நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்


நாடளாவிய ரீதியில் 40 சுகாதார அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.  
 அத்தோடு க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்கள் மற்றும் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் எதிர்வரும் 02 - 04 ஆம் திகதிவரை புகை விசிறுதல் மற்றும் பாடசாலைகளை சோதனை செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
Read more »

நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்


நாடளாவிய ரீதியில் 40 சுகாதார அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.  
 அத்தோடு க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்கள் மற்றும் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் எதிர்வரும் 02 - 04 ஆம் திகதிவரை புகை விசிறுதல் மற்றும் பாடசாலைகளை சோதனை செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
Read more »

பாகிஸ்தானில் சுமார் 1000 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவிலை திறக்க பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருடம் பழமைவாந்த இந்து கோவிலின் சுத்திகரிப்பு பணிகள் மற்றும் புணர்நிர்மான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் தற்போது திறக்கபடவுள்ளது.

சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்ட இவ் ஆலயம் பிரிவினையின் போது மூடப்பட்டது.

பின்னர் 1992 இல் பாபர் மசூதி இடிப்பின் நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது.

அதன் பிறகு சியால்கோட்டில் உள்ள இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். தற்போது பிரதமர் இம்ரான்கானின் முயற்சியால் மீண்டும் இக்கோவிலின் பராமரிப்பு பணிகள் தொடங்கி விரைவில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Read more »

பாகிஸ்தானில் சுமார் 1000 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவிலை திறக்க பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருடம் பழமைவாந்த இந்து கோவிலின் சுத்திகரிப்பு பணிகள் மற்றும் புணர்நிர்மான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் தற்போது திறக்கபடவுள்ளது.

சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்ட இவ் ஆலயம் பிரிவினையின் போது மூடப்பட்டது.

பின்னர் 1992 இல் பாபர் மசூதி இடிப்பின் நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது.

அதன் பிறகு சியால்கோட்டில் உள்ள இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். தற்போது பிரதமர் இம்ரான்கானின் முயற்சியால் மீண்டும் இக்கோவிலின் பராமரிப்பு பணிகள் தொடங்கி விரைவில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Read more »

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போராட்டம் : ரத்ன தேரர்

மீண்டும் அமைச்சு பதவியினை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அஹிம்சைவழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விரைவாகமாற்றியமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.ராஜகிரியவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு தொடர்பில் அரசாங்கததிற்கு எவ்வித அக்கறையும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே பதவி துறந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்கியுள்ளது.

இச்செயற்பாட்டிற்கு எதிராக அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



Read more »

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போராட்டம் : ரத்ன தேரர்

மீண்டும் அமைச்சு பதவியினை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அஹிம்சைவழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விரைவாகமாற்றியமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.ராஜகிரியவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு தொடர்பில் அரசாங்கததிற்கு எவ்வித அக்கறையும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே பதவி துறந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்கியுள்ளது.

இச்செயற்பாட்டிற்கு எதிராக அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



Read more »

பெயரை மாற்றும் ஞானசார தேரர் ; இது தான் காரணம்

கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயரை சமூக வலைதளத்தின் ஊடாக பயங்கரவாதி என அறிந்ததினால்" ஞானசார" என்ற சொல்லை பேஸ்புக் தடை செய்துள்ளது


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது பெயரை மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளதே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கலகொட அத்தே ஞானசார என்ற பெயரை பேஸ்புக்கில் பதிவிடும் போது அது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயரை மாற்ற தீர்மானித்துள்ளோம். இதனால், இனிவரும் காலங்களில் ஞானசார தேரர், “எமது பிக்கு” என்ற புனைப் பெயரில் அழைக்கப்படுவார் எனவும் டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

ஆத்திரமூட்டும் பயங்கரவாதிகளின் பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. கலகொட அத்தே ஞானசார என்ற வார்த்தை ஆத்திரமூட்டும் வார்த்தை என பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கையில் உள்ள இணைப்பதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவரது பெயர் பதிவிடும் போது அதனை பேஸ்புக் வலைத்தளம் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதாக தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
Read more »

பெயரை மாற்றும் ஞானசார தேரர் ; இது தான் காரணம்

கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயரை சமூக வலைதளத்தின் ஊடாக பயங்கரவாதி என அறிந்ததினால்" ஞானசார" என்ற சொல்லை பேஸ்புக் தடை செய்துள்ளது


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது பெயரை மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளதே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கலகொட அத்தே ஞானசார என்ற பெயரை பேஸ்புக்கில் பதிவிடும் போது அது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயரை மாற்ற தீர்மானித்துள்ளோம். இதனால், இனிவரும் காலங்களில் ஞானசார தேரர், “எமது பிக்கு” என்ற புனைப் பெயரில் அழைக்கப்படுவார் எனவும் டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

ஆத்திரமூட்டும் பயங்கரவாதிகளின் பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. கலகொட அத்தே ஞானசார என்ற வார்த்தை ஆத்திரமூட்டும் வார்த்தை என பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கையில் உள்ள இணைப்பதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவரது பெயர் பதிவிடும் போது அதனை பேஸ்புக் வலைத்தளம் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதாக தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
Read more »

சதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்

GPS உட்பட குறிப்பிடத்தக்க எந்தவொரு தொழிநுட்பமும் இல்லாத இற்றைக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் (20.07.1969) அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்றோங்க் சகோதரர்கள் சந்திரனில்  முதன்முதலாக காலடி வைத்ததாக அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பான புகைப்படங்களும் அபோது வெளியிடப்பட்டு பாட புத்தகங்களிலும் அது பதிவாகி கற்பிக்கப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 384400 km தொலைவிலுள்ள சந்திரனில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் காலடி வைக்க முடிந்த அமெரிக்க விஞ்ஞானத்தால் அதி நவீன தொழிலுட்பம் நிறைந்த இன்றைய காலத்தில் கட்டத்தில் அதே சந்திரனில் நேரடியாக தரையிறங்கி அதில் இருப்பது மண்ணா, கற்பாறையா, வெள்ளியா தங்கமா என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இன்னும் சொல்லப்போனால் சந்திரனில் இருந்தல்ல சந்திரனுக்கு அப்பால் ஒரு 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தேனும் சந்திர மண்டலத்தை குளோஸ்அப் படம் பிடித்து காட்ட முடியவில்லை.

விண்வெளியில் வைத்து அதிநவீன கமெராக்கள் மூலம் பிடித்த படங்களையே இன்னும் எடிற் செய்து கண்பித்து கொண்டிருக்கிறார்கள்.

தனது ஆளுமையை அல்லது வல்லரசை உலகுக்கு பறைசாற்ற இதுபோன்ற திட்டமிடப்பட்ட கதைகளை விஞ்ஞானத்தின் பெயரால் கட்டவிழ்த்து விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.

அப்போது விட்ட கதை போன்று இப்போதும் ஒரு புதிய புதிர் விடப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகிலுள்ள சந்திரனை முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாத விஞ்ஞானம் சந்திரனையும் தாண்டி சுமார்  54.6 மில்லியன் km தொலைவிற்கு அப்பாலுள்ள செவ்வாய் கிரகத்தில் மிக விரைவில் மனிதனை குடியேற்ற போவதாக அறிவித்திருப்பதுதான் மற்றுமொரு புதிர்.

துல்லியமான பல கணிப்புக்களை விஞ்ஞானம் கண்டிருந்த போதிலும் பல புதிர்களுக்கு இதுவரை விடை காணவே முடியவில்லை.

54.6 மில்லியன் km தொலைவிற்கப்பால் உள்ள செவ்வாய் கிரகத்தை அணுகி  ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானம் இங்கு பூமியின் சிறியதொரு பரப்பில் பயணிகளுடன் பறந்து காணாமல் போகும் பல விமானங்களை இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்பதுவும் பாரிய பலவீனம்தான்.

கடந்த சில வருடத்திற்கு முன்னால் ஒரு சில ஆயிரம் அடிகள் உயரத்தில் பறந்து சுமார் 200 பேருடன் காணாமல் போன மலேசிய விமானத்தை அதிநவீன தொழினுட்பங்களுடன் வருட கணக்கில் தேடுதல் நடத்தியும் இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அது கடலில் விழுந்ததா? காட்டிற்குள் விழுந்ததா என்பதை கூட விண்வெளியில் விடப்பட்டிருக்கும் சட்லைட்கள் மூலமேனும் கண்டு பிடிக்க முடியாமல் போனது பெருத்த பலவீனமாகும்.

நில அதிர்வுகள் ஏற்படும் வரையில் அது பற்றி விஞ்ஞானத்தால் எதிர்வு கூறவே முடியாது!

சுனாமி எங்கு எத்தனை மணிக்கு தாக்கும் என்பதையும் துல்லியப்படுத்த முடியாது.

இவ்வளவு நவீன காலத்தில் இத்தனை பலவீங்களை வைத்துக்கொண்டு நவீனமே இல்லாத 50 வருடங்களுக்கு முன்னால் சந்திரனில் கால் பதித்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்ததாக அமெரிக்கா விட்ட கதையை எந்த விஞ்ஞானத்தை வைத்து ஏற்றுக்கொள்வது??

-Almashoora Breaking News
Read more »

தென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தென்மாகாணத்திற்கான தமிழ்மொழி மூலமான பட்டதாரி ஆசிரிய நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகள், பிரயோகப் பரீட்சைகள் நடைபெற்று முடிவடைந்தன நியமனக் கடிதங்கள் எப்போது தான் கிடைக்கப் பெறுமோ என்று ஆவலுடன் காத்திருந்த பட்டதாரிகள் பலரது கனவுகளுக்கு முடிச்சுப் போடும் விதமாகக் கிடைத்தது அந்தச் செய்தி. ஆரம்பக்கல்வி, தமிழ் பாடங்களுக்கு மாத்திரமே அதிகமான பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படுவர் என்பதோடு இன்னும் சில பாடங்களுக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்படும் என்பதே இதன் மூலம் தெரிய வந்தது மீண்டும் இன்னொரு பரீட்சையை கூடிய சீக்கிரமே எதிர்பாருங்கள் என்பதே! ( பின்னர் அதுவே உறுதிப்படுத்தப்பட்டது)

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த (அ)நீதி தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியோருக்கு மட்டுந்தான் என்பது தான். 2014 ஜனவரி க்குப் பிறகு, கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்நியமனத்தில், குறிப்பிட்டுக் கூறக் கூடிய இன்னொரு அதிசயமும் இடம்பெற்றது வயதில் கூடிய பட்டதாரிகளை அதிகமாக உள்ளீர்க்காமல், இன்னும் பட்டமளிப்பு விழா கூட நிறைவுறாத புதிய பட்டதாரிகளை உள்ளீர்த்தமையாகும். இதன்மூலம் புதிய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதை பிழை காண வரவில்லை. அவர்களுக்கு அள்ளாஹ்வினால் நியமித்த நேரம் வர, அவர்களுக்குரியது கிட்டி விட்டது. ஆனால், வருடக்கணக்கில் காத்திருந்தவர்களின் நிலை?? இன்று நாதியற்ற நிலையில் இருக்கின்றனர். பலரது சொல்லம்புகள் அவர்களைப் பதம் பார்த்து வருகின்றன இதற்கு முன்னரும் கூட தென்மாகாணத்தில் பல தடவைகள் மிகச் சூட்சுமமான முறையில் தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் இவ்வாறான அசம்பாவிதங்களும், அத்துமீறல்களும் இடம்பெற்றுள்ளன. ( அதற்கு வழக்கை காரணம் காட்டி மறுத்தது வேறு கதை) தட்டிக் கேட்க நாதியற்றவர்களா நாங்கள் என்று தம்மைத் தாமே கேள்வி கேட்கும் துர்ப்பாக்கியமான நிலை தான் இன்று தென்மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது!ஏனைய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமைக்கான காரணமாக வெற்றிடங்கள் எதுவும் காணப்படவில்லையென்று தக்ஷினபாயவினால் காரணம் கூறப்பட்டது. (தென்மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை எவ்வாறு கணக்கெடுக்கின்றார்கள் என்பது தக்ஷினபாயவில் உள்ள அதிகாரிகளுக்குத் தான் வெளிச்சம்.)

கடந்த 15ம் திகதி நடைபெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனம் வழங்கும் விழாவில் கருத்துத் தெரிவிக்கையில், " தென்மாகாணத்தில் இருப்பவர்கள் வழக்குத் தொடுப்பதில் மிகவும் திறமைசாலிகள்! தென்மாகாண சபைக்கெதிரான எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கைத் தொடுத்ததன் மூலம் தென்மாகாண மாணவர்களுக்கு பாரிய அநியாயம் நிகழ்ந்துள்ளது. இது மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இவ்வாறான வரலாற்றுத் தவறுகள் இனிமேல் இடம்பெறலாகாது. நான் பட்டதாரிகளுக்கு இந்நியமனத்தை வழங்கியதன் மூலம் அவ்வராலாற்றுத் தவறை நிவர்த்திக்க முயற்சி செய்துள்ளேன்" என்று கூறினார். கனம் ஆளுநர் அவர்களே! அவ்வரலாற்றுத் தவறு நீங்கள் நினைப்பது போல் சரிசெய்யப்பட வேண்டுமென்றால், அனைத்துப் பட்டதாரிகளையும் நீங்கள் உள்ளீர்த்திருக்க வேண்டும். குறைந்தது, வயதில் கூடிய பட்டதாரிகளுக்காகவது நீங்கள் நியமனம் வழங்கியிருக்க வேண்டும். அப்போது நீங்கள் கூறிய அவ்வரலாற்றுத் தவறு ஓரளவாவது சீர்பெற்றிருக்கும்

கொஞ்சம் கூட நியாயமற்றதாக தோன்றுகின்ற இந்த நியமனம் தொடர்பில் சரியான தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்புள்ள அரச அதிகாரிகளை அணுகி இது பற்றி வினவிய போது அவர்கள் கூறியது என்னமோ இப்படித் தான்,

"அய்தான் பாருங்களே, ஒருத்தரும் இதப் பத்தி பெய்த்து பேசுறாங்க இல்லையே. பிரின்ஸிபால்மார்ட செல்லி பெய்த்து பேசுங்களே! இல்லாட்டி நீங்க ஊராக்கள் பெய்த்து பேசுங்களே! இப்ப bomb blast க்குப் பொறகு எங்களுக்கு தென ஒண்டு இல்லே ஒபீஸ்ல...

"அட, பேச வேண்டிய ஆளே நீங்க தானே, நீங்களே இப்படி மத்தவன் மேல பொறுப்ப தள்ளி விட்டுட்டு இருந்தா செரியா?" என்று மனசு கேட்க நினைத்தாலும் தத்தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ள தான் இவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனித்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளாமல் இல்லை! என்ன இருந்தாலும் அவனவனுக்கு அவனவன் ஜாப் முக்கியமில்லையா? 20ந் தேதிக்கு சம்பளக் கவர் கிடைச்சாத் தானே குடும்பத்துக்கே சோறு! அவங்க சொல்றதும் வாஸ்தவந்தானே!

அரசியல் சப்போர்ட் இல்லாமல் இவற்றிற்கு எதிராக போராடுவதென்பது மிக மிகக் கஷ்டந்தான் என்பது தான் அநேகருடைய கருத்தாகவும் இருக்கின்றது! அது ஒருவகையில் உண்மையும் தான். சிலவேளைகளில் அவ்வதிகாரங்களும் சாத்தியமற்றவை தான். தேர்தல் காலங்களில் களத்திலிறங்குகின்ற நம் வேட்பாளர்களும் செல்லாக்காசுகளாகி விடுகின்றனர். நாம் தட்டிக் கேட்கவோ, உரிமைகளை வென்றெடுக்கவோ நாதியற்றவர்கள் தான்.

இந்நிலையில் நியமனம் கிடைக்கப் பெறாத அத்தனை பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். இன்னும் ஒன்றரை மாதங்களில் நான் அவர்களுக்கு நியமனம் வழங்குவேன் என கடந்த மாதம் 15ம் திகதி நடைபெற்ற ஆசிரிய நியமன நிகழ்வில் ஆளுநர் வாக்களித்தார். அதற்கொப்ப, நேற்றைய தினம் (2019.07.13) பரீட்சை நடைபெற்றது.

உண்மையிலேயே, அந்தப் பரீட்சைக்குரிய வினாக்களைப் பார்க்கையில், அது பட்டதாரிகளை தோற்றுவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரமா? தோற்றாமலிருப்பதற்காக தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரமா என்ற சந்தேகத்தையே தோற்றுவித்தது. ஏனெனில், அந்தளவுக்கு வினாப்பத்திரத்தின் அமைப்பு அமைந்திருந்து.

1.பந்தி பந்தியாக அமைந்திருந்த வினாக்களை வாசித்து விடை எழுதுவதற்குரிய கால அவகாசம் போதாமலிருந்தமை.

2. மொழிபெயர்ப்புக் குளறுபடி

இவையெல்லாவற்றையும் தாண்டி, இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் எல்லோருக்குமே நியமனம் கிடைக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லையாம். யார் அதிகூடிய புள்ளிகளைப் பெறுகின்றார்களோ, அவர்களுக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படும் என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.( பாடங்களுக்கான ரீதியில் என்றில்லாமல் பொதுவாக பரீட்சையில் சித்தியடைந்த அத்தனை பேருக்கும் நியமனம் வழ்ங்கப்படும் என்று ஒரு தகவலும் கசிந்தது. ஆனால், அத்தகவல் எவ்வளவு தூரம் உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.)

பரீட்சை நிறைவடைய, ஒரு ஆசிரியனாக தன் கனவை எட்டிவிடலாம் என தவிப்புடன் காத்திருந்த பட்டதாரிகளுக்கு இப்பரீட்சை நியாயம் செய்யவில்லை.

ஆக, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தகுந்த தீர்வொன்றைப பெற்றுத் தருமாறு வேண்டுகின்றோம்.

Shazna Nazim
Read more »

வெலிகமையில் மீண்டும் டெங்கு தீவிரம்.. பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்.


வெலிகம பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்
டெங்கு... எப்படிப் பரவும், தடுப்பது எப்படி, சிகிச்சைகள் என்ன..

வெலிகமயில் டெங்கு தாக்கமும், அதுபற்றிய பீதியும் மக்களை நிறையவே அச்சுறுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. வெலிகம மகவீதிய  பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக 26 வயது பெண் மரணம். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் வைத்திய சாலையில் உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, ‘டெங்குவுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை’ என்று ஒரு தரப்பினர் கூறிக்கொண்டிருக்கின்றனர். `சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் டெங்கு வராமல் தடுக்க மட்டுமே முடியும்; காய்ச்சல் வந்த பிறகு அவை பலனளிக்காது’ என்கிறது மற்றொரு தரப்பு. அதேநேரத்தில் ஒவ்வொரு பிரிவு மருத்துவர்களும் தனித்தனியாக, `எங்களது மருத்துவத்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும்’ என்று கூறிவருகிறார்கள். இதுபோன்ற செய்திகள் பொதுமக்களை தெளிவான ஒரு முடிவெடிக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

கொசுக்களால் டெங்கு பரவுவதில்லை’ என்பது போன்ற வதந்திகள் அதிகமாகப் பரவுகின்றன. உண்மையில் டெங்கு என்பது என்ன?"

“டெங்குவின் தாக்கத்தைவிட அது பற்றிய வதந்திகள்தாம் அதிகம். இதுபோன்ற வதந்திகளைக் கேள்விப்பட்டேன். இவையெல்லாம், டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும், மக்களை மென்மேலும் அச்சுறுத்தக்கூடிய ஓர் அபாயகரமான செயல். எனவே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
வெலிகம பிரதேசத்தில் கோரட்டுவை,மதுரப்புரை, புதியதெரு ,மகாவீதிய பெலானை போன்ற பிரதேசத்தில் டெங்கு நோயால் அதிகமாக பாதிக்கபட்துள்ளனர்

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸால் ஏற்படும் காய்ச்சல். இந்த டெங்கு வைரஸ் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய 'ஏடிஸ்' என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.''


``எப்படிப் பரவுகிறது?"

இலங்கையை பொறுத்தவரை, வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இது, டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.


`ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். இந்தக் கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன. உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.''

"ஏடிஸ் கொசு பகலில்தான் கடிக்கும்; நல்ல தண்ணீரில்தான் வளரும் என்கிறீர்கள். எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?"

“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரும்; அவை பகலில் கடிக்கும் தன்மைகொண்டவை என அவற்றின் வாழ்க்கைமுறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்தத் தரவுகளின் அடிப்படையில் இதுதான் உண்மை. ஆகவே, பொதுமக்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.''

“எத்தனை நாள்கள் தண்ணீர் தேங்கி இருந்தால் ஏடிஸ் கொசு வளரும்?"
“டெங்கு நோயைப் பரப்பும் `ஏடிஸ்' வகை கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர ஏழு முதல் பத்து நாள்களாகும்.’’

“ஏடிஸ் கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?"

“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவை முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி பத்து நாள்களில் கொசுக்களாக உற்பத்தியாகின்றன. `ஏடிஸ்' கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.''



“பிற காய்ச்சல்களிலிருந்து டெங்குக் காய்ச்சலை எப்படி அடையாளம் காண்பது, காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?"




“காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஒரு மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து இது 

டெங்குக் காய்ச்சலா அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இதர வகையான காய்ச்சலா என்பதை கண்டறிந்து உரிய சிகிக்சை அளிக்க முடியும்.



மருத்துவரின் ஆலோசனைப்படி காய்ச்சல் மற்றும் உடல்வலியைக் குறைப்பதற்காக 'பாரசிட்டமால்' மாத்திரைகளைச் சாப்பிடலாம். போதுமான ஓய்வு எடுத்து அதிகமான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த மருந்து என்பதில் சந்தேகமில்லை."


``வீட்டிலேயே டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?"


“டெங்குக் காய்ச்சலைப் பொறுத்தவரை, மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆபத்து ஏற்படக்கூடும். ஆகவே, மருத்துவக் கண்காணிப்பில் இருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் முழுமையாக இந்த நிகழ்வுகள் ஏற்படாமல் காப்பாற்ற முடியும். எனவே, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதுதான் நல்லது. அதனால் சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுக வேண்டும்."


“டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது?"
“காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்; மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு ஓய்வெடுத்து, அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்த பிறகு மருத்துவச் சிகிச்சையைத் தாமதமாகப் பெறுதல், சுயமாக மருந்துகள் சாப்பிடுதல், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுதல், குறைவான திரவ உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவை கூடாது.''
“டெங்குவுக்குத் தடுப்பூசி உண்டா?"
“மிகச்சில நாடுகளில் டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் டெங்குவின் தாக்கம் அதிகமாக என்ன காரணம்?"
இலங்கையிலும் டெங்குவின் பாதிப்பு அதிகம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 140 நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் இருக்கிறது. ஆனால், ஏதோ நம் மாநிலத்தில் மட்டுமே டெங்குவின் தாக்கம் அதிகமாக இருப்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

"டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?"
நாளிதழ் விளம்பரங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் இலங்கை  முழுவதும் பேரணி போன்ற டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர்கள்,இலங்கையில் சனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்குப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், சட்டப்படி உரிமையாளர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி (Fever Management Protocol) சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு மற்றும் டெங்குக் காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக செயல்படுத்தவும், தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.''

“பொதுமக்கள் தங்கள் வீட்டில் `ஏடிஸ்' கொசு உருவாகும் தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்றி உதவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். பகல் நேரத்திலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.

காய்ச்சல் குறைந்த பின்னரும்கூட நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்னைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூன்று நாள்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும்.


 டெங்கு இல்லாத இலங்கையை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமை. இந்தப் பணியில் அனைவரும் தமது பங்கை உணர்ந்து செயல்பட்டால் நோய்த் தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த இயலும்."

Read more »

மாடு விற்பனைக்கு இருப்பதாக வந்து மாடுகளை கொள்வனவு செய்யுமாறும் கூறி மாடுகளை வாங்குவாதற்கு வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் மாடு திருட வந்ததாக கூறி போலீசாரால் கைது.

அஹங்கமை பிரதேசத்தில் மாடு விற்பனைக்கு இருப்பதாகவும்  அங்கு வந்து மாடுகளை வாங்குமாறும் கூறிய பின்
 மாடுகளை வாங்குவதற்கு   வந்தவர்களை மாடு திருட வந்தாக கூறி வெலிகம பிரதேசத்தை சேர்ந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் திருமண வைபவம் ஒன்றிற்காக மாடு கொள்வனவு செய்ய சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

தொலைபேசி அழைப்பு மூலமே இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டு குறித்த இரு இளைஞர்களும் மாடுகளை கொள்வனவு செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் மாடுகளை ஒளிவு மறைவு செய்து குறித்த முஸ்லீம் இளைஞர்கள் மீது மாடுகளை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டே பொலிஸ் இல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசாரனையின் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் பல பிரதேசங்களில் இடம்பெற்று வருவதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக முஸ்லீம்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டப்படுகின்ரீர்கள்

ஹஜ் பெருநாள் எதிர் நோக்க இருக்கும் நிலையில் மாடுகள் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் காலம் என்பதாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
Read more »

மாத்தறை ஹம்பாந்தோட்டை புதிய அதிவேக பாதை வேலைகள் இடைநிறுத்தம்.

மாத்தறை ஹம்பாந்தோட்டை புதிய அதிவேக பாதை வேலைகளுக்காக சீன கெதிக்  நிறுவனற்திற்கு இலங்கை அரசாங்கம் 10 மாதகாலமக பணம் செலுத்தாமையினால் சீன நிறுவனம் உடனடியாக நேற்று முதல் 2 ஆம் திகதி முதல் வேலைகளை இடை நிறுத்தியுள்ளது.

கடந்த 10 மாததிற்கான டொலர் 80 மில்லியன் இலங்கை அரசாங்கத்தினால் குறித்த சீன நிறுவனத்திற்கு வழங்கவில்லை.
இதனால் மாத்தறை பெலியத்தை புதிய அதிவேக பாதை வேலைகள் நேற்று 2 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது
வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்கள் பாதை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாத்தரை பெலியத்தை அதிவேக பாதை 30 km தூரத்தை கொண்ட பாதை காபட் இடும் பணிகளின் இறுதி கட்டத்திலே இவ்வாறு வேலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

பாதை நிர்மானிக்கும் பணிகளை அரசாங்கம் மும்முரப்படுத்துமாறு வேண்டிக்கொண்டதை அடுத்து இரவு பகல் பாராது தாம் வேளைகளில் ஈடுபட்டதாக சீன நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் 90 வீதமான வேலைகள் பூர்த்தி செய்யபட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட சீன நிறுவனம் தவிர்ந்த மேலும் 5 உப சீன நிறுவனங்கள் ,மற்றும் இலங்கை நிறுவனம் ஒன்றும் இப்பணியில் இருந்து தற்போது வேளைகளில் இருந்து ஒதுங்கியுள்ளது.

2015  ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டம் இந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்தது.வேலைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டமையினால் ஒரு நாளைக்கு 100 மில்லியன் ரூபாய் சீன நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
 இந்த நஷ்ட ஈட்டு தொகையை இலங்கை அரசாங்கம் செலுத்த நேரிடும் எனவும் அந்த நிறுவனத்தின் செயற்த்திட்ட முகாமையாளர் தெறிவித்துள்ளார்.

என்றாலும் இது தொடர்பாக நேற்று 2 ஆம் திகதி இலங்கை உயர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன இதனை அடுத்து தற்காலிகமாக சில நாற்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட இருந்த  வேலைகளை ஆரம்பிக்க சீன நிறுவனம் முன்வந்துள்ளது.
Read more »