உலகக்கோப்பையில் இலங்கைக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி? இந்த அணி தோற்கனுமே!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் 30-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை தொடர் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து அணிகளும், இந்தியாவைத் தவிர 6 போட்டிகளில் விளையாடிவிட்டன.இதில் இலங்கை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றி 2-ல் தோல்வி, இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது என மொத்தம் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.

இன்னும் இலங்கை அணிக்கு 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இந்தியாவுடன் உள்ளன. இந்த மூன்று போட்டிகளில் இலங்கை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இதில் மூன்றிலும் வெற்றி பெற்றுவிட்டால் இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதே சமயம் ஒன்றில் தோல்வியடைந்துவிட்டால் 10 புள்ளிகளுடன் இருக்கும்.அப்போது இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்க வேண்டும், வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளுக்கு மேல் ஜெயிக்க கூடாது, பாகிஸ்தான் மீதம் விளையாடும் போட்டிகளில் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும்.

இது நடந்தால் மட்டுமே இலங்கை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
Read more »

தனிமையடைவதை விட இலங்கையர்களாகப் பயணிப்பதே எங்களுக்குப் பாதகாப்பானதாகும்


1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது பேராசிரியர் குணபால மலலசேகர தலைமையிலான வலதுசாரி குழுவினர் தேசபிதா டீ.எஸ் சேனாநாயக்கவை சந்தித்து இலங்கை சிங்கள பௌத்த அரசாக (Sinhala Buddhist State) பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். பிரதமர் டீ.எஸ் சேனாநாயக்க அவர்கள் இந்தக் கோரிக்கையை சாதுரியமான முறையில் நிகாரித்தார்.

''நாட்டை சிங்கள பௌத்த அரசாக ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தக் கோரிக்கை சிங்கள பௌத்த மக்களின் நலனுக்கு எதிரானதும், ஆபத்தானதும் " ஆகும் என்று கூறினார்.

நாங்கள் 60 இலட்சம் பேர் மாத்திரமே இங்கு வசித்துவருகிறோம். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை புறந்தள்ளி, சிங்கள பௌத்தர்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக்கொள்வோம் எனில் நாம் உண்மையாகவே தோல்வியடைந்துவிடுவோம்.

சிங்கள பௌத்தர்களுடன் வசிக்கும் ஏனைய சிறுபான்மையினர் இங்கு சிறுதொகையாக இருந்தாலும், பிராந்தியத்திலும் உலகநாடுகளிலும் அவர்கள் எங்களை விட சனத்தொகையில் அதிகானவர்களாக உள்ளார்கள். எனவே நாங்கள் தனிமையடைவதை விட இலங்கையர்களாகப் பயணிப்பதே எங்களுக்குப் பாதகாப்பானதாகும்.
இதனையே உண்மையான நாட்டுப் பற்றி என்கிறோம். அதனால் தான் டீ.எஸ் சேனாநாயக்கவை தேச பிதா என்று இன்றும் அழைக்கிறோம்.

புகழ்பெற்ற ராஜதந்திரியும், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக அவர்களின் பதிவில் இருந்து.
Read more »

வெலிகம பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு கல் வீச்சு தாக்குதல்

வெலிகம ரெஸ்ட் ஹௌஸ் சந்தியில் காணப்படும் புத்தர் சிலைக்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள இதனால் புத்தர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது
இன்று 21 அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது
இரண்டு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகா தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் யாரால் மேற்கொள்ளபட்டது எக் காரணத்தற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக  இதுவரை கண்டறியப்படவில்லை

குறித்த இடத்தின் உரிமை தொடர்பில் பல தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக கருத்து முரண்பாடு இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வெலிகம போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more »

முஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்


மூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஒரே ஒரு முஸ்லீம் பள்ளிவாசல் ஆகும் .கொழும்பு மாத்தறை பிரதான வீதியில் வெலிகமைக்கு அருகாமையில் காணலாம்.
தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள இந்த பள்ளிவாசல் அமையப்பெற்றமைக்கான காரணம் ஒரு வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1993 தினகரன், மற்றும் 2010 சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை பள்ளிவாசல் பதாதையில் ஒட்டப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு

இந்த பள்ளிவாசல் அமையப்பெற்ற வரலாறு முஸ்லீகளை மாத்திரம் அல்லாது அப்பிரதேச சிங்கள மக்களை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவமாகவே உள்ளது சிங்கள மக்கள் அப்பளிவாசல் விடயத்தில் மிகவும் பயபக்தியோடும் கண்ணியமாகவும் அன்று தொடக்கம் இன்றுவரை நடந்துக்கொள்கின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது. இன்றும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இப்பள்ளிவாசலுக்கு காணிக்கையாக பணத்தை போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக அவதானிக்கலாம்.


அப்பள்ளிவாசல் மீது இவ்வளவு பக்தி ஏற்பட என்ன காரணம்.??
(1993 பத்திரிகையில் சுமார் 300 வருடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.)

சுமார் 300 வருடம் மூன்று நூற்றாண்டுக்கு முன் சிங்கள மீனவர் குழு ஒன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த போது அந்த நேரம் கடலில் ஒரு பெட்டி மிதந்து வருவதைகண்டு அந்த பெட்டியை எடுக்க முயற்சி செய்து இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதனை நெருங்க நெருங்க அந்த பேட்டி ஆழ்கடலை நோக்கி செல்வதை அவதானித்தார்கள்   அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது அவர்கள் மீண்டும் கடலில் இருந்து கரைக்கு வரும்போது அந்த பெட்டி கரையை நோக்கி வந்து இருப்பதை அவதானிதார்கள் மீண்டு அந்த பெட்டியை நெருங்கும்போது அந்த பெட்டி ஆழ்கடலை நோக்கி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்

அதில் அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டு இருப்பதை கண்டு
எதற்கும் நாம் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லீகளை அழைத்து வந்து இந்த பெட்டியை எடுப்போம் என்ற எண்ணத்துடன் பக்கத்து கிராம முஸ்லீம்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கின்றார்கள்

முஸ்லீம்கள் கடற்கரையை நோக்கி சென்று கரையை நோக்கி வந்த அந்த பெட்டியை கரைக்கு கொண்டுவந்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஏதோ புதையல் கிடைத்துவிட்டது என்று அந்த பெட்டியை திறந்து பார்க்கின்றார்கள்அவர்களுக்கு ஏமாற்றமே இருந்தது

அந்த பெட்டியில் குங்குமம் வாசனையுடன் ஒரு கபன் இடப்பட்ட ஜனாஸா,மிஸ்வாக் குச்சி, குத்து விளக்கு மற்றும் ஷெய்ஹ் Inaayatullah என்று எழுதிய ஒரு அட்டை இருந்தன
கோபத்துடன் சிங்கள மக்கள் உங்கள் ஊருக்கே கொண்டு போய் இதை அடக்கம் செய்துவிடுங்கள் என வேண்டிக்கொண்டார்கள்
கரைக்கு எடுத்து வந்த அந்த பெட்டியை
அப்பிரதேசத்தில் இருந்து தூக்கி செல்ல முயன்றபோது அவர்களால் அந்த பெட்டியை அசைக்க முடியவில்லை.

சிங்கள மக்களும் சேர்ந்து செய்த முயற்சியாலும் அந்த பெட்டியை அசைக்க முடியாமல் போனது பின்னர்
இந்த ஜனாஸா ஒரு மாபெரும் மகான் ஒன்றின் ஜனாசாவாக இருக்கலாம் என ஊகிக்கின்றார்கள்.இந்த ஜனாஸா இந்த இடத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமாக இருக்கும் என கூற சிறு இடம் கேற்கின்றார்கள்

ஆனாலும் சிங்கள மக்கள் இந்த ஜனாஸா வை இந்த பிரதேசத்தில் அடக்கம் செய்ய ஒரு அங்குலம் கூட இடம் தர மாட்டோம் என காணி உரிமையாளர் கூற முஸ்லீம்கள் நாளை நாம் எமது ஊரு ஜமாத்தினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம் என கூறி

ஊர் முஸ்லீம்கள் கலந்து ஆலோசித்து அந்த ஜனாஸாவை முஸ்லீம் கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வோம் என முடிவு செய்கின்றார்ள்.

என்ன அதிசயம் அதிகாலையிலேயே காணி உரிமையாளர் இன்னும் சிலரும் முஸ்லீம் கிராமத்திற்கு வந்து என்னை காப்பாற்றுங்கள் உடனே வந்து அந்த ஜனாஸாவை எனது காணியில் அடக்கம் செய்யுங்கள் இதற்காக நான் இந்த நான்கு ஏக்கர் காணியை தருகிறேன் என கதறினார் .
உங்களுக்கு என்ன நடந்தது என முஸ்லீம்கள் கேற்க அதற்கு அவர் நேற்று அந்த பெரியார் என் கனவில் வந்து என்னை உனது காணியில் அடக்க செய்ய மறுத்து விட்டாயா என கூறி எனது முதுகில் அடித்தார் என தன் முதுகை காட்டினார்.
பின்னர் முஸ்லீம்கள் அவருக்கு ஆறுதல் கூறி அந்த ஜனாஸாவை அந்த பிரதேசத்தியிலேயே அடக்கம் செய்கின்றார்கள்


இந்த சம்பவம் முஸ்லீம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்தியதாக கூறப்படுகின்றது பின்னர்
முஸ்லீம்கள் அவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே ஒரு சிறிய பள்ளிவாசலையும் நிர்மானிதார்கள் காலப்போக்கில் பள்ளிவாசல் புணர்நிர்மானம் செய்யப்பட்டு ஒரு கேந்திர இஸ்தானமாக இன்றும் இப்பளிவாசல் காட்சியலிக்கின்றது. இன்றும் இந்த சியாரம் அந்த பள்ளிவாசலில் காணக்கூடியதாக உள்ளது

பள்ளிவாசலில் முன்பக்க காணியில் புதைத்த மிசவாக் துண்டு ஒரு நிழல் தரும் மிஷ்வாக் மரமாக இருந்தது.
1914 ஆம் ஆண்டு முஸ்லீம் சிங்கள கலவரத்தில் இப்பள்ளிவாசலுக்கு அநியாயம் செய்யவந்தவர்களுக்கு பல ஆச்சரியம் தரும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் பின்னர் அவர்கள் திரும்பி சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

வெலிகம பிரதேசத்தில் சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட முஸ்லீம் சிங்கள கலவரங்களின் போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இப்பளிவாசளுக்கு எந்த சேதமும் சிங்களவர்களால் செய்ய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பொலிஸ் அதிகாரிகள் கலவரங்கலின் போது இப்பள்ளிவாசளுக்கு பாதுகாப்பு கடமைக்கு செல்லும் போது சிங்களவர்களால் போலீஸ் அதிகாரிகளுக்கு நீங்கள் இந்த பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை இந்த பள்ளிவாசளை நாங்களே பாதுகாப்பு வழங்குவோம் எனவும் கூறப்பட்டுள்ளது

இந்த சம்பவங்களினால் இப்பளிவாசல் மிக பிரசித்தி பெற்ற கேந்திர இஸ்தானமாக வெலிகாமத்தில் திகழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறாக பல அற்புதமான வரலாற்று சம்பவத்தை கொண்டு வெலிகம கப்தரை பள்ளிவாசல் இன்றும் அப்பிரதேச சிங்கள மக்களாலும் கண்ணியமான முறையில் பாதுகாக்ப்பட்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.









WeligamaNews
www.weligamanews.com


Read more »

தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் 15 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது

தென் மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனங்களுக்கான விண்ணப்பங்கள்
தென் மாகாண மற்றும் ஏனைய மாகாணங்களில் இருந்தும்  கோரப்பட்டிருந்தன
தென் மாகாண பாடசாலைகளில் காணப்படும் 314 ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கான
 விண்ணப்பம் கடந்த மாதம் கோரப்பட்டது

இதில் நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனம் எதிர்வரும் 15 ஆம் திகதி தென்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.

தமிழ் ,ஆரம்பக்கல்வி ,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு பாடங்களுக்கான நியமனங்களே 15 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஏனைய பாடங்களுக்கான பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் போட்டி பரீட்சை மூலம் அதிக புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Read more »

வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலை சோதனையிட வந்ததாக கூறிய பாதுகாப்பு படையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள படைவீரர் போலீஸாரால் கைது

இன்று பிற்பகல் 1.45 மணி அளவில் 5 பேர் முச்சக்கர வண்டியில் வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலுக்கு வந்து அங்கு பள்ளிவாசல் இமாமை சந்திக்க வேண்டும் என்பதாகவும் அவரை தாம் முன் கூட்டியே அறிந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். பின்னர் அங்கு சென்ற அப்பிரதேச வாலிபர் அவரின் அடையாள அட்டையை கேட்ட போது அவர் கொடுக்க மறுத்துள்ளார் பின்னர் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அப்பிரதேச மக்கள் பள்ளிவாசலை நோக்கி விரைந்தனர்.   உடனடியாக பொலிஸ் இற்கு தொலைபேசி மூலம் அறிவித்ததை அடுத்து போலீஸ் அப்பிரதேசத்திற்கு வந்த 5 பேரில் 2 பேரை கைது செய்துள்ளனர்.

அடுத்த மூவரும் முச்சக்கர வண்டியுடன் தப்பி ஓடி உள்ளனர் முச்சக்கர வண்டியின் இலக்கம் போலீசார்கு வழங்கப்பட்டுள்ளது.
 ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாதுகாப்பு துறையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு படை வீரர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை வெலிகம போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
Read more »

வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவ படை வீரர் தற்கொலை.


வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவவீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

வெலிகம தெலிஜ்ஜிவில பிரதேசத்தை சேர்த்த 28 வயது மதிக்கத்தக்க இராணுவ வீரரே இவ்வாறு ஆற்றில் குதித்து  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 கடற்படை மற்றும் ஊரு மக்கள் இணைந்து  சடலத்தை தேடும் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணை நடாத்தி வருகின்றனர்

Read more »

இஸ்ரேல் வழியில் செல்லும் ஞானசார தன் செயற்பாட்டை இஸ்ரேல் வழியில் நடத்தப்போவதாக சூளுரைத்துள்ளார் என்ற செய்தி தற் போது வெளியாகியுள்ளது

 இஸ்ரேலில் எவ்வாறு முஸ்லிம்களை அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி அவர்களுக்கு சித்திரைவதை கொடுக்கிறார்களோ அதே வழியில் இலங்கையில் உள்ள  முஸ்லிம்களையும் நடத்தப்போவதாக கூறியதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் தான் செய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
        இஸ்ரேலில் ஆயுதங்களைக் கொண்டு அவர்களை அடக்குகின்றனர் நான் எனது ஊடகங்களைக் கொண்டே இந்த முஸ்லிம்களை அடக்குவேன் என்றும் அதற்காக எனக்கு  ஆதரவாக தயாரான நிலையில் எமக்கு சார்பான ஊடகங்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
           இதற்கு உதாரணமாக ஒரு தொலைக்காட்சியில் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மற்றைய முஸ்லிம் அமைச்சர் மதகுரு மாரை பாய்ந்து பாய்ந்து கேள்விகளைத் தொடுத்தார்.  நானும் அதே நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் ஒரு கேள்வியை கடினமாக  என்னிடம் அவர் கேட்கவில்லை நான் என்ன கதைத்தேனோ அதனையே  அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.  இப்படி பல ஊடகங்களும் அரசாங்கமும் எனக்கு உதவியாக இருக்கும் பொழுது இந்த முஸ்லிம்களை அடிமட்டத்துக்கு கொண்டு போய் விடுவேன் என்றும் அவர் கர்வத்துடன் கூறியுள்ளார்.
    இஸ்ரவேலருக்கு அந்நாட்டு முஸ்லிம்களின் சொத்து உடைமைகளையும் கல்வி அறிவினையும் முடக்கியது போல் இந்நாட்டு முஸ்லிம்களின்  சொத்து பொருளாதாரம் கல்வி உள்ளிட்ட அத்தனையையும் முடக்கி அவர்களை இந்நாட்டின் அடிமைகளாக வைப்பதே எனது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.  இதற்காக வேண்டி எனக்கு  தேவையான அத்தனையையும் தருவதாக பல பெரும்புள்ளிகள் எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
#ஆதங்கம்.
Read more »

தளபதியின் 63’வது படத்தில் 16 நடிகைகள்?


‘தளபதி விஜெயின் 63’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இவ் வருட தீபாவளியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக விஜய் மற்றும் அட்லீ இணைந்துள்ளனர். சென்னையில் இந்த படத்திற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்க்ப்பட்டு பல கோடி செலவில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி விரைகிறது படக்குழு.

இந்த படத்தின் கதை பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா வில்லு படத்திற்கு பின் நடிக்கிறார். யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

சமீபத்தில்தான் தளபதி 63கதை என்னுடைய குறும்பட கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு வந்து சர்ச்சை எழுந்தது. அப்போது படக்குழு தொடர்ந்து 70நாட்கள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தது. அட்லி தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்படத்தில் நடிக்கும் இந்துஜா, “நான் நடிகர் விஜயை பார்த்தேன்” என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்துஜாவுடன் ரெபோ மோனிகாஜான், அத்மிகா மற்றும் வர்ஷா பொல்லம்மா என மொத்தம் 16 நடிகைகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »

ஹுவாய் நிர்வாணம் அமெரிக்கா மீது வழக்கு

ஹுவாவி உற்பத்திகளை பயன்படுத்துவதற்கு அமேரிக்கா விதித்திருக்கும் தடைக்கு எதிராக அந்த தகவல் தொடர்பாடல் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கும் ஹுவாவி, தனது உற்பத்திகள் மீது கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

சுருக்கமான தீர்ப்பு ஒன்றுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த ஹுவாவி, இந்த வழக்கை தொடர தகுதியுள்ளதா என்று நீதிமன்றத்திடம் வரைவான தீர்ப்பு ஒன்றைக் கேட்டுள்ளது. “ஹுவாவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதற்கு அமெரிக்க அரசு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு துப்பாக்கியும் இல்லை புகையும் இல்லை.

ஊகங்கள் மாத்திரமே உள்ளன” என்று ஹுவாவியின் தலைமை சட்ட அதிகாரி சொங் லியுபிங் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க அரசியல்வாதிகள் எம்மை வர்த்தகத்தில் இருந்து வெளியேற்ற விரும்புகின்றனர் என்று தெற்கு சீன நகரான சென்சனில் உள்ள ஹுவாவி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது லியுபிங் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் தனது உற்பத்திகளை தடுக்கும் நிறைவேற்று உத்தரவு ஒன்றுக்கும் ஹுவாவி நிறுவனம் முகம்கொடுத்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஸ்மாபார்ட்போர்ன் ஆண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தியது. எனினும் இந்தத் தடை 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு உபகரண வழங்குநராகவும் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போர்ன் உற்பத்தியாளராகவும் இருக்கும் ஹுவாவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ளது.

ஹுவாவி அமைப்புகளை சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டுவதோடு அதனை ஹுவாவி தொடர்ந்து மறுத்து வருகிறது.
Read more »