ஐ.எஸ் பெண் உறுப்பினருக்கு ஈராக்கில் 15 ஆண்டுகள் சிறை


ஈராக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐ.எஸ் பெண் உறுப்பினருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஐ.எஸ்ஸில் உறுப்பினராக உள்ளவரை திருமணம் செய்துள்ளார். இதில் அந்த நபர் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அப்பெண் குறித்த கூடுதல் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஈராக் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 15 ஆண்டுக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஈராக் நீதிமன்றம் இந்த வாரம் பத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு மரணத் தண்டனை விதித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் ஐ.எஸ் இயக்கம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய சுமார் 19,000 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதில் சுமார் 3,000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஏ.பி செய்தி நிறுவனம் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Read more »

ரிஷார்ட் இன்று தெரிவுக் குழு முன்னிலையில்...!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவில், முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.

விசேட தெரிவுக் குழு அமர்வு, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிஷார்ட் பதியுதீன் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவுக் குழு முன்னிலையில் பிசன்னமாகிய சந்தர்ப்பத்தில், அவருக்கு மீண்டும் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.

ரிஷார்ட் பதியுதீன் கடந்த 26 ஆம் திகதி தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில், குழுவின் மூன்று உறுப்பினர்கள் அந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதன் காரணமாக முன்னாள் அமைச்சரை மீண்டும் இன்று முன்னிலையாகுமாறு தெரிவுக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

எனினும் தெரிவுக்குழு முன்னிலையில் பிரசன்னமாவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மறுப்பு தெரிவித்துள்ளர்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல இதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பதிலளித்திருந்தார்.
Read more »

தவறான தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள இலங்கை! -ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட்

இலங்கை மீண்டும் தவறான விடயங்களுக்காகத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது’ என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்


கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலங்கை தலைசிறந்த சுற்றுலாப் பயணத்தளமாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர்
இது இலங்கையின் சுற்றுலாப் பயணத்துறைக்கு சிறப்பானதொரு வருடமாக இருந்திருக்க வேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியினாலும், அதற்குப் பின்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களாலும், முஸ்லிம்கள் மீதான வன்முறைகளாலும் அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி மறைக்கப்பட்டு விட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக் கூடிய அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஜேர்மனி எச்சரித்துள்ளது.

நான்கு கைதிகளுக்கு விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி சிறிசேன பகிரங்கமாக அறிவித்தமை தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருப்பதாக ஜேர்மனியின் ஆளும் சமஷ்டிக் கட்சியின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கான வெளிவிவகார அலுவலகத்தின் ஆணையாளர் பார்பெல் கொஃப்லர் தெரிவித்துள்ளார்.
Read more »

கடந்த ஐந்து ஆண்டுகளாக தென் மாகாண பாடசாலைக் கல்வித்துறையில் தமிழ் மொழிப்பிரிவு தொடர்ந்தும் புறக்கணிப்பு

2012- 2014 காலப்பகுதியில் வழங்கப்பட்ட தென் மாகாண ஆசிரிய நியமனங்களில் காணப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நீதிமன்ற உதவியை நாடினர். இவ்வாறு சட்ட ரீதியான உதவியை முஸ்லிம்கள் நாடியமையால் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளுக்கும், பட்டதாரிகளுக்கும் ஆசிரிய நியமனங்கள் வழங்குவது தடைப்பட்டது. இதனாால் பாதிக்கப்பட்டது மாகாண சபைகளினால்  பரிபாலனை செய்யப்படுகின்ற கிராமத்து பாடசாலை மாணவர்களாகும். இதனால் பல மாணவர்கள் தமக்கு பொருத்தமான பாடங்கள் கலைத்துறையிலுல் இல்லை என்று ஒ​ரே காரணத்துக்காக நகர் பாடசாலைக்கு சென்றனர்.

இவ்வாறு இன்னல்களுடன் தென்மாகாண தமிழ் மொழிப்பிரிவு பயணிக்கையில் இறுதியாக இவ்வாண்டு ஏப்ரலில் மாகாண சபை கலைக்கப்பட்டதும் தென் மாகாண ஆளுனர் ராஜித் கீர்த்தி தென்னகோன் அவர்கள் தனது அதிகாரத்தைக் கொண்டு நாட்டில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டபோதிலும் தமிழ் மொழிப்பிரிவு பாடசாாலைகளுக்கு  ஒரு மாதகால இடைவௌியில் ஆசிரிய நியமனங்களை வழங்கினார். இது வரவேற்கத்த விடயமாகும். ஆனால் அதன் பின்னர்தான் மறு பிரச்சி​னை ஆரம்பமாகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட  மாணவர்களுக்கு கற்பிக்கவேன வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களை அவதானித்தால் சிலருக்கு  பிரயாணத்திற்கு கஷ்டமான  தூரபிரதேசங்களில் கிடைக்கப்பெற்றது. தொழிலொன்றை  மேற்கொண்ட வண்ணம் விண்ணப்பித்த சிலருக்கும் ஆசிரிய நியமனம் கிடைத்தது. பெண் ஆசிரியர்களில் சிலருக்கு நியமனம் கிடைத்த பின்னர் கணவன் அல்லது ஆண் உறவினர்களால் நியமனத்தை பெற வேண்டாம் என்ற தடை பிறப்பிக்கப்பட்டது.

மேற்படி காரணங்களால் நியமனம் கிடைத்த சில ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்து  தமது பொறுப்புக்க​ளை ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் இதனால் பாதிக்கப்பட்டது மாணவச் சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அடுத்தாக தொடர்ந்தும் ஆசிரிய  நியமனம் மூலம் சமூக சேவை செய்யனும் என எதிர்பார்க்கும் பட்டதாரிகளாகும்.

பல ஆண்டுகளாக ஆசிரியர் இல்லையென்ற  மாணவர்கள், இன்று நமக்கு புதிய ஆசிரியர் வருவார் என நம்பிக்கையுடன் பாடசாலைக்கு  சென்றனர். ஆனால் அன்றும் புதிய ஆசிரியர் பாடசாலைக்கு வரவில்லை. இதனால் அந்த மாணவர்களின் கனவுகளும் தொடர்ந்து கனவாக உள்ளது. என்பது கவலையான விடயமாகும்.

தென் மாகாணத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறு அரசியல் தொழில்களுக்கு விண்ணப்பிப்போருக்கு பணிவான வேண்டுகோள் தமக்கு ஏற்கனவே தொழில்  இருந்தால், கஷ்ட பிர​தேசங்களில் தொழில் செய்ய விரும்பாவிடின், தனது கணவன் அல்லது ஆண்  உறவினர்களால் தொழிலை ஏற்க வேண்டாம் என தடையெனின் வீணாக விண்ணப்பித்து பிறருக்குள்ள வாய்ப்புகளை பறிக்க வேண்டாம்.

பட்டதாரிகளே! "கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு கற்பவனுக்கு உதவுபவனாக இரு நான்காமவனாக இருந்து விடாதே....!!! (ஹதீஸ்)" என்ற நபிமொழிக்கேற்ப ஆசிரியர் நியமனம் கிடைத்தும் தொழிலை ஏற்காமல் நான்காமவனாக இருந்து விடாதே....!

Ibnuasad
Read more »

உலகக்கோப்பையில் இலங்கைக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி? இந்த அணி தோற்கனுமே!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் 30-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை தொடர் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து அணிகளும், இந்தியாவைத் தவிர 6 போட்டிகளில் விளையாடிவிட்டன.இதில் இலங்கை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றி 2-ல் தோல்வி, இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது என மொத்தம் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.

இன்னும் இலங்கை அணிக்கு 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இந்தியாவுடன் உள்ளன. இந்த மூன்று போட்டிகளில் இலங்கை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இதில் மூன்றிலும் வெற்றி பெற்றுவிட்டால் இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதே சமயம் ஒன்றில் தோல்வியடைந்துவிட்டால் 10 புள்ளிகளுடன் இருக்கும்.அப்போது இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்க வேண்டும், வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளுக்கு மேல் ஜெயிக்க கூடாது, பாகிஸ்தான் மீதம் விளையாடும் போட்டிகளில் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும்.

இது நடந்தால் மட்டுமே இலங்கை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
Read more »

தனிமையடைவதை விட இலங்கையர்களாகப் பயணிப்பதே எங்களுக்குப் பாதகாப்பானதாகும்


1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது பேராசிரியர் குணபால மலலசேகர தலைமையிலான வலதுசாரி குழுவினர் தேசபிதா டீ.எஸ் சேனாநாயக்கவை சந்தித்து இலங்கை சிங்கள பௌத்த அரசாக (Sinhala Buddhist State) பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். பிரதமர் டீ.எஸ் சேனாநாயக்க அவர்கள் இந்தக் கோரிக்கையை சாதுரியமான முறையில் நிகாரித்தார்.

''நாட்டை சிங்கள பௌத்த அரசாக ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தக் கோரிக்கை சிங்கள பௌத்த மக்களின் நலனுக்கு எதிரானதும், ஆபத்தானதும் " ஆகும் என்று கூறினார்.

நாங்கள் 60 இலட்சம் பேர் மாத்திரமே இங்கு வசித்துவருகிறோம். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை புறந்தள்ளி, சிங்கள பௌத்தர்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக்கொள்வோம் எனில் நாம் உண்மையாகவே தோல்வியடைந்துவிடுவோம்.

சிங்கள பௌத்தர்களுடன் வசிக்கும் ஏனைய சிறுபான்மையினர் இங்கு சிறுதொகையாக இருந்தாலும், பிராந்தியத்திலும் உலகநாடுகளிலும் அவர்கள் எங்களை விட சனத்தொகையில் அதிகானவர்களாக உள்ளார்கள். எனவே நாங்கள் தனிமையடைவதை விட இலங்கையர்களாகப் பயணிப்பதே எங்களுக்குப் பாதகாப்பானதாகும்.
இதனையே உண்மையான நாட்டுப் பற்றி என்கிறோம். அதனால் தான் டீ.எஸ் சேனாநாயக்கவை தேச பிதா என்று இன்றும் அழைக்கிறோம்.

புகழ்பெற்ற ராஜதந்திரியும், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக அவர்களின் பதிவில் இருந்து.
Read more »

வெலிகம பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு கல் வீச்சு தாக்குதல்

வெலிகம ரெஸ்ட் ஹௌஸ் சந்தியில் காணப்படும் புத்தர் சிலைக்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள இதனால் புத்தர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது
இன்று 21 அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது
இரண்டு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகா தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் யாரால் மேற்கொள்ளபட்டது எக் காரணத்தற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக  இதுவரை கண்டறியப்படவில்லை

குறித்த இடத்தின் உரிமை தொடர்பில் பல தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக கருத்து முரண்பாடு இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வெலிகம போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more »

முஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்


மூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஒரே ஒரு முஸ்லீம் பள்ளிவாசல் ஆகும் .கொழும்பு மாத்தறை பிரதான வீதியில் வெலிகமைக்கு அருகாமையில் காணலாம்.
தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள இந்த பள்ளிவாசல் அமையப்பெற்றமைக்கான காரணம் ஒரு வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1993 தினகரன், மற்றும் 2010 சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை பள்ளிவாசல் பதாதையில் ஒட்டப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு

இந்த பள்ளிவாசல் அமையப்பெற்ற வரலாறு முஸ்லீகளை மாத்திரம் அல்லாது அப்பிரதேச சிங்கள மக்களை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவமாகவே உள்ளது சிங்கள மக்கள் அப்பளிவாசல் விடயத்தில் மிகவும் பயபக்தியோடும் கண்ணியமாகவும் அன்று தொடக்கம் இன்றுவரை நடந்துக்கொள்கின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது. இன்றும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இப்பள்ளிவாசலுக்கு காணிக்கையாக பணத்தை போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக அவதானிக்கலாம்.


அப்பள்ளிவாசல் மீது இவ்வளவு பக்தி ஏற்பட என்ன காரணம்.??
(1993 பத்திரிகையில் சுமார் 300 வருடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.)

சுமார் 300 வருடம் மூன்று நூற்றாண்டுக்கு முன் சிங்கள மீனவர் குழு ஒன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த போது அந்த நேரம் கடலில் ஒரு பெட்டி மிதந்து வருவதைகண்டு அந்த பெட்டியை எடுக்க முயற்சி செய்து இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதனை நெருங்க நெருங்க அந்த பேட்டி ஆழ்கடலை நோக்கி செல்வதை அவதானித்தார்கள்   அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது அவர்கள் மீண்டும் கடலில் இருந்து கரைக்கு வரும்போது அந்த பெட்டி கரையை நோக்கி வந்து இருப்பதை அவதானிதார்கள் மீண்டு அந்த பெட்டியை நெருங்கும்போது அந்த பெட்டி ஆழ்கடலை நோக்கி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்

அதில் அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டு இருப்பதை கண்டு
எதற்கும் நாம் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லீகளை அழைத்து வந்து இந்த பெட்டியை எடுப்போம் என்ற எண்ணத்துடன் பக்கத்து கிராம முஸ்லீம்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கின்றார்கள்

முஸ்லீம்கள் கடற்கரையை நோக்கி சென்று கரையை நோக்கி வந்த அந்த பெட்டியை கரைக்கு கொண்டுவந்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஏதோ புதையல் கிடைத்துவிட்டது என்று அந்த பெட்டியை திறந்து பார்க்கின்றார்கள்அவர்களுக்கு ஏமாற்றமே இருந்தது

அந்த பெட்டியில் குங்குமம் வாசனையுடன் ஒரு கபன் இடப்பட்ட ஜனாஸா,மிஸ்வாக் குச்சி, குத்து விளக்கு மற்றும் ஷெய்ஹ் Inaayatullah என்று எழுதிய ஒரு அட்டை இருந்தன
கோபத்துடன் சிங்கள மக்கள் உங்கள் ஊருக்கே கொண்டு போய் இதை அடக்கம் செய்துவிடுங்கள் என வேண்டிக்கொண்டார்கள்
கரைக்கு எடுத்து வந்த அந்த பெட்டியை
அப்பிரதேசத்தில் இருந்து தூக்கி செல்ல முயன்றபோது அவர்களால் அந்த பெட்டியை அசைக்க முடியவில்லை.

சிங்கள மக்களும் சேர்ந்து செய்த முயற்சியாலும் அந்த பெட்டியை அசைக்க முடியாமல் போனது பின்னர்
இந்த ஜனாஸா ஒரு மாபெரும் மகான் ஒன்றின் ஜனாசாவாக இருக்கலாம் என ஊகிக்கின்றார்கள்.இந்த ஜனாஸா இந்த இடத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமாக இருக்கும் என கூற சிறு இடம் கேற்கின்றார்கள்

ஆனாலும் சிங்கள மக்கள் இந்த ஜனாஸா வை இந்த பிரதேசத்தில் அடக்கம் செய்ய ஒரு அங்குலம் கூட இடம் தர மாட்டோம் என காணி உரிமையாளர் கூற முஸ்லீம்கள் நாளை நாம் எமது ஊரு ஜமாத்தினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம் என கூறி

ஊர் முஸ்லீம்கள் கலந்து ஆலோசித்து அந்த ஜனாஸாவை முஸ்லீம் கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வோம் என முடிவு செய்கின்றார்ள்.

என்ன அதிசயம் அதிகாலையிலேயே காணி உரிமையாளர் இன்னும் சிலரும் முஸ்லீம் கிராமத்திற்கு வந்து என்னை காப்பாற்றுங்கள் உடனே வந்து அந்த ஜனாஸாவை எனது காணியில் அடக்கம் செய்யுங்கள் இதற்காக நான் இந்த நான்கு ஏக்கர் காணியை தருகிறேன் என கதறினார் .
உங்களுக்கு என்ன நடந்தது என முஸ்லீம்கள் கேற்க அதற்கு அவர் நேற்று அந்த பெரியார் என் கனவில் வந்து என்னை உனது காணியில் அடக்க செய்ய மறுத்து விட்டாயா என கூறி எனது முதுகில் அடித்தார் என தன் முதுகை காட்டினார்.
பின்னர் முஸ்லீம்கள் அவருக்கு ஆறுதல் கூறி அந்த ஜனாஸாவை அந்த பிரதேசத்தியிலேயே அடக்கம் செய்கின்றார்கள்


இந்த சம்பவம் முஸ்லீம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்தியதாக கூறப்படுகின்றது பின்னர்
முஸ்லீம்கள் அவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே ஒரு சிறிய பள்ளிவாசலையும் நிர்மானிதார்கள் காலப்போக்கில் பள்ளிவாசல் புணர்நிர்மானம் செய்யப்பட்டு ஒரு கேந்திர இஸ்தானமாக இன்றும் இப்பளிவாசல் காட்சியலிக்கின்றது. இன்றும் இந்த சியாரம் அந்த பள்ளிவாசலில் காணக்கூடியதாக உள்ளது

பள்ளிவாசலில் முன்பக்க காணியில் புதைத்த மிசவாக் துண்டு ஒரு நிழல் தரும் மிஷ்வாக் மரமாக இருந்தது.
1914 ஆம் ஆண்டு முஸ்லீம் சிங்கள கலவரத்தில் இப்பள்ளிவாசலுக்கு அநியாயம் செய்யவந்தவர்களுக்கு பல ஆச்சரியம் தரும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் பின்னர் அவர்கள் திரும்பி சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

வெலிகம பிரதேசத்தில் சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட முஸ்லீம் சிங்கள கலவரங்களின் போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இப்பளிவாசளுக்கு எந்த சேதமும் சிங்களவர்களால் செய்ய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பொலிஸ் அதிகாரிகள் கலவரங்கலின் போது இப்பள்ளிவாசளுக்கு பாதுகாப்பு கடமைக்கு செல்லும் போது சிங்களவர்களால் போலீஸ் அதிகாரிகளுக்கு நீங்கள் இந்த பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை இந்த பள்ளிவாசளை நாங்களே பாதுகாப்பு வழங்குவோம் எனவும் கூறப்பட்டுள்ளது

இந்த சம்பவங்களினால் இப்பளிவாசல் மிக பிரசித்தி பெற்ற கேந்திர இஸ்தானமாக வெலிகாமத்தில் திகழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறாக பல அற்புதமான வரலாற்று சம்பவத்தை கொண்டு வெலிகம கப்தரை பள்ளிவாசல் இன்றும் அப்பிரதேச சிங்கள மக்களாலும் கண்ணியமான முறையில் பாதுகாக்ப்பட்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.









WeligamaNews
www.weligamanews.com


Read more »

தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் 15 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது

தென் மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனங்களுக்கான விண்ணப்பங்கள்
தென் மாகாண மற்றும் ஏனைய மாகாணங்களில் இருந்தும்  கோரப்பட்டிருந்தன
தென் மாகாண பாடசாலைகளில் காணப்படும் 314 ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கான
 விண்ணப்பம் கடந்த மாதம் கோரப்பட்டது

இதில் நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனம் எதிர்வரும் 15 ஆம் திகதி தென்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.

தமிழ் ,ஆரம்பக்கல்வி ,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு பாடங்களுக்கான நியமனங்களே 15 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஏனைய பாடங்களுக்கான பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் போட்டி பரீட்சை மூலம் அதிக புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Read more »

வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலை சோதனையிட வந்ததாக கூறிய பாதுகாப்பு படையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள படைவீரர் போலீஸாரால் கைது

இன்று பிற்பகல் 1.45 மணி அளவில் 5 பேர் முச்சக்கர வண்டியில் வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலுக்கு வந்து அங்கு பள்ளிவாசல் இமாமை சந்திக்க வேண்டும் என்பதாகவும் அவரை தாம் முன் கூட்டியே அறிந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். பின்னர் அங்கு சென்ற அப்பிரதேச வாலிபர் அவரின் அடையாள அட்டையை கேட்ட போது அவர் கொடுக்க மறுத்துள்ளார் பின்னர் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அப்பிரதேச மக்கள் பள்ளிவாசலை நோக்கி விரைந்தனர்.   உடனடியாக பொலிஸ் இற்கு தொலைபேசி மூலம் அறிவித்ததை அடுத்து போலீஸ் அப்பிரதேசத்திற்கு வந்த 5 பேரில் 2 பேரை கைது செய்துள்ளனர்.

அடுத்த மூவரும் முச்சக்கர வண்டியுடன் தப்பி ஓடி உள்ளனர் முச்சக்கர வண்டியின் இலக்கம் போலீசார்கு வழங்கப்பட்டுள்ளது.
 ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாதுகாப்பு துறையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு படை வீரர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை வெலிகம போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
Read more »