கிழக்கு மாகாண ஆளுநர் வீட்டில் ஆயுதம் மீட்பு
| April 30, 2019
மட்டக்களப்பு, காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கை இன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன்போது ரி 16 ரக துப்பாக்கியின் மகசீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
http://www.battinaatham.net/description.php?art=19582