காணாமல் போய், தானாக திரும்பி வந்த கப்பல்! 90 வருடங்களுக்கு பின்னர் அதிசயம்


1925 ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் திகதி, தெற்கு கரோலினாவின் சார்ள்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது -எஸ்.எஸ்.கொடபக்சி (SS Cotopaxi) என்ற கப்பல். அதாவது 'சாத்தான் முக்கோணம்' என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகச் சென்றது எஸ்.எஸ் கொடபக்சி.

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ, ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான ஃப்ளோரிடாவை கடந்துதான் எஸ்.எஸ். கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.

ஆனால், அந்தக் கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ். கொடபக்சி காணமல் போனது, அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை.அக்கப்பல் மட்டுமன்றி, 2340 தொன் எடையுள்ள நிலக்கரியுடன் கப்டன் டபிள்யூ.ஜே.மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை.

சமீபத்தில் கியூபா கடலோர காவல் படையினர், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதைக் கண்டுள்ளனர். அதைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போதுதான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்.எஸ். கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றான எஸ்.எஸ். கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாக பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது என்றும் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் கப்டனின் ​ெலாக் புக் (Log book) எனப்படும் குறிப்பு எழுதும் நோட்டுப் புத்தகம் கிடைத்துள்ளது. ஆனால், அந்த குறிப்புப் புத்தகத்தில் கடந்த 90 ஆண்டுகளாக எஸ்.எஸ். கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.கப்டனின் குறிப்புப் புத்தகம் உண்மையானது தான் என்றும், சரியாக 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் கப்டன் கப்பல் பயணம் பற்றிய குறிப்பு எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் என்றும் கியூபா நாட்டு வல்லுநரான ரோடோல்போ சல்வடோர் க்ருஸ் நம்புகிறார்.

க்யூபா நாட்டு அரசாங்கம்,இக்கப்பல் காணமல் போனது ஏன்?திரும்பி கிடைக்கப் பெற்றது எப்படி? என்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளது.

இதுபோன்று கப்பல்கள் காணமல்போகும் நிகழ்வுகள் வணிக ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இக்கப்பல் மீதான ஆய்வு மிகவும் அவசியமென்று கியூபா நாட்டு அதிகாரிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

பெர்முடா முக்கோணத்தில் உள்ள மர்மங்களும், அங்கு ஏன் அறிவியலும் தொழில்நுட்பமும் செயலிழந்து போகின்றன என்பதும் இதுவரை கண்டறியப்படாதவையாகவே உள்ளன.

0 Comments:

Post a Comment