தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் 15 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது

தென் மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனங்களுக்கான விண்ணப்பங்கள்
தென் மாகாண மற்றும் ஏனைய மாகாணங்களில் இருந்தும்  கோரப்பட்டிருந்தன
தென் மாகாண பாடசாலைகளில் காணப்படும் 314 ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கான
 விண்ணப்பம் கடந்த மாதம் கோரப்பட்டது

இதில் நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனம் எதிர்வரும் 15 ஆம் திகதி தென்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.

தமிழ் ,ஆரம்பக்கல்வி ,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு பாடங்களுக்கான நியமனங்களே 15 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஏனைய பாடங்களுக்கான பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் போட்டி பரீட்சை மூலம் அதிக புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment