இலங்கையில் மையம் கொண்டுள்ள Fani சூறாவளி! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


திருகோணமலையின் வடகிழக்கு திசையில் Fani சூறாவளி மையம் கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் 680 கிலோமீட்டர்கள் தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளத.

வானிலை அவதான நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் சந்தர்பங்களில் மணித்தியாலத்திற்கு 60- 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களை பயன்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment