Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

குணப்படுத்தக் கூடியதா மூலவியாதி?



Read more »

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்கவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஏராளமான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின்
Read more »

நமது பெண்கள் சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும், வாக்களிக்கச் செல்லாதிருப்பது பாரதூரமானது



"மக்களை குழப்பத்தில் ஆழ்ந்த வேண்டாம்"
நாளை மறு­தினம் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் பிர­சாரப் பணிகள்
Read more »

பாலியல் உறவு மூலம் பரவிய டெங்கு தொற்று


உலகில் முதன் முதலாகப் பாலியல் உறவின் மூலம் டெங்குத் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 41 வயது ஆடவர், மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில் டெங்குத் தொற்றுப் பரவியதாக உறுதிசெய்யப்பட்டது. அவ்விருவரில் ஒருவருக்குக் கியூபாவில் நுளம்புக் கடியின் மூலம் டெங்கு தொற்று ஏற்பட்டது.

அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆடவர், டெங்குத் தொற்று இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரிடம் டெங்கு அறிகுறிகளைக் கண்டபோது மருத்துவர்கள் வியந்தனர்.

பின்னர் இருவரின் விந்தணுக்களைப் பரிசோதனை செய்ததில் கியூபாவில் காணப்படும் டெங்குத் தொற்று இருவருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு காரணமாகத் தென் கொரியாவில் டெங்குத் தொற்று பரவியிருந்ததாக நம்பப்பட்டது. வைரஸ் தொற்றான டெங்கு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் பரவுகிறது.
Read more »

நம் கருமங்கள், எண்ணங்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையா


நாங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு வகையிலான கருமங்களில ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு இறைவணக்க வழிபாடுகளில் கலந்துகொள்கிறோம். எமது நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் உள்ளிட்ட பலருடன் பேசிப்பழகுகிறோம். அவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்கிறோம். இப்படியாக நாம் நாளாந்தம் செய்யும் அலுவல்கள் யாவும் அல்லாஹ்வின் நல்லருளுக்கு உட்பட்டவைகளாக இருக்க வேண்டும்.

அதாவது நாம் செய்கின்ற செய்ய முற்படுகின்ற கருமங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையா இல்லையா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதன்பின் தான் நாம் செயல்களில் இறங்க வேண்டும். அல்லாஹ்வின் மேல் அச்சம் நிறைந்தவர்கள் நிச்சயம் இது விஷயமாகக் கவனம் செலுத்துவார்கள்.

நாம் அல்லாஹ்வுக்காக ஐந்துவேளை தொழுது வருகிறோம். எனினும் இவையாவும் உண்மையான இறைபக்தி இல்லாத நிலையில் ஏதோ கடமைக்காக செய்து வரக்கூடாது. அது அர்த்தமில்லாதது. நாம் தொழுகையில் ஈடுபட்ட போதிலும் இதுபோன்ற மற்றும் வணக்க வழிபாடுகளில் கலந்து கொண்ட போதிலும் அவையாவும் அல்லாஹ்வுக்காகவே செய்கின்றோம் என்ற பயபக்தி உள்ளத்திலே ஆழமாகப் பதிய வேண்டும்.

உள்ளத்திலே வெளிப்படும் எண்ணங்களை எல்லாம் மறந்து விட்டு அல்லாஹ்வின் அச்சம் கொண்டவர்களாக எமது வணக்க வழிபாடுகளை செயல்படுத்த வேண்டும்.

நாம் செய்கின்ற நல்ல கருமங்களுக்கு அல்லாஹ்விடத்தில் நன்மையுண்டு. தீய கருமங்களுக்கு தண்டனையையும் உண்டு என்பதை நாம் நம்புகின்றோம். அதனால் அல்லாஹ்வின் மேல் உண்மையான அச்சம் கொண்டவர்கள் பாவங்கள் செய்வதற்கு முற்பட மாட்டார்கள். அதாவது, அடுத்தவர்களுக்கு அநியாயம் செய்வது, பொய்கூறுவது, பொய் சத்தியம் பண்ணுவது, பிறர் மனதை நோவினை செய்வது பிறர் பொருளை பறிப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, அநாதைகளின் சொத்துக்களை அநீதியாக பயன்படுத்துவது உள்ளிட்ட பாவமான காரியங்கள் செய்வதற்கு அல்லாஹ்வின் மீது அச்சம்- பயம் கொண்டவர்கள் கொஞ்சமும் முன்வர மாட்டார்கள்.

ஆனால், இன்று சமூகத்திலே நடப்பதென்ன? இதுவெல்லாம் எமது நீண்ட தூர சிந்தனைக்கு உட்பட்டதாகும். நாம் எவருக்கும் தெரியாமல் அநியாயங்கள் செய்யலாம். மற்றவர்கள் முன் நல்லவர் போல நடித்தும் விடலாம். எனினும் இந்தச் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வுத்தஆலா கவனிக்கின்றான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதனால் நாம் எந்த வேளையிலும் அலலாஹ்வை நினைத்தவர்களாக அவன் மேல் அன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ஒருமுறை கலீபா உமர் பாரூக் அவர்கள் ஒரு முக்கிய அலுவலக குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியிலே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். அச்சிறுவனுடன் பேச நினைத்த கலீபா அவர்கள், சிறுவனிடம் வந்தார்கள். குதிரை மீது இருப்பவர் கலீபா உமர் என்பது சிறுவனுக்கு தெரியாது “தம்பி இவை யாருடைய ஆடுகள்; இவை எனது எசமானின் ஆடுகள். ஆடுகளில் ஒன்றை விலைக்குத் தருகிறாயா? இதனை உங்களுக்கு விற்க முடியாது; இவை என்னுடையதல்ல. எனது எசமானுக்குரியது. எனக்கு ஓர் ஆட்டை தந்து விடு. எஜமான் கேட்டால் ஓநாய் பிடித்து விட்டதாக சொல். பெரியவரே, நான் எஜமானரிடம் பொய் கூறி ஏமாற்றலாம். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ்வை ஏமாற்ற முடியாதல்லவா? நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன். இந்தச் சிறுவனிடம் இத்தகைய அல்லாஹ்வின் மீது அச்சம் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். இதுதான் இறையச்சம். எங்களுக்கெல்லாம் ஒரு படிப்பினையாகவும் முன்மாதிரியாகவும் இருக்கின்றதல்லவா?

எம். ஏ. அத்தாஸ்
மாத்தறை
Read more »

கற்பதும், கற்பிப்பதும் பர்ளு கிபாய

அறிவு எனும்போது அதனை உலக அறிவு, மார்க்க அறிவு எனும் இரு கூறுகளாக இஸ்லாம் பிரிக்கவில்லை. எமது சமூகத்தவர்கள் 'உலமாக்கள் என்று ஷரீஆ அறிவுகளைக் கற்றவர்களையும், கல்விமான்கள் என்று உலக அறிவுகளை- பொதுக் கல்விகளைக் கற்றவர்களையும் அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குர்ஆனிலோ, ஹதீஸிலோ இப்படியான பிரிவினையைக் காண முடிவதில்லை.

நபி(ஸல்) அவர்கள், கல்வியை ’பயனுள்ள கல்வி’, ’பயனற்ற கல்வி’ என்று மட்டுமே பிரித்திருக்கிறார்கள். ’அல்லாஹ்வே உன்னிடம் நான் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.’’(முஸ்லிம்) என்று அவர்கள் பிரார்த்தித்திருக்கிறார்கள்.

மேலும் ஒருவர் மரணித்ததன் பின்னரும் அவருக்குத் தொடர்ந்தும் நன்மையைப் பெற்றுத்தரும் அம்சங்கள் உள்ளன என்றும் "அவருக்காகப் பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை, ஸதகா அல்ஜாரியா, பயனளிக்கும் அறிவு" ஆகிய மூன்றும் தான் அவை என்றும் கூறினார்கள்.(முஸ்லிம்)


இங்கும்கூட அவர்கள் மார்க்க அறிவு, உலகஅறிவு என்று பிரிக்காமல் 'பயனுள்ள அறிவு’ என்று பொதுவாகவே கூறியிருக்கிறார்கள்.

எனவே, மனித சமூகத்தின் ஈருலக விமோசனத்துக்குத் தேவையானது என கருதப்படும் எந்தவொரு அறிவும் பயனுள்ளதாகவே அமையும். அது மார்க்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ உலக விவகாரங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ அமைந்திருந்தாலும் சரியே. அந்த அனைத்து கல்வி ஞானங்களிலும் ஈடுபடுவதும் கற்பதும் கற்பிப்பதும் தவிர்க்க முடியாத 'பர்ளு கிபாயா'வாக அமையும். குர்ஆன், சுன்னா, பிக்ஹ், அகீதா, ஸீரா போன்ற மார்க்கத்துடன் நேரடியாகத் தொடர்பான துறைகளில் நிபுணத்துவம் மிக்க உலமாக்களை உருவாக்குவது போலவே, வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட அறிஞர்கள், தொழிநுட்பவியலாளர்கள், விஞ்ஞானிகள், ஊடகவியலாளர்கள் போன்ற உலக விவகாரங்களோடு தொடர்பான அறிவுகளில் ஆழமான அறிவு கொண்டவர்களை உருவாக்குவதும் 'பர்ளு கிபாயா'வாகவே கருதப்படும்.

முஹிப்புல் ஹக்
Read more »