பதற்றத்தை தொடர்ந்து நீர்கொழும்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்
| May 05, 2019

நீர் கொழும்பில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7 மணி வரையில் இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.