கடந்த 12 ஆம் திகதி நெலுவ சந்தையில் எழுமாரக செய்யப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தவறான தகவல் வழங்கிய வெலிகம வெலிப்பிடியவை சேர்த்த ஒருவர் சிக்கியுள்ளார்




நெலுவ சந்தையில் கடந்த 
12.01.2020 ஆம் திகதி செய்யப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் பொய்யான தகவல்களை வழங்கிய நபர் ஒருவர் வெலிகம சுகாதார அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். 

அவர் தமது வதிவிடத்தை வெலிகம கொலேதண்ட என பொய்யான தகவல்களை வழங்கி உள்ளதாகவும் நேற்றைய தினம் 14.01.2020 வெளிவந்த pcr அறிக்கையில் குறித்த நபர் கொரோனா  நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறித்த நபர் வெலிகம வெலிபிடிய
பிரதேசத்தில் இருப்பவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் போலியான தகவல்களை வளங்கியமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments:

Post a Comment