Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!


நாட்டின் சில பிரதேசங்களில் தற்போது டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. இதனை அவ்வப்பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வருகை தரும் காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேநேரம் இந்நாட்டில் இந்நோய்க்கு உள்ளானோரதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகரித்துக் காணப்படுவதாக தொற்றுநோய்கள் பரவுதல் தடுப்புப் பிரிவு மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, கடந்த வருடம் 51,169 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகினர். அவர்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையும் 56,833 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளதோடு, 72 பேர் உயிரிழந்துமுள்ளனர். இதன்படி இந்நோய்க்கு உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் அதிகரித்திருப்பது தெளிவாகின்றது.

அதேநேரம் இவ்வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்கிடையில் இந்நோய்க்கு இவ்வளவு தொகையினர் இப்போதே உள்ளாகியிருப்பதும் உயிரிழந்திருப்பதும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க முடியும் என்ற அச்சம் சுகாதாரத் துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், கடந்த சில வாரங்களாக தொடராக மழை பெய்து வருவதோடு நாட்டின் பல பிரதேசங்களின் தாழ்நிலங்களிலும் வெள்ள நி​ைலமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக டெங்கு நோயைக் காவும் நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதற்கு பெருமளவிலான நீர் தேவைப்படுவதில்லை. மாறாக, வீட்டிலும் சுற்றாடலிலும் காணப்படுகின்ற அப்புறப்படுத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பொலித்தீன் உறைகள் போன்ற பொருட்களில் தேங்கும் சொற்பளவு தெளிந்த நீரே போதுமானது.

அதன் காரணத்தினால் வீட்டிலும் சுற்றாடலிலும் மழைநீர் அடங்கலான தெளிந்தநீர் தேங்கக் கூடிய வகையில் எவ்வித பொருட்களும் காணப்படாத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென தொற்றுநோய் பரவுவதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் நாட்டில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் மழைநீர் தேங்கி நுளம்புகள் பெருகுவதற்குரிய வாய்ப்பைக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டெங்கு நோயானது, தனியே சுகாதாரப் பிரச்சினை அல்ல. அது சமூக மற்றும் சுற்றாடல் பிரச்சினையும் கூட. இதனை தனியே மருத்துவர்களால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக பொதுமக்களதும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும்.

அந்தவகையில், இந்நோய்க்கு கடந்த வருடம் உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்ட போதிலும், அவ்வருடம் மார்ச், ஏப்ரல், மே, ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகிய மாதங்களில் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், இவ்வருடம் ஏப்ரல் மாதம் தவிர்ந்த ஏனைய எல்லா மாதங்களிலும் இந்நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது. இது ஆரோக்கியமான நிலைமையல்ல.

அதேநேரம் தற்போது தொடராகவும் அடிக்கடியும் மழை பெய்து வருவதானது டெங்கு நுளம்புகளின் பெருக்கத்துக்கும் டெங்கு நோய் மேலும் பரப்புவதற்கும் வாய்ப்பாக விளங்குகின்றது. அதன் காரணத்தினால் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்கக் கூடிய கைவிடப்பட்ட மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், சொப்பிங், பொலித்தீன் உள்ளிட்ட சகல திண்மக் கழிவுப் பொருட்களையும் தெளிந்தநீர் தேங்க முடியாதபடி அப்புறப்படுத்துவது இன்றியமையாததாகும். இவ்விடயத்தில் ஒவ்வொரு குடிமகனும் விசேட கவனம் செலுத்தவேண்டும். அதனை ஒரு சமூகப் பொறுப்பாக கருதி செயற்படுவது அவசியமானது. அப்போது டெங்கு நுளம்புகள் பெருக முடியாத நிலைமை ஏற்படுவதோடு அது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஆற்றுகின்ற நன்மையாகவும் அமையும்.

மேலும் இக்காலப் பகுதியில் எவருக்காவது காய்ச்சல், தலையிடி, உடல் வலி போன்றவாறான அறிகுறிகள் காணப்பட்டால் தாமதியாது மருத்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்நோய்க்கு உள்ளானவர்களை ஆரம்ப கட்டத்திலேயே இனங்கண்டு உரிய சிகிச்சையளிக்கும் போது இந்நோயை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும். அத்தோடு டெங்கானது முழுமையாக தவிர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு நோய் என்பதையும் மறந்து விட முடியாது.

ஆனால், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்பில் கவனயீனமாகவும் அசிரத்தையாகவும் நடந்து கொள்வது நோய் தீவிரமடையவும், உயிராபத்துக்கு முகங்கொடுக்கவும் வழிவகுக்க முடியும். அதுவே மருத்துவர்களது அபிப்பிராயமாக உள்ளது.

ஆகவே, நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற வகையிலான காலநிலை தற்போது நிலவி வருவதால் வீட்டையும் சுற்றாடலையும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்காதபடி சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதனை ஒரு பொறுப்பாகவும் கருதி செயற்படுவது அவசியம். அப்போது டெங்கு நோய் ஒரு அச்சுறுத்தலாகவோ ஆபத்தாகவோ இருக்காது என்பது திண்ணம்.
Read more »

10 ஆண்டுகளில் 13 ஆவது சம்பவம் 12 குழந்தைகளில் 2 குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்பு


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 13ஆவது ஆழ்துளை கிணறு விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இவ்விபத்து திருச்சி மாவட்டத்தின் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் நடந்துள்ளது. சுமார் 400 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தையொன்று விழுந்துள்ளது.

தமிழக அரசும் உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த ஆழ்துளை கிணறு விபரீதம் குறித்த விவரம் வருமாறு:

இதேபோன்று 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்தான். அதே ஆண்டு ஓகஸ்ட் 27ம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.

2011 செப்டம்பர் 8ஆம் திகதி நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.

2012ம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா தம்பதியின் குழந்தை குணா (3) ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

2013 ஏப்ரல் 28ஆம் திகதி கரூர் அருகே ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.

2014 ஏப்ரல் 5ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.

அதே ஏப்ரல் 5ஆம் திகதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.

அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

அதே ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இந் நிலையில் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

2018ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் தொடர் கதையாகவே உள்ளது.
Read more »

செவ்வாயில் உப்பு ஏரி


பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள கேல் கிரேட்டர் எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை கியுூரியோசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில், பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும், அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந்தப்புலத்தை இழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கிரகத்தின் வளிமண்டலம் மீது சூரிய காற்று மற்றும் கதிர்வீச்சுகள் பட்டு, அது மென்மையாகி, தண்ணீரை தக்க வைக்க முடியாமல் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more »

தன்னை பற்றி சிந்திக்க வேண்டிய 'மனிதன்'

அண்டசராசரங்கள் அத்தனையையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருப்பவன் தான் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ். அவனது படைப்புக்களில் மலக்கு, ஜின், மனிதன் ஆகியன மிக முக்கியமானவை. அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்தும் அவனை வணங்கி வழிபடுவதற்காகவும் புகழ்ந்து துதிப்பதற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளன. அந்தடிப்படையில் அனைத்து படைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை ஸுஜுது செய்த நிலையில் வணங்கி புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஜின்களும், மனிதனும் அல்லாஹ் வை வணங்கி வழிப்பட வேண்டியவர்கள். இதனை அல்லாஹ் தெளிவாகக் கூறி வைத்திருக்கின்றான்.

'ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்காகவன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை'.

(அல் குர்அன் 51:56)

இதன்படி ஜின்களும் மலக்குகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மிகவும் தெளிவானது. அல்லாஹ்வின் அந்த நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டியது இப்படைப்புக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்த படைப்புக்களில் மலக்குகளை ஒளியினாலும், ஜின்களை நெருப்பினாலும், மனிதனை மண்ணினாலும் அல்லாஹ் படைத்திருக்கின்றான். அதேநேரம் மனிதனுக்கு ஆறு கட்டங்களைக் கொண்ட வாழ்வொழுங்கையும் அவன் வழங்கியுள்ளான்.

அதாவது
1. ஆலமுல் அர்வாஹ்
2. தாயின் வயிறு
3. உலக வாழ்வு
4. கப்று வாழ்வு
5. மஹ்ஷர் மைதானம்
6. சுவர்க்கம் அல்லது நரகம்.

இவற்றில் உலக வாழ்வு கட்டம் மிகவும் முக்கியமானதும் பெறுமதி மிக்கதுமாகும். இது கெட்டியான உடலமைப்பையும் பகுத்தறிவையும், சுய தெரிவு சுதந்திரத்தையும் மனிதன் பெற்றுக்கொண்டுள்ள வாழ்வுக்கட்டமாகும். அதேநரம் இந்த உலக வாழ்வு கட்டத்தின் போது மலக்குகளையோ ஜின்களையோ மனிதனால் பார்க்கவோ தொட்டுணரவோ முடியாது. ஆனால் மலக்குகளும் ஜின்களும் மனிதனை பார்ப்பர்.

மேலும் அல்லாஹ்தஆலா தன் கரங்களால் படைத்த இம்மனிதனை மிகவும் அழகாகப் படைத்துள்ளான். இதனை அவன் தன் அருள்மறையாம் அல்குர்ஆனில், 'அத்தியின் மீதும், சைத்தூன் மீதும், அபயமளிக்கும் நகர் மீதும் சத்தியம் செய்து நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.' (அல் குர்ஆன் 95: 01 -– 04) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

அதேநேரம் அல்லாஹ் மனிதனுக்கு நீண்ட நெடியதொரு வாழ்வுக்கட்டத்தை வழங்கியுள்ளான். அது தனியே உலக வாழ்வு கட்டத்தோடு மாத்திரம் முற்றுப்பெறுவதுமல்ல. வரையறுக்கப்பட்டதுமல்ல. ஆனால் மனிதன் பெற்றுக்கொண்டுள்ள நீண்ட வாழ்வில் உலக வாழ்வு கட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்வு கட்டம் தவிர்ந்த வேறு எந்த வாழ்வுக்கட்டங்களிலும் பகுத்தறிவோ, தெரிவுச் சுதந்திரமோ, சுய இயங்குநிலையோ மனிதனுக்கு வழங்கப்படவில்லை. அதனால் இந்த உலக வாழ்வு கட்டத்தை மனிதன் உரிய முறைப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வின் எதிர்பார்ப்புக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப நேரான பாதையில் தாம் படைக்கப்பட்டிருக்கும் நோக்கத்தை நோக்கி அவனால் பயணிக்க முடியும்.

இருப்பினும் தன் படைப்புக்களில் ஒன்றான மனிதனைப் பற்றியும் அல்லாஹ் நன்கறிந்தவனாவான். அதனால் அவன் மனிதனின் விமோசனத்திலும் சுபீட்சத்திலும் அதிக அக்கரையும் கருணையும் இரக்கமும் கொண்டிருக்கின்றான். அதனால் உலகில் மனிதன் வாழத் தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பூமியையே அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இதனை அவன் தன் அருள்மறையில், 'அவன் தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். (அல் குர்ஆன் 02:29) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

அதேநேரம், 'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களுக்கு பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களையும் ஏற்படுத்தினோம். (அல் குர்ஆன் 07:10) என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றான்.

அத்தோடு முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் காலத்திற்கு காலம் மனிதர்களில் இருந்து இறைத்தூதுவர்களை தெரிவு செய்து அவர்கள் ஊடாக மனிதனுக்குரிய நேர்வழிகாட்டல்களை உலகிற்கு அருளி அவன் வழிகாட்டி வந்தான். ஆனபோதிலும் ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் நடைமுறையில் இருந்து வந்த இந்நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் நேர்வழிகாட்டக்கூடிய அல் குர்அனை பிரதான மூலாதாரமாகக் கொண்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியை முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகிற்கு அருளி அவன் நடைமுறைப்படுத்தி காட்டி வைத்திருக்கின்றான். அது உலகம் இருக்கும் வரையும் எல்லா கால, இட சூழலுக்கும் ஏற்ற வகையிலான உயிரோட்டம் மிக்க வாழ்க்கை நெறியாகவும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரே நேர்வழிகாட்டலாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு தன் படைப்பான மனிதனின் சுபீட்சம் விமோசனத்திற்காக ஏற்பாடுகளை செய்து வைத்துள்ள அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைத்த போது உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஆதம் (அலை) அவர்களது அனைத்து சந்ததிகளதும் ஆன்மாகளையும் ஆலமுல் அர்வாஹ்வில் ஒன்று திரட்டினான். அங்கு, 'நான் உங்களது ரப் இல்லையா? என அல்லாஹ் வினவ 'ஏன் இல்லாமல் நீ தான் எங்கள் ரப்' என அவர்கள் கூற அவர்களையே (மனிதர்களை) சாட்சிகளாக ஆக்கி வைத்திருக்கின்றான்.

இதனை அவன் தன் அருள்மறையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றான்.

'நபியே..! உங்கள் இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களது சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) நான் உங்கள் இறைவனாக இல்லையா? என்று கேட்டத்திற்கு ஏன் இல்லை. நீ தான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம் என்று அவர்கள் கூறியதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ஏனென்றால் (இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதனை (மறந்து) விட்டு பராமுகமாகி இருந்தோம் என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், (அல் குர்ஆன் 7:172)

இவ்வசனத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ள இமாம் தபரி (ரஹ்) அவர்கள் ஜுவைபிர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டதாவது, 'ளஹ்ஹாக் பின் முஸாஹிம்(ரஹ்) அவர்களது ஆறு நாள் மகன் இறந்துவிட்டார். அப்போது அவர் என்னிடம் ஜாபிரே..! என் மகனை அவரது குழியில் (கப்றில்) வைக்கும் போது அவரது முகத்தைத் திறந்து வையுங்கள். அவரது முடிச்சுக்களை அவிழ்த்துவிடுங்கள். ஏனெனில் அவர் உட்கார வைக்கப்பட்டு கேட்கப்படுவார் என்று கூறினார்கள். நான் அவர் சொன்னபடியே செய்தேன்.

அடக்கம் முடிந்த பின்னர் அவரிடம் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக..! உங்கள் மகனிடம் எதைக் குறித்து கேட்கப்படும். அவரிடம் யார் கேள்வி கேட்பார்? என வினவினேன். அதற்கு அவர் ஆதம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி குறித்து கேட்கப்படும் என்று கூறினார்கள். அப்போது நான் அபுல் ஹாசிம் அவர்களே..! ஆதம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி எது? என வினவினேன். (அடுத்த வாரம் நிறைவுறும்)
Read more »

எதிர்காலத்தில் மூளப்போவது நீருக்கான போர்!

உலகம் எதிர்காலத்தில் போர் ஒன்றைச் சந்திக்குமாகவிருந்தால் அது நீருக்கான போராகத்தான் இருக்கும். சூழலை துவம்சம் செய்யும் மனிதர்களால் இந்தப் போரை வெல்வது சுலபமானதுமல்ல.

உலகம் வெகுவிரைவில் தனது இயல்பு நிலையில் இருந்து மாறிவிடப் போகின்றது. மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் இந்தப் பூமியை விரைவாக அழித்து விடும் என்பதில் ஐயமில்லை.

என்னதான் விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகளவில் ஏற்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் அதனை கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை.இது குறித்து பூமியையும், இயற்கையினையும் நேசிக்கும் அநேகமான உள்ளங்கள் கவலைப்படுகின்றன.

பசுமை நிறைந்த சூழல்கள் வரண்ட தேசங்களாக மாறிப் போயிருக்கின்றன. பச்சை வீட்டுத் தாக்கம் என்னும் விடயத்தை அழுத்திச் சொல்லும் அளவுக்கு சூழல் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.சூழலில் உள்ள மரம், செடி, கொடிகள் அழிக்கப்பட்டு வெறுமையான சூழலுக்குள் மனிதர்கள் விரும்பியே விழுந்து கொண்டுள்ளனர். அதன் பிற்பாடு ஏற்படுகின்ற சூழிலியல் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

காடுகளை அழித்து வீடுகளை நிர்மாணிக்கத் தொடங்கியதன் விளைவு, சூழல் தனது சமநிலையை இழக்கத் தொடங்கியது. காடுகளில் வாழ்கின்ற விலங்குகள், ஊர்வன வீடுகளைத் தேடி வரத் தொடங்கின. யானைகள் வெகுவாக உயிர் இழப்புகளுக்கு ஆளாகின. இதனால் காடுகளின் பரப்பு குறையத் தொடங்கிற்று.

இந்த சூழலின் சமநிலைப் பாதிப்பு பற்றி எவரும் சிந்திக்கத் தயாரில்லை. தாம் வாழ்கின்ற சூழலே இவ்வாறெனில், தமது சந்ததிகளுக்கு எதனை விட்டுவிட்டு செல்லப் போகின்றோம் என்றும் மனிதன் நினைப்பதாயில்லை.





விடயம் இவ்வாறிருக்க, நீருக்கான கேள்வியும் அதனை விட பல்மடங்காகியுள்ளது. முன்னொரு காலத்தில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கிணறு என வழிகளிலும் மக்கள் தங்களுக்குத் தேவையான நீரை மிகச் சுலபமாக, இலவசமாகப் பெற்றுக் கொண்டனர். ஆனால் சூழலை துவம்சம் செய்து நீர்நிலைகளை அழித்து வாழ்விடங்களை நிர்மாணிக்கத் தொடங்கியதன் விளைவு இன்று பணம் கொடுத்து நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு தேசத்தில் வரட்சி நிலவுவதற்குக் காரணம் அங்குள்ள இயற்கைச் சமநிலையில் ஏற்படுகின்ற மாற்றமே. இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்த எழில்மிகு தேசம். அவ்வாறிருக்ைகயில் வரட்சி எங்கிருந்து வந்தது? எப்போது காடுகளை அழிக்க முற்பட்டனரோ அன்றே வரட்சி வாட்டி வதைக்கத் தொடங்கிற்று. காடுகளில் உள்ள குளங்கள், ஏரிகளும் சேர்த்தே நாசம் செய்யப்பட்டன.

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத்தான் மற்ற உபயோகங்களுக்கான தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை மக்கள் பயன்படுத்தினார்கள். இது 1980இல் 45சதவீதமாகவும், 1990இல் 65சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை மொத்த நீரில் 80சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால் நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது.

நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள்தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள்,இரசாயனப் பொருட்கள், எண்ணெய்ப் பதார்த்தங்கள்,வர்ணங்கள் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கைத் தன்மையே மாறுகிறது. வீட்டுக் கழிவறைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது.

இன்றைய காலத்தில் பணம் இருந்தும் சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்ள முடியாத சிக்கல் நிலை உள்ளது. பூமி 71சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த நீரில் உப்பு நீரே அதிகம். 2.5சதவீதம் நீர் மட்டுமே நன்னீர். உலகில், 0.08சதவீதத்துக்கும் குறைவான நன்னீரை மட்டுமே மனிதனால் பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50நாடுகளை 1999இல் ஐ.நா அறிவித்தது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. நீரைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரினதும் கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சூரியஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த நாடுகள் முன்வர வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம், நீர்த்தெளிப்பு போன்றவற்றை பயன்படுத்தி தண்ணீரைச் சேமிக்கும் திட்டங்கள் கிராம மட்டங்களில் இருந்து அறிமுகப்படுத்தப்படுதல் அவசியம்.
Read more »

இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய உரிமைகள்


இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய அனைத்த உரிமைகளையும் இஸ்லாம் நிறைவாக வழங்கியுள்ளது. ஆரம்பமாக தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை அது பெண்ணுக்கு வழங்கியுள்ளது.

'ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாது. கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது' என்பது நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது 'அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும்' என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள்' (புகாரி, அஹ்மத்)

'ஒரு விதவை அவளது பொறுப்புதாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மானிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும்' (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். (புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நபியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்திற்கு மாற்றமாக தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத – தனக்கு திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க வலி| முனைகின்ற போது அதனை மறுக்கின்ற – நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் தகப்பனோ அல்லது வலி| ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.

ஏலவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும்.

Read more »

முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு! எம்.வீ. பாத்திமா ஹப்ஸா சலாஹிய்யா சர்வதேச பாடசாலை, வெலிகம.


ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்' என நபிகளார் தெரிவுத்துள்ளார். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை 'ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு' என்ற வரிகளின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

இதனால் வாராந்தம் நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்தம் நோற்கக்கூடிய 13, 14, 15அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதே போன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27, 28, 29நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பை பெற முயலவேண்டும்.

 ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். நபிகளார் (ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:





'ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்'. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தௌபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்' (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள் அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செ;யது, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும். ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனிதகுல சுபீட்சத்துக்கும் நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

Read more »

சதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்

GPS உட்பட குறிப்பிடத்தக்க எந்தவொரு தொழிநுட்பமும் இல்லாத இற்றைக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் (20.07.1969) அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்றோங்க் சகோதரர்கள் சந்திரனில்  முதன்முதலாக காலடி வைத்ததாக அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பான புகைப்படங்களும் அபோது வெளியிடப்பட்டு பாட புத்தகங்களிலும் அது பதிவாகி கற்பிக்கப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 384400 km தொலைவிலுள்ள சந்திரனில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் காலடி வைக்க முடிந்த அமெரிக்க விஞ்ஞானத்தால் அதி நவீன தொழிலுட்பம் நிறைந்த இன்றைய காலத்தில் கட்டத்தில் அதே சந்திரனில் நேரடியாக தரையிறங்கி அதில் இருப்பது மண்ணா, கற்பாறையா, வெள்ளியா தங்கமா என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இன்னும் சொல்லப்போனால் சந்திரனில் இருந்தல்ல சந்திரனுக்கு அப்பால் ஒரு 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தேனும் சந்திர மண்டலத்தை குளோஸ்அப் படம் பிடித்து காட்ட முடியவில்லை.

விண்வெளியில் வைத்து அதிநவீன கமெராக்கள் மூலம் பிடித்த படங்களையே இன்னும் எடிற் செய்து கண்பித்து கொண்டிருக்கிறார்கள்.

தனது ஆளுமையை அல்லது வல்லரசை உலகுக்கு பறைசாற்ற இதுபோன்ற திட்டமிடப்பட்ட கதைகளை விஞ்ஞானத்தின் பெயரால் கட்டவிழ்த்து விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.

அப்போது விட்ட கதை போன்று இப்போதும் ஒரு புதிய புதிர் விடப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகிலுள்ள சந்திரனை முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாத விஞ்ஞானம் சந்திரனையும் தாண்டி சுமார்  54.6 மில்லியன் km தொலைவிற்கு அப்பாலுள்ள செவ்வாய் கிரகத்தில் மிக விரைவில் மனிதனை குடியேற்ற போவதாக அறிவித்திருப்பதுதான் மற்றுமொரு புதிர்.

துல்லியமான பல கணிப்புக்களை விஞ்ஞானம் கண்டிருந்த போதிலும் பல புதிர்களுக்கு இதுவரை விடை காணவே முடியவில்லை.

54.6 மில்லியன் km தொலைவிற்கப்பால் உள்ள செவ்வாய் கிரகத்தை அணுகி  ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானம் இங்கு பூமியின் சிறியதொரு பரப்பில் பயணிகளுடன் பறந்து காணாமல் போகும் பல விமானங்களை இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்பதுவும் பாரிய பலவீனம்தான்.

கடந்த சில வருடத்திற்கு முன்னால் ஒரு சில ஆயிரம் அடிகள் உயரத்தில் பறந்து சுமார் 200 பேருடன் காணாமல் போன மலேசிய விமானத்தை அதிநவீன தொழினுட்பங்களுடன் வருட கணக்கில் தேடுதல் நடத்தியும் இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அது கடலில் விழுந்ததா? காட்டிற்குள் விழுந்ததா என்பதை கூட விண்வெளியில் விடப்பட்டிருக்கும் சட்லைட்கள் மூலமேனும் கண்டு பிடிக்க முடியாமல் போனது பெருத்த பலவீனமாகும்.

நில அதிர்வுகள் ஏற்படும் வரையில் அது பற்றி விஞ்ஞானத்தால் எதிர்வு கூறவே முடியாது!

சுனாமி எங்கு எத்தனை மணிக்கு தாக்கும் என்பதையும் துல்லியப்படுத்த முடியாது.

இவ்வளவு நவீன காலத்தில் இத்தனை பலவீங்களை வைத்துக்கொண்டு நவீனமே இல்லாத 50 வருடங்களுக்கு முன்னால் சந்திரனில் கால் பதித்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்ததாக அமெரிக்கா விட்ட கதையை எந்த விஞ்ஞானத்தை வைத்து ஏற்றுக்கொள்வது??

-Almashoora Breaking News
Read more »