வெலிகமையில் மீண்டும் டெங்கு தீவிரம்.. பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்.


வெலிகம பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்
டெங்கு... எப்படிப் பரவும், தடுப்பது எப்படி, சிகிச்சைகள் என்ன..

வெலிகமயில் டெங்கு தாக்கமும், அதுபற்றிய பீதியும் மக்களை நிறையவே அச்சுறுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. வெலிகம மகவீதிய  பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக 26 வயது பெண் மரணம். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் வைத்திய சாலையில் உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, ‘டெங்குவுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை’ என்று ஒரு தரப்பினர் கூறிக்கொண்டிருக்கின்றனர். `சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் டெங்கு வராமல் தடுக்க மட்டுமே முடியும்; காய்ச்சல் வந்த பிறகு அவை பலனளிக்காது’ என்கிறது மற்றொரு தரப்பு. அதேநேரத்தில் ஒவ்வொரு பிரிவு மருத்துவர்களும் தனித்தனியாக, `எங்களது மருத்துவத்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும்’ என்று கூறிவருகிறார்கள். இதுபோன்ற செய்திகள் பொதுமக்களை தெளிவான ஒரு முடிவெடிக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

கொசுக்களால் டெங்கு பரவுவதில்லை’ என்பது போன்ற வதந்திகள் அதிகமாகப் பரவுகின்றன. உண்மையில் டெங்கு என்பது என்ன?"

“டெங்குவின் தாக்கத்தைவிட அது பற்றிய வதந்திகள்தாம் அதிகம். இதுபோன்ற வதந்திகளைக் கேள்விப்பட்டேன். இவையெல்லாம், டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும், மக்களை மென்மேலும் அச்சுறுத்தக்கூடிய ஓர் அபாயகரமான செயல். எனவே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
வெலிகம பிரதேசத்தில் கோரட்டுவை,மதுரப்புரை, புதியதெரு ,மகாவீதிய பெலானை போன்ற பிரதேசத்தில் டெங்கு நோயால் அதிகமாக பாதிக்கபட்துள்ளனர்

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸால் ஏற்படும் காய்ச்சல். இந்த டெங்கு வைரஸ் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய 'ஏடிஸ்' என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.''


``எப்படிப் பரவுகிறது?"

இலங்கையை பொறுத்தவரை, வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இது, டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.


`ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். இந்தக் கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன. உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.''

"ஏடிஸ் கொசு பகலில்தான் கடிக்கும்; நல்ல தண்ணீரில்தான் வளரும் என்கிறீர்கள். எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?"

“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரும்; அவை பகலில் கடிக்கும் தன்மைகொண்டவை என அவற்றின் வாழ்க்கைமுறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்தத் தரவுகளின் அடிப்படையில் இதுதான் உண்மை. ஆகவே, பொதுமக்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.''

“எத்தனை நாள்கள் தண்ணீர் தேங்கி இருந்தால் ஏடிஸ் கொசு வளரும்?"
“டெங்கு நோயைப் பரப்பும் `ஏடிஸ்' வகை கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர ஏழு முதல் பத்து நாள்களாகும்.’’

“ஏடிஸ் கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?"

“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவை முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி பத்து நாள்களில் கொசுக்களாக உற்பத்தியாகின்றன. `ஏடிஸ்' கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.''



“பிற காய்ச்சல்களிலிருந்து டெங்குக் காய்ச்சலை எப்படி அடையாளம் காண்பது, காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?"




“காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஒரு மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து இது 

டெங்குக் காய்ச்சலா அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இதர வகையான காய்ச்சலா என்பதை கண்டறிந்து உரிய சிகிக்சை அளிக்க முடியும்.



மருத்துவரின் ஆலோசனைப்படி காய்ச்சல் மற்றும் உடல்வலியைக் குறைப்பதற்காக 'பாரசிட்டமால்' மாத்திரைகளைச் சாப்பிடலாம். போதுமான ஓய்வு எடுத்து அதிகமான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த மருந்து என்பதில் சந்தேகமில்லை."


``வீட்டிலேயே டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?"


“டெங்குக் காய்ச்சலைப் பொறுத்தவரை, மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆபத்து ஏற்படக்கூடும். ஆகவே, மருத்துவக் கண்காணிப்பில் இருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் முழுமையாக இந்த நிகழ்வுகள் ஏற்படாமல் காப்பாற்ற முடியும். எனவே, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதுதான் நல்லது. அதனால் சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுக வேண்டும்."


“டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது?"
“காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்; மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு ஓய்வெடுத்து, அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்த பிறகு மருத்துவச் சிகிச்சையைத் தாமதமாகப் பெறுதல், சுயமாக மருந்துகள் சாப்பிடுதல், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுதல், குறைவான திரவ உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவை கூடாது.''
“டெங்குவுக்குத் தடுப்பூசி உண்டா?"
“மிகச்சில நாடுகளில் டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் டெங்குவின் தாக்கம் அதிகமாக என்ன காரணம்?"
இலங்கையிலும் டெங்குவின் பாதிப்பு அதிகம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 140 நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் இருக்கிறது. ஆனால், ஏதோ நம் மாநிலத்தில் மட்டுமே டெங்குவின் தாக்கம் அதிகமாக இருப்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

"டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?"
நாளிதழ் விளம்பரங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் இலங்கை  முழுவதும் பேரணி போன்ற டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர்கள்,இலங்கையில் சனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்குப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், சட்டப்படி உரிமையாளர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி (Fever Management Protocol) சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு மற்றும் டெங்குக் காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக செயல்படுத்தவும், தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.''

“பொதுமக்கள் தங்கள் வீட்டில் `ஏடிஸ்' கொசு உருவாகும் தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்றி உதவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். பகல் நேரத்திலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.

காய்ச்சல் குறைந்த பின்னரும்கூட நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்னைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூன்று நாள்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும்.


 டெங்கு இல்லாத இலங்கையை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமை. இந்தப் பணியில் அனைவரும் தமது பங்கை உணர்ந்து செயல்பட்டால் நோய்த் தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த இயலும்."

0 Comments:

Post a Comment