Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

உலகப் போருக்கு வழிவகுத்துள்ள ட்ரம்பின் ஒரேயொரு தீர்மானம்


Read more »

இறைத்தூதரின் கேலிச்சித்திர போட்டிக்கு டச்சு எம்.பி அழைப்பு


Read more »

குளியலறையில் வீழ்ந்த பிரேசில் ஜனாதிபதிக்கு பழைய நினைவு திரும்பியது

Read more »

சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து .. பலர் பலி. சிலர் உயிர் பிழைப்பு.


Read more »

நிறைவேறியது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான தீர்மானம

Read more »

38 பேருடன் சிலி இராணுவ விமானம் மாயம்



Read more »

டாக்டர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.


Read more »

மீனவர்கள் வலையில் சிக்கிய விண்கலத்தின் பாகம்



Read more »

இந்தியாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி எரித்துக் கொலை: நால்வர் கைது


Read more »

6.1 ரிச்டெர் அளவில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் நியூகினியா தீவில் 6.1 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக
Read more »

இரண்டு நாள் மோதலுக்குப் பின் காசாவில் யுத்த நிறுத்தம் அமுல்


34 பலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேலுடனான எகிப்து மத்தியஸ்தத்திலான யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியதாக காசாவின் இஸ்லாமிய
Read more »

பாலியல் உறவு மூலம் பரவிய டெங்கு தொற்று


உலகில் முதன் முதலாகப் பாலியல் உறவின் மூலம் டெங்குத் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 41 வயது ஆடவர், மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில் டெங்குத் தொற்றுப் பரவியதாக உறுதிசெய்யப்பட்டது. அவ்விருவரில் ஒருவருக்குக் கியூபாவில் நுளம்புக் கடியின் மூலம் டெங்கு தொற்று ஏற்பட்டது.

அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆடவர், டெங்குத் தொற்று இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரிடம் டெங்கு அறிகுறிகளைக் கண்டபோது மருத்துவர்கள் வியந்தனர்.

பின்னர் இருவரின் விந்தணுக்களைப் பரிசோதனை செய்ததில் கியூபாவில் காணப்படும் டெங்குத் தொற்று இருவருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு காரணமாகத் தென் கொரியாவில் டெங்குத் தொற்று பரவியிருந்ததாக நம்பப்பட்டது. வைரஸ் தொற்றான டெங்கு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் பரவுகிறது.
Read more »

50 முட்டைகளை உட்கொள்வதாக பந்தயம் கட்டியவருக்கு நேர்ந்த சோகம்!

உத்திர பிரதேசத்தில் 50 முட்டைகளை உட்கொள்வதற்காகப் பந்தயம் கட்டிய ஒருவர், 41ஆவது முட்டை உட்கொள்ளும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிபிகஞ்ச் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான சுபாஷ் யாதவ் என்பவர் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.சுபாஷ்யாதவ் அந்த பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று அவரும், அவரது நண்பர் ஒருவரும் பிபிகஞ்ச் சந்தை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு உட்கொள்ளச் சென்ற போது அவர்கள் இருவரும் முட்டை உட்கொண்ட போது அவர்களுக்குள் திடீரென முட்டை உட்கொள்வது தொடர்பாக கடும் விவாதம் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் 50 முட்டை உட்கொள்ள முடியுமா? என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார்.அந்த சவாலை ஏற்றுக்கொண்ட சுபாஷ் 50 முட்டைகளை உட்கொண்டால் பரிசாக எவ்வளவு பணம் தருவாய் என்று கேட்டார்.

அதற்கு அவரது நண்பர் ஒரே நேரத்தில் இப்போதே 50 முட்டை உட்கொண்டு விட்டால் 2 ஆயிரம் ரூபா பரிசு தருவதாகத் தெரிவித்தார்.இதையடுத்து இந்த சவாலை சுபாஷ் ஏற்றுக்கொண்டு 50 முட்டைகளைக் கொண்டு வரும்படி கூறினார். 50 அவித்த முட்டைகள் வந்ததும் அவற்றை ஒவ்வொன்றாக சுபாஷ் உட்கொள் ஆரம்பித்தார்.40 முட்டைகளை அவர் அடுத்தடுத்து உட்கொண்டு தனது நண்பரை மிரள வைத்தார்.

ஆனால் 41ஆவது முட்டையை உண்ண ஆரம்பித்த போதுதான் சிக்கல் உருவானது. 41ஆவது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை எழுப்ப நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. உடனடியாக அவரை அந்த பகுதியிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கிருந்த வைத்தியர்கள் அவரை ஜான்பூரில் உள்ள சஞ்சய்காந்தி வைத்திய அறிவியல் கழகம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர்.

அதன்படி அந்த வைத்தியசாலைக்கு சுபாஷ் யாதவை கொண்டு சென்றனர். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி சுபாஷ் உயிரிழந்தார்.இதுகுறித்து வைத்தியர்கள், தெரிவிக்கையில், “முட்டையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டமையால், அவை உணவு குழாயை அடைத்ததோடு சுவாசத்தையும் தடுத்து விட்டது.

இதனால் அவர் சுவாசம் கிடைக்காமல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்” என்றனர்.குறித்த சம்பவம் தொடர்பாக சுபாஷ் குடும்பத்தினர் பொலிஸில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Read more »

10 ஆண்டுகளில் 13 ஆவது சம்பவம் 12 குழந்தைகளில் 2 குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்பு


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 13ஆவது ஆழ்துளை கிணறு விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இவ்விபத்து திருச்சி மாவட்டத்தின் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் நடந்துள்ளது. சுமார் 400 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தையொன்று விழுந்துள்ளது.

தமிழக அரசும் உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த ஆழ்துளை கிணறு விபரீதம் குறித்த விவரம் வருமாறு:

இதேபோன்று 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்தான். அதே ஆண்டு ஓகஸ்ட் 27ம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.

2011 செப்டம்பர் 8ஆம் திகதி நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.

2012ம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா தம்பதியின் குழந்தை குணா (3) ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

2013 ஏப்ரல் 28ஆம் திகதி கரூர் அருகே ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.

2014 ஏப்ரல் 5ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.

அதே ஏப்ரல் 5ஆம் திகதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.

அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

அதே ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இந் நிலையில் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

2018ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் தொடர் கதையாகவே உள்ளது.
Read more »

கொள்கலனில் இறந்த பெண் தாய்க்கு கடைசியாக செய்


வியட்நாமைச் சேர்ந்த பெண்ணொருவர் தாம் இறந்து கொண்டிருப்பதாக, தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி, லண்டன் அருகே சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கொள்கலனுக்குள் வியட்நாமைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லண்டன் அருகே கொள்கலன் லொரியிலிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்தவர்கள் சீனர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வியட்நாமைச் சேர்ந்த பாம் திட்ரா மை என்ற பெண், தாம் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் தான் இறந்து கொண்டிருப்பதாகவும், ஏனெனில் தனக்கு மூச்சுத்திணறுகிறது எனக் கூறியுள்ள அந்த பெண், வெளிநாட்டில் குடியேற தாம் தேர்வு செய்த வழி வெற்றிகரமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார். இதனால் கொள்கலனுக்குள் சடலமாகக் கிடந்தவர்களுள் வியட்நாமியர்களும் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த கொள்கலன் லொரியை ஓட்டி வந்த மரிஸ் ரொபின்சன் என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆட்கடத்தல், கறுப்புப்பண பறிமாற்றம் ஆகிய குற்றங்களுக்காகவும் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பொலிஸ் காவலில் உள்ளனர். கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்கலனில் இறந்தவர்களில் சிலரே அடையாள அட்டைகளும் பிற ஆவணங்களும் வைத்திருந்ததால், அவர்களின் டி.என்.ஏ மற்றும் தழும்புகள் ஆகியவற்றைக் கொண்டே அவர்களை அடையாளம் காணவேண்டிய சூழல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more »

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்


மணப்பாறை சுஜித் சம்பவமே இறுதியாக இருக்க வேண்டும்
ஆழ்துளை கிணறுகள் அமைப்பு மற்றும் பயன்பாட்டை வரைமுறைப்படுத்த வேண்டும்

- எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்*

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுர்ஜித் வில்சன், வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, பயன்பாடற்று திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து, கடந்த 20 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்து வரும் செய்தி மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது.

குழந்தையை மீட்க மீட்பு படைகள் பல மணி நேரங்களாக தொடர்ந்து முயன்று வரும் நிலையில், மீட்புப் பணிகளின் ஒவ்வொரு நகர்வும் ஒட்டுமொத்த மக்களால் உற்று நோக்கப்படுகின்றது. குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரார்த்தனையிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்குகொள்கிறது.

இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறிவிழும் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ள போதும், பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பான விழிப்புணர்வுகள் இன்னும் போதிய அளவில் மக்களை சென்றடையவில்லை என்பதையே குழந்தை சுஜித்திற்கு தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் உணர்த்துகின்றது. ஆகவே, தமிழக அரசு இதுபோன்ற ஆழ்துறை கிணறுகளை உடனடியாக பாதுகாப்பாக மூடும் வகையிலான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதோடு, ஆழ்துளை கிணறுகளில் தவறிவிழும் குழந்தைகளை எளிதில் மீட்கும் வகையிலான கருவிகளை உருவாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் அளப்பெரும் சாதனைகளை நிகழ்த்திவரும் நாம், ஆழ்துளை கிணறுகளில் தவறிவிழும் குழந்தைகளை மீட்கும் கருவிகளை பல படிப்பினைகளை கண்ட பிறகும் கண்டறியாதது பின்னடைவே ஆகும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் அதற்கான முயற்சிகளை உடனடியாக துவக்க வேண்டும்.

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்து 20 மணி நேரத்துக்கும் மேலாக போராடிவரும் குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு இன்னும் வேகமான நடவடிக்கைகளை துவக்க வேண்டும். சுஜித் சம்பவமே இதுபோன்ற சம்பவங்களின் இறுதியாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே துவக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் அமைப்பதையும், அதன் பயன்பாட்டையும் ட்வரமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read more »

மீட்புப் பணியில் மேலும் பின்னடைவு : 26 மணி நேரத்தை தாண்டிய போ ராட்டம் : 100 அடிக்கு கீழே நழுவிச் சென்ற குழந்தை!!


குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் 24 மணி நேரத்தை தாண்டியுள்ள நிலையில், 80 அடியிலிருந்து 85 அடிக்கு நழுவி சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுர்ஜித் என்கிற 2 வயது குழந்தை, நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது, மழையால் பாதிக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு தவறி விழுந்தான்.

முதலில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை நேரம் செல்லச்செல்ல, ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணங்களால் 30, 70, 75, 80, 85 என தற்போது 100 அடி ஆழத்திற்கு கீழே சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
26 மணி நேரத்தை கடந்த நிலையில் பெரும் சவாலுக்கு மத்தியில் மீட்பு படை வீரர்களும் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

அதேசமயம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என தமிழக மக்களும் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








.





முன்னதாக அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தை 48 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more »

ஆபத்தான செல்பி எடுத்த பெண்ணுக்கு உல்லாச கப்பல்களில் வாழ்நாள் தடை


உல்லாசக் கப்பலில் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுத்த பெண்ணுக்கு இனி வாழ்நாள் முழுவதும் உல்லாசக் கப்பலில் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரோயல் கரீபியன் நிறுவனத்தின் உல்லாசக் கப்பல் ஒன்று, ஹைட்டியை நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது. ஒரு பெண் தனது அறைக்கு வெளியில் இருந்த இடத்தில் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். அங்கு எடுக்கும் படங்கள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

அதனால், வெளிப்புற மாடத்தைச் சுற்றி இருக்கும் தடுப்புக் கம்பி மீது ஏறி நின்று அந்தப் பெண் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அவரைக் கவனித்த மற்றொரு பயணி கப்பல் ஊழியர்களுக்கு அதுபற்றித் தகவல் தெரிவித்தார்.





பெண் பயணி என்ன செய்யப் போகிறார் என்பதை ஊகிக்க முடியவில்லை. திடீரென அவர் கடலில் குதித்துவிட்டால் அது ஆபத்தில் முடியலாமென்று அஞ்சிய சகபயணி, உடனடியாக ஊழியர்களிடம் புகார் செய்ய முடிவெடுத்ததாகக் கூறினார்.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலில் ஈடுபட்ட அந்தப் பயணியை அடையாளங்கண்ட அதிகாரிகள் பின்னர் அவரைக் கப்பலை விட்டு வெளியேற்றினர்.
Read more »

19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து நியூயோர்க்கிலிருந்து சிட்னி சென்ற விமானம்

உலகில் நீண்ட தொலைவு பறக்கும் விமானம் நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்டு அவுதிரேலியாவின் சிட்னி நகருக்கு இன்று காலை சென்றடைந்தது.

நியூயோர்க் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட குவான்டாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ரக விமானம் இடை நில்லாமல் பயணிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது.

ஏறக்குறைய 16 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவு பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது. இந்நிலையில் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் பறந்து இன்று காலை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை விமானம் சென்றடைந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆலன் ஜோய்ஸ்,

உண்மையில் 19 மணிநேரத்துக்கும் மேலாக இடைநில்லாமல் விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு. பயணிகளையும், விமானிகளையும் எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம்.

விமானம் புறப்பட்டவுடன் பயணிகள் அனைவரும் தங்களின் கைக்கடிகாரத்தின் நேரத்தை சிட்னி நேரத்துக்கு மாற்றிவைத்தனர்.

பயணிகள், விமானியின் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

வழக்கமாக இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டவுடன் இரவு உணவு அளிக்கப்பட்டு பயணிகள் தூங்குவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.

ஆனால், இந்த விமானத்தில் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவு அளித்து, 6 மணிநேரம் விழித்திருக்கச் செய்து, அதன்பின் பயணிகளுக்கு இரவு உணவு அளித்து தூங்க அனுமதிக்கப்பட்டார்.

கிழக்கு அவுஸ்திரேலியாவில் இரவு வரும் அனைவரும் விழித்திருக்க வைத்து உணவு வழங்கப்பட்டது. 6 மணிநேரத்துக்குப்பின் அவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை, விளக்குகளைப் பார்க்காமல் தூங்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.

விமானத்த இயக்குவதற்காக வழக்கமாக இரு விமானிகள் இருக்கும் நிலையில் இந்த விமானத்தில் 4 விமானிகள் பயணித்தனர். 4 விமானிகளும் மாறி, மாறி தங்கள் பணியைச் செய்தார்கள் என்றார்.

Read more »

புவியின் உயிர் வாழ்வை அழித்து விடுமா அமேசன் தீ?


பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்களின் அழிவு உச்சத்தை எட்டியது. அமேசன் காடுகள் குறித்து பல்வேறு தகவல்களை நாம் கடந்து வந்திருப்போம். பாடநூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் வரை அமேசன் தொடர்பான ஏதோ ஒன்று, நம் கண்ணில் தவறாமல் தென்படும். பல்வேறு சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் அமேசன் மழைக் காடுகள் கடந்த 3வாரங்களாகப் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன.

கோடை காலங்களில் கூட, அமேசன் மழைக்காடுகளில் அத்தனை எளிதில் தீ விபத்து ஏற்பட்டு விடாது. அங்கு நிலவி வரும் ஈரப்பதம் அதற்கு முக்கியமான காரணம். உலகின் மிகப் பெரிய காடாக அமேசன் அறியப்படுகிறது. சுமார் 5.5மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. லத்தீன் அமெரிக்காவின் சுமார் 40சதவீத பகுதியை இந்தக் காடு கொண்டுள்ளது.

மேலும் இந்த மழைக்காடுகள் சுமார் 9நாடுகளில் பரந்து விரிந்து இயற்கையான பசுமைப் போர்வையாக விரிந்திருக்கின்றன. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், பிரெஞ்ச், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா ஆகிய நாடுகளில் அமேசன் காடு படர்ந்து காணப்படுகிறது. 60சதவீத அமேசான் காடு பிரேசில் நாட்டில் இருக்கிறது. பிரேசிலில்தான் தற்போது காட்டுத் தீ கடுமையாகப் பரவி வருகிறது.

அமேசன் மழைக்காடுகளை பல்லுயிர் சரணாலயம் என்றும் அழைக்கிறார்கள். பூமியில் இருக்கும் இனங்களில் 4-இல் ஒரு பங்கை தன்னுள் கொண்டுள்ளது இந்த அமேசன். உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசன் மழைக்காடுகளில் உள்ளது. சுமார் 30,000வகையான செடிகள், 2,500வகையான மீன்கள், 1,500பறவைகள், 500பாலூட்டிகள், 550ஊர்வன மற்றும் 2.5மில்லியன் பூச்சிகள் இருப்பதாக Amazon Cooperation Treaty Organization அமைப்பு கூறுகிறது. கடந்த 20ஆண்டுகளில் மட்டும் 2,200புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கின்றன.

பலரும் அறிந்த அமேசானின் மற்றொரு பெயர் `பூமியின் நுரையீரல்’. உலகின் மொத்த ஒக்சிஜன் உற்பத்தில் சுமார் 20சதவீதத்துக்கும் மேலாக அமேசானில் இருந்து கிடைக்கிறது. மேலும் அதிக அளவில் காபனீரொட்சைட்டை உள்வாங்கிக் கொள்கிறது. அமேசன் ஆறு உலகின் மிக நீளமான ஆறு. இது சுமார் 6,900கிலோமீற்றர் ஓடுகிறது. இந்த அமேசன் நதி மற்றும் அதன் கிளை நதிகள் உலகின் மொத்த நன்னீரில் 20சதவீத நீரைத் தருவதாகப் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அடர்ந்த மழைக்காடுகளில் சுமார் 420பழங்குடிகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்திய பழங்குடியினரும் அடக்கம். அமேசானில் இருக்கும் இந்திய பழங்குடியினர் சுமார் 86மொழிகளை பேசுவதாக Amazon Cooperation Treaty Organization அமைப்பு கூறுகிறது. அமேசனில் இருகும் பெரிய பழங்குடியின இனமாக `டிகுனா’ இனம் அறியப்படுகிறது. சுமார் 40,000மக்கள் கொண்ட இந்தப் பழங்குடியினர் பிரேசில், பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இத்தனை பெரிய அமேசான் மழைக்காடு தற்போது மரங்கள் வெட்டப்படுவதாலும் பெரும் காட்டுத் தீ சம்பவங்களாலும் பெரும் அழிவைச் சந்தித்து வருகிறது. உலகில் இத்தனை உயிர்களை வாழவைக்கும் அமேசன், கடந்த 50ஆண்டுகளில் சுமார் 20சதவீதம் அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதற்கு காரணம் பெரும்பாலான காட்டுத்தீ, மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதுதான்.

தற்போதைய பிரேசிலின் பிரதமர் ஜெயர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்கள் அழிவு உச்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலையில் மட்டும் பன்மடங்கு அதிகமாகக் காடு அழிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தரும் தகவலின்படி கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2,254சதுர கிலோமீற்றர் காடு அழிப்பு அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 278சதவீதம் அதிகம்.

மேலும், விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின்படி, பிரேசிலில் இந்த ஆண்டு தற்போது வரை 73,000காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை அமேசனில்தான் பதிவாகியுள்ளன. இதுவே 2018-ம் ஆண்டு 39,759ஆக உள்ளது. எத்தனை வேகமாக அமேசான் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒன்றே சான்றாகும்.இதற்குப் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்கள், ஒன்று வளர்ச்சி, மற்றொன்று பெரு விவசாயிகள்.

பிரேசில் அரசு தொடர்ச்சியாக வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக மற்ற நாடுகள் குற்றம்சாட்டி வருவதுடன் பிரேசில் அரசுக்கு வழங்கிய நிதி உதவிகளையும் நிறுத்தப் போவதாக ஜெர்மனி,​ேநார்வே ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

`அமேசன் காட்டில் தீ என்பது பிரேசிலின் பிரச்சினை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த உலகின் பிரச்சினை' எனக் கவலைதோய்ந்த குரலில் பேசுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். கடந்த சில நாள்களாகவே உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது அமேசன் காட்டுத்தீ. எவ்வளவு பெரிய காட்டுத்தீயிலிருந்தும் மீண்டு வரும் அபார வலிமை படைத்தவை காடுகள். ஆனால் அரசியல் தீயிலும், தனிமனித பேராசை தீயிலும் எரிந்து கொண்டிருக்கும் இந்த காடுகள் மீண்டுவருமா என்பது சந்தேகம்.

உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளுக்குள் நடந்து கொண்டிருப்பதைச் சாதாரண இயற்கை நிகழ்வாகவோ விபத்தாகவோ கடந்து விட முடியாது. இதற்குபின் இருக்கும் அரசியல் மிகப் பெரியது. இந்தப் பாதிப்புகளுக்கு பெரும் காரணமாகக் கூறப்படுபவர் தற்போதைய பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ. இப்போது இந்த நெருப்பு அணைக்கப்பட்டு விட்டாலும் கூட இவரது அரசியல் கொள்கைகள் நிச்சயம் அமேசன் காடுகளை ஒருவழி செய்துவிடும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

2018ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்திலிருந்தே, அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என்பது அவரது முக்கிய கோஷமாக இருந்தது. அப்போதுதான் பிரேசில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத் தொடங்கியிருந்தது. விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் முதல் எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரும் இந்தக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். பிரேசிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. பெருமளவில் இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்த்தல் நிலங்களாக அமேசன் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படியான ஆசைகளிலிருந்துதான் பிரச்சினை தொடங்குகிறது.

இது இயற்கையாக நடந்ததுதான் என்கிறார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். ஆனால், இதை முற்றிலுமாக மறுக்கின்றனர் சூழலியலாளர்கள். பொதுவாக இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இது மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும்விட இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் இந்த காட்டுத்தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதிசெய்கிறது. இந்தக் காட்டுத்தீ பாதிப்புகள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 84%அதிகம் என்கிறது அந்த அமைப்பு. பொல்சொனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக்காட்டியது.

இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணிநீக்கம் செய்தது பிரேசில் அரசு. இதைப்போன்ற தவறான தகவல்களால் உலக அரங்கில் பிரேசிலுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று இதற்கு விளக்கம் தெரிவித்தார் பொல்சொனேரோ.

முதலில் இந்தத் தீயை அணைக்க போதிய சக்தி எங்களிடம் இல்லை, அமேசான் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கிறது என கைவிரித்தார் பொல்சொனேரோ. மேலும், தன் மேல் வெறுப்புணர்வு கொண்ட தொண்டர் நிறுவனங்களின் வேலைதான் இது என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் பெரும்பாலும் பொல்சொனேரோ ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள்தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக்கொள்ள வைக்கப்பட்ட சிறிய நெருப்புகள் கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது.
Read more »