தயவுசெய்து வாக்களிப்பை தவிர்க்காதீர்கள், அது அபாயகரமான நிலையாகும்





வடக்கின் வாக்காளர்கள், வாக்களிப்பில் இருந்து விலகியிருக்கக் கூடாது என்று தேர்தல்
கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

Read more »

நமது பெண்கள் சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும், வாக்களிக்கச் செல்லாதிருப்பது பாரதூரமானது



"மக்களை குழப்பத்தில் ஆழ்ந்த வேண்டாம்"
நாளை மறு­தினம் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் பிர­சாரப் பணிகள்
Read more »

இனவாத நோக்குடன் முஸ்­லிம்களுக்கு, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை - உடனடியாக தபாலகங்களை நாடுங்கள்


தபாலகங்கள் இனவாத நோக்குடன், முஸ்­லிம்களுக்கு சில பிரதேசங்களில், வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Read more »

தேர்தல் முடிந்ததும் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாராம் மஹிந்த தேசப்பிரிய

ஜனா­தி­பதி தேர்தல் முடிந்­த­வுடன் பதவி வில­கப்­போ­வ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.
Read more »

முஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது

1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளான வெலிகம, பேருவளை மற்றும் தர்கா டவுன் ஆகியவை அதிக அளவில் வெடிபொருட்களால் தாக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய  முன்னாள் புலனாய்வு துறை பிரதானியான சுரேஷ் சலே இன்று இரவு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மேற்கண்ட தகவல்கள் இந்திய உளவுத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி பேரணிகள் நாளை நடைபெறவுள்ளதால் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.lankanewsweb.net/67-general-news/51443-Bomb-threat-in-Muslim-areas:-Indian-Intelligence-confirms
Read more »

பாலியல் உறவு மூலம் பரவிய டெங்கு தொற்று


உலகில் முதன் முதலாகப் பாலியல் உறவின் மூலம் டெங்குத் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 41 வயது ஆடவர், மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில் டெங்குத் தொற்றுப் பரவியதாக உறுதிசெய்யப்பட்டது. அவ்விருவரில் ஒருவருக்குக் கியூபாவில் நுளம்புக் கடியின் மூலம் டெங்கு தொற்று ஏற்பட்டது.

அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆடவர், டெங்குத் தொற்று இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரிடம் டெங்கு அறிகுறிகளைக் கண்டபோது மருத்துவர்கள் வியந்தனர்.

பின்னர் இருவரின் விந்தணுக்களைப் பரிசோதனை செய்ததில் கியூபாவில் காணப்படும் டெங்குத் தொற்று இருவருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு காரணமாகத் தென் கொரியாவில் டெங்குத் தொற்று பரவியிருந்ததாக நம்பப்பட்டது. வைரஸ் தொற்றான டெங்கு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் பரவுகிறது.
Read more »

முகத்தை மூடி வர தடையில்லை; வாக்களிக்க முகம் காட்ட வேண்டும்



தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்ளவர்களாக இருந்தால் முகத்தை மூடி வரலாம். ஆனால் வாக்களிப்பு நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு முகத்தை திறந்து அடையாளப்படுத்தினால் போதுமானது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (9) காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, வாக்களிக்கவுள்ள வாக்குச் சீட்டு வழமையை விட அளவில் பெரியதாக இருப்பதால் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் அச்சிடப்பட்ட அறிவுறுத்தல்களை நன்றாக கவனித்து, வாக்களிக்க தீர்மானித்துள்ள வேட்பாளர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை தீர்மானம் எடுத்துக்கொண்டால் வாக்களிக்கும் போது நேர விரயம் மற்றும் வீண் சிரமங்களை தவிர்க்க முடியும்.

அத்தோடு தேர்தல் காலத்தில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிரிவினைகள், முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்வதும், தேர்தல் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே வேட்பாளர்கள் அல்லது அவர் சார்ந்தவர்கள் முடிவு என்ற பெயரில் அறிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் உட்பட சம்மேளன உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read more »

அகில இலங்கை ரீதியில் ஸதாத் பாடசாலை மாணவி M.S.F. ஸீபா சாதனை.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிங்கள தின வாசிப்புப் போட்டியில்

கொடபிடிய ஸதாத் மகா வித்தியால தரம் 7ஐ சேர்ந்த M.S.F. ஸீபா என்ற மாணவி சாதனை படைத்து போர்வைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
(10.11.2019) கல்வி அமைச்சில் நடைபெற்ற இப் போட்டியில் 9 மாகணங்களை சேர்ந்த 18 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் தென் மாகாணம் சார்பாக கலந்து கொண்ட மாணவர்களில் ஒருவரே ஸாதாத் மகா வித்தியால மாணவி ஸீபா ஆவார். இவர் போர்வைச் சேர்ந்த சியாம் ரினாஸா தம்பதியின் சிரேஷ்ட புதல்வியாகும்.

Ibnu Asad


இப்னு அஸாத்
Read more »

18ஆம் திகதிக்கு விமானச்சீட்டு பதிவு செய்த கோத்தபாய! வெளிவரும் ஆதாரங்கள்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிட்டப்படட் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்வதற்கான விமானப் பயணச் சீட்டையும் முன்பதிவு செய்துள்ளார்.

கோத்தபாய எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இலக்கம் EK649 என்ற விமானத்தில் 18 ஆம் திகதி அதிகாலை 2.55 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்படும் அவர் அதிகாலை 5.55 மணிக்கு துபாய் செல்ல உள்ளார்.

அதன் பின்னர் அன்றைய தினமே இலக்கம் EK215 விமானத்தில் முற்பகல் 8.30 மணிக்கு துபாயில் இருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். அந்த விமானம் 18 ஆம் திகதி பிற்பகல் 1.50க்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தனக்கு நெருக்கமான அனைத்து கருத்து கணிப்புகளும் கோத்தபாய ராஜபக்ச, தேர்தலில் வெற்றி பெற இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு சுட்டிக்காட்டியுள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படும் விமானப் பயணச் சீட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் அவரது வேகமாக பகிரப்பட்டு வருவதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

ගෝටා ඇමරිකා පනින්න සියල්ල සූදානම්… මෙන්න විස්තරේ…
 November 9, 2019
ජනාධිපතිවරණයේ මැතිවරණ ප්රතිඵල නිකුත් කිරීමෙන් පසු වත්මන් ජනාධිපති අපේක්ෂක ගෝඨාභය රාජපක්ෂ මහතා එළෙඹෙන 18 වනදා ඇමරිකා එක්සත් ජනපදය බලා පිටත්ව යාම සඳහා මේ වනවිට සියලුම සැලසුම් සකස් කර ඇති බව වාර්තා වේ.
ඔහු මේ වනවිට ඊට අදාළ ගුවන් ටිකට් පත්ද වෙන්කරගෙන ඇත.
ගෝඨාභය රාජපක්ෂ මහතා අංක EK649 දරණ ගුවන්යානයෙන් 18 දින අළුයම 02.55ට පිටත්වීමට නියමිත අතර එය එදින අළුයම 05.55 වනවිට ඩුබායි දක්වා පිසායර කරන් ලැබේ. ඉන් පසු අංක EK215 දරන ගුවන් යානයෙන් එදිනම පෙරවරු 08.30ට ඩුබායි සිට ඇමරිකාවේ ලොස් ඇන්ජලීස් නුවර බලා පිටත්ව යාමට නිමිත අතර එය 18වනදා පස්වරු 01.50ට ඇමරිකා එක්සත් ජනපදයේ ලොස් ඇන්ජලීස් හි පිහිටි ජාත්යන්තර ගුවන්තොටුපොළ වෙත ලඟාවීමට නියමිතය.
ඉතා විශ්විසකටයුතු ආරංචිමාර්ග අනාවරණය කරන පරිදි ජනාධිපතිවරණයට අදාළව ඔහුට සමීප සියළුම සමීක්ෂණ වාර්තා පෙන්වා දී ඇත්තේ ගෝඨාභය රාජපක්ෂ මහතාට ජය ගැනීමට ඇති ඉඩ කඩ ඉතා සීමත බවය.
ඒ අනුව ඔහු ජනාධිපතිවරණය අවසන් වූ වහාම එනම් 18 වනදා අළුයම සිය මව් රට වන ඇමරිකා එක්සත් ජනපදය බලා පිටත්ව යාමට නියමිතය.
ඔහු වෙන්කරගෙන ඇති ටිකකට් පත මේ වනවිට සමාජ මාධ්යවලටද නිකුත් වී ඇති අතර එය සීග්රයෙන් සමාජ ජාල ඔස්සේ ප්රචාරය වෙමින් තිබේ.
Read more »

நம் கருமங்கள், எண்ணங்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையா


நாங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு வகையிலான கருமங்களில ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு இறைவணக்க வழிபாடுகளில் கலந்துகொள்கிறோம். எமது நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் உள்ளிட்ட பலருடன் பேசிப்பழகுகிறோம். அவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்கிறோம். இப்படியாக நாம் நாளாந்தம் செய்யும் அலுவல்கள் யாவும் அல்லாஹ்வின் நல்லருளுக்கு உட்பட்டவைகளாக இருக்க வேண்டும்.

அதாவது நாம் செய்கின்ற செய்ய முற்படுகின்ற கருமங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையா இல்லையா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதன்பின் தான் நாம் செயல்களில் இறங்க வேண்டும். அல்லாஹ்வின் மேல் அச்சம் நிறைந்தவர்கள் நிச்சயம் இது விஷயமாகக் கவனம் செலுத்துவார்கள்.

நாம் அல்லாஹ்வுக்காக ஐந்துவேளை தொழுது வருகிறோம். எனினும் இவையாவும் உண்மையான இறைபக்தி இல்லாத நிலையில் ஏதோ கடமைக்காக செய்து வரக்கூடாது. அது அர்த்தமில்லாதது. நாம் தொழுகையில் ஈடுபட்ட போதிலும் இதுபோன்ற மற்றும் வணக்க வழிபாடுகளில் கலந்து கொண்ட போதிலும் அவையாவும் அல்லாஹ்வுக்காகவே செய்கின்றோம் என்ற பயபக்தி உள்ளத்திலே ஆழமாகப் பதிய வேண்டும்.

உள்ளத்திலே வெளிப்படும் எண்ணங்களை எல்லாம் மறந்து விட்டு அல்லாஹ்வின் அச்சம் கொண்டவர்களாக எமது வணக்க வழிபாடுகளை செயல்படுத்த வேண்டும்.

நாம் செய்கின்ற நல்ல கருமங்களுக்கு அல்லாஹ்விடத்தில் நன்மையுண்டு. தீய கருமங்களுக்கு தண்டனையையும் உண்டு என்பதை நாம் நம்புகின்றோம். அதனால் அல்லாஹ்வின் மேல் உண்மையான அச்சம் கொண்டவர்கள் பாவங்கள் செய்வதற்கு முற்பட மாட்டார்கள். அதாவது, அடுத்தவர்களுக்கு அநியாயம் செய்வது, பொய்கூறுவது, பொய் சத்தியம் பண்ணுவது, பிறர் மனதை நோவினை செய்வது பிறர் பொருளை பறிப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, அநாதைகளின் சொத்துக்களை அநீதியாக பயன்படுத்துவது உள்ளிட்ட பாவமான காரியங்கள் செய்வதற்கு அல்லாஹ்வின் மீது அச்சம்- பயம் கொண்டவர்கள் கொஞ்சமும் முன்வர மாட்டார்கள்.

ஆனால், இன்று சமூகத்திலே நடப்பதென்ன? இதுவெல்லாம் எமது நீண்ட தூர சிந்தனைக்கு உட்பட்டதாகும். நாம் எவருக்கும் தெரியாமல் அநியாயங்கள் செய்யலாம். மற்றவர்கள் முன் நல்லவர் போல நடித்தும் விடலாம். எனினும் இந்தச் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வுத்தஆலா கவனிக்கின்றான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதனால் நாம் எந்த வேளையிலும் அலலாஹ்வை நினைத்தவர்களாக அவன் மேல் அன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ஒருமுறை கலீபா உமர் பாரூக் அவர்கள் ஒரு முக்கிய அலுவலக குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியிலே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். அச்சிறுவனுடன் பேச நினைத்த கலீபா அவர்கள், சிறுவனிடம் வந்தார்கள். குதிரை மீது இருப்பவர் கலீபா உமர் என்பது சிறுவனுக்கு தெரியாது “தம்பி இவை யாருடைய ஆடுகள்; இவை எனது எசமானின் ஆடுகள். ஆடுகளில் ஒன்றை விலைக்குத் தருகிறாயா? இதனை உங்களுக்கு விற்க முடியாது; இவை என்னுடையதல்ல. எனது எசமானுக்குரியது. எனக்கு ஓர் ஆட்டை தந்து விடு. எஜமான் கேட்டால் ஓநாய் பிடித்து விட்டதாக சொல். பெரியவரே, நான் எஜமானரிடம் பொய் கூறி ஏமாற்றலாம். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ்வை ஏமாற்ற முடியாதல்லவா? நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன். இந்தச் சிறுவனிடம் இத்தகைய அல்லாஹ்வின் மீது அச்சம் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். இதுதான் இறையச்சம். எங்களுக்கெல்லாம் ஒரு படிப்பினையாகவும் முன்மாதிரியாகவும் இருக்கின்றதல்லவா?

எம். ஏ. அத்தாஸ்
மாத்தறை
Read more »

11 மாதங்களில் 64,290 டெங்கு நோயாளர்கள்; 85 பேர் பலி


நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 64,290 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் 11 மாத காலப்பகுதியினுள்ளேயே குறித்த டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்தோடு குறித்த காலப்பகுதியில் டெங்கு காரணமாக 85 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.

மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அது மொத்த டெங்கு நோயாளர்களில் 46.8 வீதமாகும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது பெய்துவரும் பருவ மழை காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி உட்பட பல மாவட்டங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எனவே, நுளம்புகள் பெருகுவதை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொதுமக்களிடம் வைத்தியர் அருண ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
Read more »