யாளம் வழங்­கிய மாபெரும் பரி­சாகும். அதே­நேரம் யுத்த காலத்தில் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த சரத் பொன்­சே­காவை எதிர்த்து போட்­டி­யிட்­டி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.


கடந்த 2010 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்­கு­களில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து கிடைத்த மொத்த வாக்­குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்­கு­க­ளி­லி­ருந்து கழித்தால் 5,670,713 வாக்­குகள் சிங்­கள மக்­களை பெரு­வா­ரி­யாகக் கொண்ட ஏனைய 17 மாவட்­டங்­க­ளிலும் இருந்து பெற்­ற­தாகும். அதே­நேரம் சரத் பொன்­சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்­கு­க­ளி­லி­ருந்து வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து பெற்ற 684,944 வாக்­கு­களை கழித்தால் வரும் 3,448,241 வாக்­கு­களே சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட மாவட்­டத்­தி­லி­ருந்து அவரால் பெற முடிந்­தி­ருக்­கி­றது.


பொன்­சேகா வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து மஹிந்­தவை விட அரைப்­ப­கு­திக்கு மேல் பெற்­றி­ருந்தும் அவரால் வெல்ல முடி­ய­வில்லை. இது எதனை நமக்குச் செய்­தி­யாகத் தரு­கி­றது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து சிறு­பான்மை மக்­க­ளான தமிழர், முஸ்­லிம்­களின் அதி­க­ரித்த ஆத­ரவு என்­பது சிங்­கள மக்­களின் அதி­க­ரித்த ஆத­ரவு இல்­லா­த­போது பய­னில்லை என்­ப­தைத்தான்.


இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆம் திகதி நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு 4,846,388 (60.33%) வாக்­கு­களைப் பெற்று மாவட்ட ரீதி­யாக 127 ஆச­னங்­க­ளையும் தேசி­யப்­பட்­டி­யலில் இருந்து 17 ஆச­னங்­க­ளு­மாக மொத்தம் 144 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை உரித்­தாக்கி கொண்டது. இதில் ஐ.தே.முன்­னணி 2,357,057 (29.34%) வாக்­கு­களைப் பெற்று மாவட்ட ரீதி­யாக 51உம் தேசிய பட்­டி­யலில் 9மாக மொத்தம் 60 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையே பெற்­றெ­டுக்க முடிந்­தி­ருக்­கி­றது. இது மஹிந்­தவின் மக்கள் செல்­வாக்­குக்கு முன்னால் ஐக்­கிய தேசிய முன்­னணி மிகவும் பல­வீ­னப்­பட்­டி­ருப்­ப­தையே எடுத்துக் காட்­டு­கின்­றது.


கடந்த 2015 ஜன­வரி 8 ஆந் திகதி நடை­பெற்ற நமது நாட்டின் செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்கு நடை­பெற்ற 7 ஆவது தேர்­தலில் மைத்­திரி பெற்ற மொத்த வாக்­குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து கிடைத்த 978,111 வாக்­கு­களை கழித்தால் ஏனைய சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட 17 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து 5,239,051 வாக்­கு­க­ளையே மைத்­தி­ரியால் பெற முடிந்­தி­ருக்­கி­றது. அதே­நேரம் மஹிந்த சிங்­கள மக்­களை பெரு­வா­ரி­யாகக் கொண்ட 17 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து 5,544,490 வாக்­கு­க­ளையும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து 223,600 வாக்­கு­க­ளையும் பெற்று மொத்­த­மாக 5,768,090 (47.58%) வீத­மான வாக்­கு­களை பெற்­றி­ருக்­கின்றார். ஆயின் ஒப்­பீட்­ட­ளவில் மைத்­தி­ரியை விடவும் சிங்­கள மக்­களின் வசீ­க­ரிப்­புக்கும் பற்­றுக்கும் அதிக கவ­னத்தை பெற்­ற­வ­ராக மஹிந்த ஆகு­கின்றார்.


யுத்த வெற்­றிக்கு எத்­தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்­த­வுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்­றுதான் சிங்­கள மக்­களின் பெரும்­பா­லா­ன­வர்­களின் மனோ­பாவம் அமைந்து காணப்­ப­டு­கின்­றது. இத­னால்தான் ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்ற பின்னர் எதிர்­கொண்ட பொதுத் தேர்­தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்­து­கின்றார். அதிலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­புக்குள் அவ­ரது ஆளு­மையும் செல்­வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறு­தி­யான தடத்தைப் பெறு­கின்றார். ஐக்­கிய தேசிய முன்­னணி 5,098,916 (45.66%) வீத வாக்­கு­களைப் பெற்று மொத்­த­மாக 106 ஆச­னங்­களை தன்­வ­ச­மாக்­கிய போதிலும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்­கு­களைப் பெற்று மொத்­த­மாக 95 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பெற்றுக் கொள்­கின்­றது. இதற்கு சார்­பா­ன­வ­ராக ஜனா­தி­பதி மைத்­திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்­களில் பெரும் பகு­தி­யினர் மஹிந்த அணி­யென பிரிந்தும் அவ­ரோடு ஒட்டிக் கொண்­டனர்.


இத்­தேர்­த­லில்­கூட சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட 7 மாவட்­டங்­களை வென்று, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள 5 தேர்தல் மாவட்­டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் பெற்ற வாக்­குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்­குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதே­நேரம் ஐ.தே.முன்­னணி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் பெற்ற வாக்­குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்­த­மாக 5,098.916 வாக்­கு­க­ளாகும்.


இது ஜனா­தி­ப­தி­யாக மைத்­திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்­ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்­பாட்டை எடுப்­பது கூட அவரின் ஆளு­மை­யா­கவே அமை­கின்­றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்­சியை ஸ்தாபிக்கும் கட்­ட­மைப்பை உரு­வாக்கும் பக்கம் திரும்­பு­கின்­றது. இது­வ­லி­மை­யான காலூன்­றலை மஹிந்­த­விற்கு கைகோர்த்து இருப்­ப­தையும், குறு­கிய காலத்­திற்குள் செல்­வாக்­குள்ள ஒரு கட்­சி­யாக அதனை வளர்த்­தெ­டுப்­ப­தற்கு வாய்ப்­ப­ளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்­தர்ப்­பத்­தையும் அவர் பெற்­றி­ருக்­கின்றார்.


கடந்த 2018 பெப்­ர­வரி 10ஆந் திகதி நமது நாட்டில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 340க்கு தேர்தல் நடை­பெற்­றது. காலி மாவட்­டத்தில் அமைந்­துள்ள எல்­பிட்­டிய பிர­தேச சபைக்­கான வேட்­பு­மனு தொடர்­பி­லான வழக்கின் கார­ண­மாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடை­பெ­ற­வில்லை. ஆயினும் அண்­மைய நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமை­வாக கடந்த 11 ஒக்­டோபர் 2019இல் அதற்­கான தேர்­தலும் நடந்து முடிந்­தது.


ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன 5,030,209 வாக்­கு­களைப் பெற்­றி­ருக்­கி­றது. இதில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து இக்­கட்­சிக்கு கிடைத்­தி­ருக்கும் 142,598 வாக்­கு­களை கழித்தால், இம்­மா­கா­ணங்­க­ளுக்கு வெளியே அமைந்­தி­ருக்கும் சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட 17 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து 4,887,611 வாக்­கு­களை பெற்­றி­ருக்­கி­றது. அதே­நேரம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் அமைந்­தி­ருக்கும் திரு­மலை மாவட்டம் உள்­ள­டங்­க­லாக மொத்தம் 16 மாவட்­டங்­களை இக்­கட்சி கைப்­பற்­றி­யது.


ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் எந்த மாவட்­டங்­க­ளையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து 1,502,507 வாக்­கு­களைப் பெற்­றது. இதில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து இக்­கட்­சி­க­ளுக்கு கிடைத்த 167,428 வாக்­கு­களை கழித்தால் சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஏனைய 17 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் பெற்ற மொத்த வாக்­குகள் 1,335,079 ஆகும்.


ஐக்­கிய தேசியக் கட்சி இத்­தேர்­தலில் மொத்­த­மாக பெற்ற 3,650,733 வாக்­கு­களில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் அமைந்­தி­ருக்கும் 5 தேர்தல் மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கிடைத்த 262,746 வாக்­கு­களைக் கழித்தால், ஏனைய 17 சிங்­கள மக்­களை அதி­க­ரிப்­பாக கொண்­டி­ருக்கும் தேர்தல் மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கிடைத்த வாக்­குகள் 3,387,987 ஆகும். நூவ­ரெ­லியா, திகா­ம­டுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்­டங்­களில் மட்­டுமே வெற்றி பெற்­றது.


ஜே.வி.பி 713,367 வாக்­கு­களைப் பெற்­றி­ருக்­கி­றது. இதில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் அமைந்­தி­ருக்கும் 5 தேர்தல் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து 18,246 பெற்ற வாக்­கு­களைக் கழித்தால் 695,121 வாக்­கு­களை சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஏனைய 17 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் பெற்றள்ளது.


உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலைப் பொறுத்­த­வரை மொத்­த­மாக பொது­ஜன பெர­முன 16 மாவட்­டங்கள், ஐக்­கிய தேசிய கட்சி 3 மாவட்­டங்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு 3 மாவட்­டங்கள் என வெற்றி பெற்­றி­ருக்­கின்­றன. இதில் நாம் கவ­னிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்­டி­ருக்கும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே உள்ள 17 மாவட்­டங்­க­ளிலும் ஐ.தே.கட்­சியை விட மஹிந்த தரப்பை அங்­கீ­க­ரிக்கும் பாங்­கி­னை­யாகும். இந்த வித்­தி­யா­சத்தை அக்­கட்­சிகள் பெற்ற வாக்­கு­களில் காணலாம்.


பொது­ஜன பெர­முன 4,887,611 வாக்­கு­களை பெற்­றி­ருக்கும் அதே­வேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்­கு­களை அடைந்­தி­ருக்­கி­றது. இவ்­விரு கட்­சி­க­ளுக்­கி­டையில் காணப்­படும் வித்­தி­யாசம் 1,499,624 ஆகும். இத­னோடு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பெற்­றி­ருக்கும் (17 மாவட்­டங்­களில்) 1,335,079 வாக்­கு­க­ளையும் கூட்­டினால் 2,834.703ஆக உயர்வு பெறு­வதைப் பார்க்­கலாம்.


நமது நாட்டில் காணப்­படும் 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தேர்தல் முடி­வு­களை ஒட்­டு­மொத்­த­மாகப் பார்க்­கும்­போது, பின்­வரும் பெறு­பே­று­களை அவ­தா­னிக்­கலாம். பொது­ஜன பெர­முன 5,030,209 (40.51%) ஐக்­கிய மக்கள் சுந்­திர கூட்­டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்­கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்­சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்­றி­ருந்­தன.


இத்­தேர்­தலில் மொத்­த­மாக வாக்­க­ளித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­குகள் 211,567 ஆகும். செல்­லு­ப­டி­யான வாக்­குகள் 12,414,319 ஆகும் அளிக்­கப்­ப­டாத வாக்­குகள் 3,116,485 (19.79%) ஆகும்.


கடந்த பல தேர்­தல்களில் வாக்­க­ளிப்பு வீதத்தை நோக்­கும்­போது இம்­முறை 81 அல்­லது 82 வீத­மானோர் வாக்­க­ளிப்­பார்கள் என எதிர் பார்க்­கலாம். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பெறு­பே­று­களை வைத்து ஏனைய தேர்­தல்­களின் முடிவு எவ்­வாறு அமையும் என்ற கணிப்­பீட்டை செய்யக் கூடாது என்­கின்ற பொது­நி­ய­தியை மறுக்கக் கூடாது என்­பதை நான் கவ­னத்தில் கொள்­ளா­ம­லில்லை. ஆனால் இத்­தேர்­தலில் இறு­தி­யா­கவும் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விப்பு வந்­ததன் பின்­னரும், முன்­னைய உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்­களின் பின் நடை­பெற்ற எல்­பிட்­டிய தேர்தல் முடிவும் நமது கவ­னத்தை ஈர்க்­கின்­றது.


ஏனெனில், சஜித் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விப்பு செய்­யப்­பட்டும், அவ­ருக்கே அதி­க­ரித்த ஆத­ரவுத் தளம் பெருகிக் கொண்­டி­ருக்­கி­றது என்­கின்ற பரப்­பு­ரைக்கு மத்­தியில், எல்­பிட்டி பகுதி மஹிந்­தவின் கோட்­டை­தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்­போகும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தாக்­கத்தைச் செலுத்­தாது என சொல்­வது பொருத்­த­மாகப் பட­வில்லை. உண்­மையில் கோட்டை என நம்­பப்­ப­டு­வதில் உடைப்பு நிக­ழாது எப்­படி வெற்றி அலை­வீசும் என்ற கேள்­வியும் எழுப்­பப்­ப­டாது விட­லாமா?


இன்று மஹிந்­தவின் கடந்த கால அர­சாங்­கத்தின் போது சாட்­டப்­படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலா­சாரம் என்ற கருத்­தா­டல்கள் 2015 களி­லி­ருந்து கூறப்­பட்டு வந்த தொடர்­க­தை­யா­ட­லுக்கு மத்­தியில் அவர் மீண்­டெ­ழுந்து எழுச்சி பெற்று வரு­வ­தையே தேர்தல் முடி­வுகள் திட்­ட­வட்­ட­மாக நமக்கு அறி­விப்பு செய்­கின்­றது. அது மட்­டு­மன்றி, நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்டு சுமார் 32 மாத ஆட்­சியின் பின்னர் ஐ.தே.கட்­சி­யினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தமற்றதாகாது. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பெறு பேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக்கூடும்.


அந்த அடிப்படையில் இதன் பெறுபேறு களை பின்வருமாறு பார்க்கலாம். பொது ஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51,12,10 சேர்த்து 52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40உம் இதர கட்சிகள் பெற்ற 12.22உம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது.


கடந்த 2015இல் மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடை பெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது.


ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியி லிருந்து முற்றாக விலகியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக் கும் நிலை தோன்றாதவரை மஹிந்த அணி வேட்பாளர் கோத்தாவை தோற் கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று?-Vidivelli


எம்.எம்.எம்.நூறுல் ஹக்