இலங்கை இனவாத தாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம்

கடந்த சில நாட்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளன.இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ததை வரவேற்பதாகவும், இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக சரியான தலைமைத்துவம் அவசியமெனவும் வெறுப்பு, வன்முறைகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment