தலவாக்கலையில் இரகசியமாக மேலதிக வகுப்பு நடாத்திவந்த இரண்டு ஆசிரியர்கள் உட்பட 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தல்!!


கொரோனா தொற்று காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலவாக்கலை பகுதியில் இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடாத்திவந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டு மேலதிக வகுப்பினை நடாத்தி வந்த வகுப்பறையும்  பொது சுகதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை  நகரசபையின் தலைவர் அசோக்க சேபால தெரிவித்தார்.

இந்த சம்பவம்  இன்று இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தலவாகலை லிந்துலை நகரசபைக்குட்பட்ட தலவாக்கலை பகுதியில் இரண்டு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சமூக இடைவெளி மற்றும் சுகதார முறைமைனை கடைப்பிடிக்காது உயர்தர மாணவர்கள் 14 பேருக்கு ஐ.டி வகுப்பு நடாத்தி வந்தமை தொடர்பில் நகரசபை தலைவருக்கு இரகசிய தகவல்  கிடைக்கபெற்றது.

இதனையடுத்து ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களையும் தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் தலவாக்கலை  பொது சுகாதார பரிசோதகர் மற்றும் தலவாக்கலை பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களும் அவர்களுடைய வீடுகளில் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.


0 Comments:

Post a Comment