19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து நியூயோர்க்கிலிருந்து சிட்னி சென்ற விமானம்

உலகில் நீண்ட தொலைவு பறக்கும் விமானம் நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்டு அவுதிரேலியாவின் சிட்னி நகருக்கு இன்று காலை சென்றடைந்தது.

நியூயோர்க் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட குவான்டாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ரக விமானம் இடை நில்லாமல் பயணிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது.

ஏறக்குறைய 16 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவு பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது. இந்நிலையில் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் பறந்து இன்று காலை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை விமானம் சென்றடைந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆலன் ஜோய்ஸ்,

உண்மையில் 19 மணிநேரத்துக்கும் மேலாக இடைநில்லாமல் விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு. பயணிகளையும், விமானிகளையும் எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம்.

விமானம் புறப்பட்டவுடன் பயணிகள் அனைவரும் தங்களின் கைக்கடிகாரத்தின் நேரத்தை சிட்னி நேரத்துக்கு மாற்றிவைத்தனர்.

பயணிகள், விமானியின் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

வழக்கமாக இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டவுடன் இரவு உணவு அளிக்கப்பட்டு பயணிகள் தூங்குவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.

ஆனால், இந்த விமானத்தில் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவு அளித்து, 6 மணிநேரம் விழித்திருக்கச் செய்து, அதன்பின் பயணிகளுக்கு இரவு உணவு அளித்து தூங்க அனுமதிக்கப்பட்டார்.

கிழக்கு அவுஸ்திரேலியாவில் இரவு வரும் அனைவரும் விழித்திருக்க வைத்து உணவு வழங்கப்பட்டது. 6 மணிநேரத்துக்குப்பின் அவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை, விளக்குகளைப் பார்க்காமல் தூங்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.

விமானத்த இயக்குவதற்காக வழக்கமாக இரு விமானிகள் இருக்கும் நிலையில் இந்த விமானத்தில் 4 விமானிகள் பயணித்தனர். 4 விமானிகளும் மாறி, மாறி தங்கள் பணியைச் செய்தார்கள் என்றார்.

0 Comments:

Post a Comment