மாத்தறை மாவட்ட மற்றும் வெலிகம நகரின் பயணக் கட்டுப்பாடு நீக்குவது தொடர்பாக இன்று 18.12.2020 2 மணியளவில் இடம்பெறும் கூட்டத்தின் பின் தீர்மானம்



மாத்தறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள வெலிகம நகரசபைக்கு உட்பட்ட 6 கிராம பிரிவில் கல்பொக்கை, புதிய தெரு, 
கோட்டகொட,கொஹுனுகமுவ,ஹெட்டி வீதிய பிரதேசங்கள் இன்று (18.12.2020) இரவு 12:00 முதல் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெலிகம கல்பொக்கை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் சுமார் 43 பேர் கொரோனா தொற்றாளார்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பயண கட்டுப்பாட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பயணக் கட்டுப்பாடு நீக்குவது தொடர்பாக இன்று 18.12.2020
2 மணியளவில் இடம்பெறும் கூட்டத்தின் பின்  தீர்மானம் எடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments:

Post a Comment