வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவ படை வீரர் தற்கொலை.


வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவவீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

வெலிகம தெலிஜ்ஜிவில பிரதேசத்தை சேர்த்த 28 வயது மதிக்கத்தக்க இராணுவ வீரரே இவ்வாறு ஆற்றில் குதித்து  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 கடற்படை மற்றும் ஊரு மக்கள் இணைந்து  சடலத்தை தேடும் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணை நடாத்தி வருகின்றனர்

Read more »

இஸ்ரேல் வழியில் செல்லும் ஞானசார தன் செயற்பாட்டை இஸ்ரேல் வழியில் நடத்தப்போவதாக சூளுரைத்துள்ளார் என்ற செய்தி தற் போது வெளியாகியுள்ளது

 இஸ்ரேலில் எவ்வாறு முஸ்லிம்களை அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி அவர்களுக்கு சித்திரைவதை கொடுக்கிறார்களோ அதே வழியில் இலங்கையில் உள்ள  முஸ்லிம்களையும் நடத்தப்போவதாக கூறியதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் தான் செய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
        இஸ்ரேலில் ஆயுதங்களைக் கொண்டு அவர்களை அடக்குகின்றனர் நான் எனது ஊடகங்களைக் கொண்டே இந்த முஸ்லிம்களை அடக்குவேன் என்றும் அதற்காக எனக்கு  ஆதரவாக தயாரான நிலையில் எமக்கு சார்பான ஊடகங்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
           இதற்கு உதாரணமாக ஒரு தொலைக்காட்சியில் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மற்றைய முஸ்லிம் அமைச்சர் மதகுரு மாரை பாய்ந்து பாய்ந்து கேள்விகளைத் தொடுத்தார்.  நானும் அதே நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் ஒரு கேள்வியை கடினமாக  என்னிடம் அவர் கேட்கவில்லை நான் என்ன கதைத்தேனோ அதனையே  அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.  இப்படி பல ஊடகங்களும் அரசாங்கமும் எனக்கு உதவியாக இருக்கும் பொழுது இந்த முஸ்லிம்களை அடிமட்டத்துக்கு கொண்டு போய் விடுவேன் என்றும் அவர் கர்வத்துடன் கூறியுள்ளார்.
    இஸ்ரவேலருக்கு அந்நாட்டு முஸ்லிம்களின் சொத்து உடைமைகளையும் கல்வி அறிவினையும் முடக்கியது போல் இந்நாட்டு முஸ்லிம்களின்  சொத்து பொருளாதாரம் கல்வி உள்ளிட்ட அத்தனையையும் முடக்கி அவர்களை இந்நாட்டின் அடிமைகளாக வைப்பதே எனது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.  இதற்காக வேண்டி எனக்கு  தேவையான அத்தனையையும் தருவதாக பல பெரும்புள்ளிகள் எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
#ஆதங்கம்.
Read more »

தளபதியின் 63’வது படத்தில் 16 நடிகைகள்?


‘தளபதி விஜெயின் 63’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இவ் வருட தீபாவளியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக விஜய் மற்றும் அட்லீ இணைந்துள்ளனர். சென்னையில் இந்த படத்திற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்க்ப்பட்டு பல கோடி செலவில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி விரைகிறது படக்குழு.

இந்த படத்தின் கதை பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா வில்லு படத்திற்கு பின் நடிக்கிறார். யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

சமீபத்தில்தான் தளபதி 63கதை என்னுடைய குறும்பட கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு வந்து சர்ச்சை எழுந்தது. அப்போது படக்குழு தொடர்ந்து 70நாட்கள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தது. அட்லி தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்படத்தில் நடிக்கும் இந்துஜா, “நான் நடிகர் விஜயை பார்த்தேன்” என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்துஜாவுடன் ரெபோ மோனிகாஜான், அத்மிகா மற்றும் வர்ஷா பொல்லம்மா என மொத்தம் 16 நடிகைகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »

ஹுவாய் நிர்வாணம் அமெரிக்கா மீது வழக்கு

ஹுவாவி உற்பத்திகளை பயன்படுத்துவதற்கு அமேரிக்கா விதித்திருக்கும் தடைக்கு எதிராக அந்த தகவல் தொடர்பாடல் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கும் ஹுவாவி, தனது உற்பத்திகள் மீது கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

சுருக்கமான தீர்ப்பு ஒன்றுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த ஹுவாவி, இந்த வழக்கை தொடர தகுதியுள்ளதா என்று நீதிமன்றத்திடம் வரைவான தீர்ப்பு ஒன்றைக் கேட்டுள்ளது. “ஹுவாவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதற்கு அமெரிக்க அரசு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு துப்பாக்கியும் இல்லை புகையும் இல்லை.

ஊகங்கள் மாத்திரமே உள்ளன” என்று ஹுவாவியின் தலைமை சட்ட அதிகாரி சொங் லியுபிங் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க அரசியல்வாதிகள் எம்மை வர்த்தகத்தில் இருந்து வெளியேற்ற விரும்புகின்றனர் என்று தெற்கு சீன நகரான சென்சனில் உள்ள ஹுவாவி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது லியுபிங் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் தனது உற்பத்திகளை தடுக்கும் நிறைவேற்று உத்தரவு ஒன்றுக்கும் ஹுவாவி நிறுவனம் முகம்கொடுத்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஸ்மாபார்ட்போர்ன் ஆண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தியது. எனினும் இந்தத் தடை 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு உபகரண வழங்குநராகவும் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போர்ன் உற்பத்தியாளராகவும் இருக்கும் ஹுவாவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ளது.

ஹுவாவி அமைப்புகளை சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டுவதோடு அதனை ஹுவாவி தொடர்ந்து மறுத்து வருகிறது.
Read more »

வெலிகம நகரசபை தலைவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒழுக்க பண்பாட்டை மீறிய குற்றச்சாட்டில்  வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் ஜயவிக்ரம் வின் கட்சி உறுப்புரிமை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை விமர்சித்து ஊடகங்களுக்கு அறிக்கை விட்டது தொடர்பிலேயே வெலிகம நகரசபை தலைவர் விஜயவிக்ரம வின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 கடந்த சில நாட்களுக்கு முன் வெலிகம நகரசபை தலைவர் கட்சி தலைமையகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டதாகவும் அதில் அவர் இனிமேல் இவ்வாறு இடம்பெறாது பார்துகொள்வதாகவும் உறுதி அளித்தும் மீண்டும் கட்சி தலைமையை விமர்சித்தது
தொடர்பில் கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுத்ததாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்
Read more »

வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் புர்கா அணிந்து சென்ற முஸ்லீம் பெண் பாதுகாப்பு படையினரால் கைது

நாடில் புர்கா அணிவது சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட நிலையில் வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் புர்கா அணிந்து ஜனாஸா    வீடொன்றுக்கு சென்ற முஸ்லீம் பெண் ஒருவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து  இலங்கையில் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது இதன் அடிப்படையில் புர்கா தடைசெய்யப்பட்ட நிலையில்  புர்கா அணிந்து செல்வது நாட்டு சட்டத்தை மீறியவராக இந்த பெண் விசாரணைக்கு உற்படுத்த பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் கவர்துறையினரால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்ரன.

அகாசர கால நிலையில் நாட்டு சட்டத்தை மீறி செயற்படுவோர் விசாரணை இன்றி தடுப்பு காவலில் வைக்கப்படுவீர்கள் என்பதையும் கருத்திற்கொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வாறான உடையுடன் தடுப்பு காவலில் இருப்பீர்கள் என்பதையும் கருத்திற்கொள்ளுமாறும்
 முஸ்லீம் பெண்கள் நாட்டின் நிலைமையை மறந்து செயற்பட வேண்டாம் எனவும்  இது தொடர்பாக ஆண்கள் பெண்களுக்கு அறிவுறுத்தல்களை வழக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
Read more »

வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி எழுதிய கடிதம் தொடர்பாக
வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் விஜ்ஜயவிக்ரம மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நகரசபை உறுப்பினர்களிடம் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம தெரிவித்துள்ளார்.
    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்தி பதவி விலக வேண்டும் என்றும் தமைப்பதவியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு எதிராக நாட்டில் உள்ள வேறுபகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி நகரசபை உறுப்பினர்கள் வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள். விடுத்துள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

    வெலிகம நகரசபை தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருந்தால்  அவருக்கு எதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்
    Read more »

    இலங்கை வன்முறை சம்பவங்களில் 27 பள்ளிவாயல்களுக்கும் 1 அரபுக்கல்லூரிக்கும் சேதம்

      !

    சில தினங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் 27 பள்­ளி­வா­சல்­களும் ஒரு அரபுக் கல்­லூ­ரியும் தாக்­கப்­பட்டு சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

    தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சலின் புள்ளி விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் திரட்­டி­யுள்­ளது குரு­நாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்­களும், ஒரு அர­புக்­கல்­லூ­ரியும் புத்­தளம் மாவட்­டத்தில் 3 பள்­ளி­வா­சல்­களும் கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்கள் பல­வற்­றுக்கு பலத்த சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. பல பள்­ளி­வா­சல்­களில் குர்ஆன் பிர­திகள் எரிக்­கப்­பட்­டுள்­ளன. பள்ளிவாயல்களில் சிறு நீர் கழித்தும் அசுத்தப்படுத்தியும் உள்ளன.

    குரு­நாகல் மாவட்­டத்தில் தாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள்

    *மஸ்­ஜிதுல் ஹுதா– கொட்­டாம்­பிட்­டிய

    * மஸ்­ஜிதுல் லுஹ்லு– மல்­வத்த வீதி, கொட்­டாம்­பிட்­டிய

    *மஸ்­ஜிதுல் தாருஸ்­ஸலாம்– நிக்­க­பிட்­டிய

    *மஸ்­ஜிதுல் அப்ரார்– மடிகே, அனுக்­கென

    *-மஸ்­ஜிதுல் ஆலியா– பூவெல்ல

    *மஸ்­ஜிதுல் நூர் –போகொல்ல பாதை, ஹெடி­பொல

    *மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல்– இஹல கினி­யம – வீர­பொக்­குன

    *அப்ரார் தக்­கியா –இஹல கினி­யம

    *ஆயிஷா தக்­கியா– இஹல கினி­யம

    *மஸ்­ஜிதுல் ஜாமிஆ– ஹொரம்­பாவ

    *மஸ்­ஜிதுல் அக்ஸா தக்­கியா– கரன்­தி­பொல

    *ஹம்­மா­லியா தக்­கி­யா–­பொன்­கொல்ல –பண்­டார கொஸ்­வத்த

    *பிர்ருல் வாலிதைன் தக்­கியா– செம்­பேவ சுனந்­த­புர

    *மஸ்­ஜிதுல் இஸ்லாம் –வீதி­ய­வெல –நாகொல்­லா­கொட

    *ஜமா­லியா அரபுக் கல்­லூரி– கொட்­டம்­பிட்­டிய

    *தோர­கொட்­டுவ ஜும்ஆ பள்­ளி­வாசல்– கொன்­னாவ– தோர­கொட்­டுவ

    *சுவைக் தக்­கியா– கொன்­னாவ

    *தக்­கியா –   பென்­னலி கட­வெர –மொர­கோன்ன

    *கைராத் ஜும்ஆ பள்­ளி­வாசல்– யாய­வத்த –கிரிந்­த­வெவ

    *ஹசனாத் தக்­கியா –கல­பிட்­டி­ய­கம– நிக்­க­வ­ரட்­டிய

    *நிக்­க­வ­ரட்­டிய ஜும்ஆ பள்­ளி­வாசல் –நிக்­க­வ­ரட்­டிய

    *பென­டிக்­வத்த தக்­கியா– எஹத்­த­முல்ல– நாகொல்­லா­கொட

    *மாபா­கம தக்­கியா –பரம்­பொல– ஹல்­மில்­லா­வெவ

    *மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் –அச­ன­கொட்­டுவ –குறத்­தி­ஹேன

    புத்­தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள்

    *மஸ்ஜிதுன் நூர் –மைகுளம், சிலாபம்

    *நூர்வீதி ஜும்ஆ மஸ்ஜித்– புத்தளம் வீதி, சிலாபம்

    *மலாய் பள்ளிவாசல்– தர்காமாவத்தை, சிலாபம்

    கம்பஹா மாவட்டம்

    *மினுவங்கொட ஜும்ஆ பள்ளிவாசல்

    Read more »

    இலங்கை இனவாத தாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம்

    கடந்த சில நாட்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளன.இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதேவேளை குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ததை வரவேற்பதாகவும், இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இதற்காக சரியான தலைமைத்துவம் அவசியமெனவும் வெறுப்பு, வன்முறைகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read more »

    கையை வைத்ததுமே சொதப்பிய ரிஷாத்தின் பிரேரணை

    கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (16) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கு சிறிலங்க சுதந்திர கட்சியின் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பிரேரணைக்கான ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

    றித்த பிரேரணையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 காரணிகள் காணப்பட்டதுடன், 64 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

    இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 2018.05.09 ஆகும். இதற்கமைய குறித்த பிரேரணை பெறுமதியற்றதாகும்.

    இதில் என்ன வேடிக்கையான விடயம் என்றால் கையொப்பமிட்ட 64 பேரின் கண்ணுக்கும் இது தெரியாமல் போனதே. இருப்பினும் இதுவும் ஒரு வகையில் நன்மையை அளித்துள்ளது. யார் யாருடைய உண்மையான அரசியல் தன்மை எப்படி என்று நம்மால் பார்வையிட கூடியதாக உள்ளது.

    எமக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் யுத்தம் மேற்கொள்ளவேண்டிய தேவை இல்லை. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெயரில் குற்றம் இருந்தாலும் அதற்க்கு இனி ஒன்றும் செய்ய இயலாது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை வீசிவிடவேண்டியது தான்.

    சிலவேளை இந்த நாட்டின் அரசியல் ஆட்டத்தில் இது தெரிந்தே விடப்பட்ட பிழையாக கூட இருக்கலாம்.

    இத்தகைய நாட்டிற்கு சஹ்ரான் தாக்குதல் நடத்தவில்லை என்றால் தான் புதுமை.< /p>

    Read more »