பெயரை மாற்றும் ஞானசார தேரர் ; இது தான் காரணம்

கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயரை சமூக வலைதளத்தின் ஊடாக பயங்கரவாதி என அறிந்ததினால்" ஞானசார" என்ற சொல்லை பேஸ்புக் தடை செய்துள்ளது


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது பெயரை மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளதே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கலகொட அத்தே ஞானசார என்ற பெயரை பேஸ்புக்கில் பதிவிடும் போது அது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயரை மாற்ற தீர்மானித்துள்ளோம். இதனால், இனிவரும் காலங்களில் ஞானசார தேரர், “எமது பிக்கு” என்ற புனைப் பெயரில் அழைக்கப்படுவார் எனவும் டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

ஆத்திரமூட்டும் பயங்கரவாதிகளின் பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. கலகொட அத்தே ஞானசார என்ற வார்த்தை ஆத்திரமூட்டும் வார்த்தை என பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கையில் உள்ள இணைப்பதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவரது பெயர் பதிவிடும் போது அதனை பேஸ்புக் வலைத்தளம் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதாக தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

0 Comments:

Post a Comment