உலக கிண்ண அரையிறுதியில் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்க இது தான் நடக்க வேண்டும்.


உலக கிண்ணத்தின் புள்ளி பட்டியலில் அரையிறுதி வாய்ப்பை அவூஸ்ரெலியா மட்டுமே பெற்றுள்ளது.

இன்னும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்படும் நிலையில் இந்தியா 11 புள்ளிகள் (இன்னும் இலங்கை, வங்களாதேஷ் அணிகளுடன் போட்டிகள்) உள்ளன.

நியூசிலாந்து அணியும் 11 புள்ளிகள் (ஆனால் இங்கிலாந்து அணியிடம் மட்டும் ஒரு போட்டி) உள்ளன. இங்கிலாந்தை வீழ்த்தினால் 13 புள்ளியை பெற்று உள்ளே செல்லும்

இங்கிலாந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளன. நியூசிலாந்து அணியுடன்உள்ள போட்டியில் வீழ்த்தினால் 12 புள்ளியை பெற்று உள்ளே செல்லும்.

பாகிஸ்தான் அணி 9 புள்ளிகள் (வங்களாதேஷ் அணியுடன் மட்டும் போட்டி) உண்டு. வென்றால் 11 புள்ளிகளை பெரும்.

வங்களாதேஷ் இந்தியா, பாகிஸ்தான் என இரு போட்டி உண்டு. வென்றால் 11 புள்ளிகள் கிடைக்கும்.

இலங்கை 8 புள்ளிகள் (இந்தியா அணியை அதிக ஓட்டத்தால் வீழ்த்தினால் 10 புள்ளிகள்) கிடைக்கும்.

சொல்ல வாரது என்னவென்றால் இலங்கை அரையிறுதி செல்ல வேண்டுமானால் (நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி, வங்களாதேஷ் அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும், பின்னர் இந்தியா வங்களாதேஷை வீழ்த்த வேண்டும்)

பின்னர் இலங்கை அணி இந்தியா அணியை பெரிய சராசரியால் வீழ்த்துமேயானால் அரையிறுதி செல்லும்.

இது நடக்குமா....???

0 Comments:

Post a Comment