முஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது

1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளான வெலிகம, பேருவளை மற்றும் தர்கா டவுன் ஆகியவை அதிக அளவில் வெடிபொருட்களால் தாக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய  முன்னாள் புலனாய்வு துறை பிரதானியான சுரேஷ் சலே இன்று இரவு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மேற்கண்ட தகவல்கள் இந்திய உளவுத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி பேரணிகள் நாளை நடைபெறவுள்ளதால் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.lankanewsweb.net/67-general-news/51443-Bomb-threat-in-Muslim-areas:-Indian-Intelligence-confirms