பாகிஸ்தானில் சுமார் 1000 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவிலை திறக்க பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருடம் பழமைவாந்த இந்து கோவிலின் சுத்திகரிப்பு பணிகள் மற்றும் புணர்நிர்மான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் தற்போது திறக்கபடவுள்ளது.

சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்ட இவ் ஆலயம் பிரிவினையின் போது மூடப்பட்டது.

பின்னர் 1992 இல் பாபர் மசூதி இடிப்பின் நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது.

அதன் பிறகு சியால்கோட்டில் உள்ள இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். தற்போது பிரதமர் இம்ரான்கானின் முயற்சியால் மீண்டும் இக்கோவிலின் பராமரிப்பு பணிகள் தொடங்கி விரைவில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 Comments:

Post a Comment