தலவாக்கலையில் இரு குழுக்களிடையே மோதல் ; அறுவர் கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகர மத்தியில் நேற்றிரவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானமையினாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படாத போதிலும் ஒரு சிறிய விடயத்தை முன்வைத்து நகரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டமை காரணமாக இவர்கள் அனைவரும் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

0 Comments:

Post a Comment