பாராளுமன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர் அறிவித்தல்
| November 19, 2019
பாராளுமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி
இவ்வாரத்துக்குள் தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (19) அறிவித்துள்ளார்.
சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (மு)