கொழும்பு திடீர் தீப்பரவலினால் மெனிங் சந்தை பகுதியில் பதற்றம்



கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தை பகுதியில் இடம்பெற்ற திடீர் தீப்பரவலினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

மெனிங் சந்தை பகுதியின் கட்டடமொன்றில் இன்று (15) முற்பகல் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதேவேளை இந்த தீப்பரவலினால் எந்தவித உயிர் சேதமோ, சொத்து சேதங்களோ ஏற்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more »

VPN பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை


இலங்கையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட போதும் VPN செயலி பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறிய மூவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களிடம் இலஞ்சம் பெறுவதாகவும், அதனை காட்டி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தகவல் பரப்பப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மாத்தறை பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமகாலத்தில் பேஸ்புக் உட்பட சமூகவலைத்தங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் VPN பயன்படுத்தி இந்த சந்தேக நபர்கள் இந்த தகவலை அனுப்பியுள்ளனர்.

இதன் மூலம் இனங்களுக்கு இடையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கும், பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்துவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் 34, 29, 27 வயதுடைய மாத்ததறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VPN பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்புவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read more »

ஏறாவூரில் பதற்றம் தற்போது

ஏறாவூர் காளிகோவில் வீதியில் ( காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை அலியின் மருமகனின் கார் தீக்கிறை இனவாதிகளினால் நாடத்தப்பட்டது.

வீட்டுக்கு பின்புறத்தால் இரண்டு பேர் வந்து பெற்றோல் குண்டு வீசி இருக்கின்றனர் காரை நோக்கி  வீட்டின் உரிமையாளர் எழுந்ததும் இனவாதிகள் தமிழ் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி தப்பி ஓடியுல்லார்கள்-

தற்போது சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுல்லார்கள் -

ஏறாவூரில் எல்லைப்புறங்களில் இருக்கும் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்

Read more »

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!


பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சொலோமன் (Solomon Island) தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகாவில்லை.

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியாவில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்கு
Read more »

சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க, தனியான பொலிஸ் பிரிவு


சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கவென தனியான பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துகளையும் பதிவுகளையும் மேற்கொண்டால், அவசரகால சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


அதேநேரம், சமூக வலைத்தளங்கள் மீதான தடை நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவா நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.


இத்துடன் நான்காவது தடவையாக இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அனைத்தும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட குறுகிய காலத்துக்கான தற்காலிக முடிவு என்றும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கப்படுமா? என்பது தொடர்பில் தினகரன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கே அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.


"நாட்டு நிலைமை அடிப்படையிலேயே உடனடி அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளோம். அசாதாரண சூழ்நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். கண்டியில் இடம்பெற்ற கலவரத்தின்போது முதற் தடவையும் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மூன்று தடவைகளுமென இதுவரை நான்கு தடவைகளுக்கு சமூக வலைத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் குறுகிய காலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட தற்காலிகத் தடை," என்றும் அவர் கூறினார்.


அடுத்த கட்டமாக நாட்டின் நிலவரம் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அனைத்து பிரதேசங்களிலும் அமைதியும் சுமுக நிலையும் ஏற்படுமாயின் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் பேஸ்புக் மீதான தடையை அந்நிறுவனம் கண்டித்துள்ளதா? என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது உத்தியோகப்பூர்வமாக எமக்கு அதுபற்றி எதுவும் அறியத்தரப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
Read more »

வாளுடன் வந்து சபைக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பெண் அரசியல்வாதி - காலியில் சம்பவம்

காலியில் பிரதேச சபைக்குள் வாளுடன் வந்த பெண் அரசியல்வாதியினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இமதுவ பிரதேச சபை இன்று கூடிய வேளையில், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ரேணுகா சஞ்ஜீவனி என்ற பெண் உறுப்பினர் வாள் ஒன்றுடன் உள்நுழைந்தார்.


வாளுடன் உரையாற்ற முயற்சித்த போது, அதற்கு ஏனைய கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பெண்களை பாதுகாத்துக்கொள்ள வாள்கள் வைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தனது பாதுகாப்பிற்காக வாளுடன் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.


இந்த சந்தர்ப்பத்தில் சபையில் இருந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.


இதனையடுத்து சபைத் தலைவர் அந்த வாளை பெற்று வெளியில் எடுத்துச் செல்ல பணித்தார். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன.
Read more »

நவ சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் கைது

நவ சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றத்தடுப்பு பிரிவினர், மீதொட்டமுல்லையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவர் அங்கு இல்லாத நிலையில், வழக்கறிஞர் ஒருவர் மூலமாக டான் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று காலை கைது செய்யப்பட்டிருந்ததுடன், நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Read more »

கல்முனையில் ஏற்பட்ட குழப்பநிலை! பெருமளவான இராணுவம் குவிப்பு

கல்முனையில் சற்று முன்னர் மௌலவி ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்டதை அங்கு பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.


இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வீதியால் வந்த மௌலவி அந்த இளைஞர்களை விசாரித்துவிட்டுச் சென்றுள்ளார்.


அதன் பின்னர் சற்று தொலைவில் சென்று ஏன் அந்த இளைஞர்கள் அங்கு நிற்கின்றனர் என பிறரிடத்தில் வினவிய போதே மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Read more »

நாளை திகன நகரில் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

நாளை சனிக்கிழமை திகன நகரில் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான ஆர்ப்பட்டம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்த கோரிக்கையை அடுத்து  அமித் வீரசிங்கவின் தலைமையில்  நாளை திகன நகரில்  நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தடையுத்தரவு அமித் வீரசிங்கவுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.                     
Read more »

பள்ளிவாயல்களில் இடம்பெறும் சகல பயான்களையும் பதிவு செய்து அனுப்பவும்- அமைச்சர் ஹலீம்


குரோதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு துணைபோகும் விதமாக பள்ளிவாயல்களில் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும், அவ்வாறு இடம்பெற்றதாக கண்டறியப்பட்டால் அதற்கு பள்ளிவாயல் பரிபாலன சபை பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாயல்களில் இடம்பெறும் ஜும்ஆ நிகழ்வுகளையும், வேறு பயான் நிகழ்ச்சிகளையும் சீ.டீ.களில் பதிவு செய்து முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த நீண்ட அறிவித்தலில் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மு)


Read more »