Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

பக்தாதிலுள்ள “கிறீன் ஸோன்” மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

Read more »

அமெரிக்க பதில் தாக்குதல் நடாத்தினால் மேலும் 100 தளங்கள் இலக்கு- ஈரான்


Read more »

உலகப் போருக்கு வழிவகுத்துள்ள ட்ரம்பின் ஒரேயொரு தீர்மானம்


Read more »

இறைத்தூதரின் கேலிச்சித்திர போட்டிக்கு டச்சு எம்.பி அழைப்பு


Read more »

குளியலறையில் வீழ்ந்த பிரேசில் ஜனாதிபதிக்கு பழைய நினைவு திரும்பியது

Read more »

சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து .. பலர் பலி. சிலர் உயிர் பிழைப்பு.


Read more »

நிறைவேறியது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான தீர்மானம

Read more »

38 பேருடன் சிலி இராணுவ விமானம் மாயம்



Read more »

டாக்டர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.


Read more »

மீனவர்கள் வலையில் சிக்கிய விண்கலத்தின் பாகம்



Read more »

இந்தியாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி எரித்துக் கொலை: நால்வர் கைது


Read more »

6.1 ரிச்டெர் அளவில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் நியூகினியா தீவில் 6.1 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக
Read more »

இரண்டு நாள் மோதலுக்குப் பின் காசாவில் யுத்த நிறுத்தம் அமுல்


34 பலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேலுடனான எகிப்து மத்தியஸ்தத்திலான யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியதாக காசாவின் இஸ்லாமிய
Read more »

பாலியல் உறவு மூலம் பரவிய டெங்கு தொற்று


உலகில் முதன் முதலாகப் பாலியல் உறவின் மூலம் டெங்குத் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 41 வயது ஆடவர், மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில் டெங்குத் தொற்றுப் பரவியதாக உறுதிசெய்யப்பட்டது. அவ்விருவரில் ஒருவருக்குக் கியூபாவில் நுளம்புக் கடியின் மூலம் டெங்கு தொற்று ஏற்பட்டது.

அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆடவர், டெங்குத் தொற்று இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரிடம் டெங்கு அறிகுறிகளைக் கண்டபோது மருத்துவர்கள் வியந்தனர்.

பின்னர் இருவரின் விந்தணுக்களைப் பரிசோதனை செய்ததில் கியூபாவில் காணப்படும் டெங்குத் தொற்று இருவருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு காரணமாகத் தென் கொரியாவில் டெங்குத் தொற்று பரவியிருந்ததாக நம்பப்பட்டது. வைரஸ் தொற்றான டெங்கு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் பரவுகிறது.
Read more »

50 முட்டைகளை உட்கொள்வதாக பந்தயம் கட்டியவருக்கு நேர்ந்த சோகம்!

உத்திர பிரதேசத்தில் 50 முட்டைகளை உட்கொள்வதற்காகப் பந்தயம் கட்டிய ஒருவர், 41ஆவது முட்டை உட்கொள்ளும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிபிகஞ்ச் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான சுபாஷ் யாதவ் என்பவர் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.சுபாஷ்யாதவ் அந்த பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று அவரும், அவரது நண்பர் ஒருவரும் பிபிகஞ்ச் சந்தை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு உட்கொள்ளச் சென்ற போது அவர்கள் இருவரும் முட்டை உட்கொண்ட போது அவர்களுக்குள் திடீரென முட்டை உட்கொள்வது தொடர்பாக கடும் விவாதம் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் 50 முட்டை உட்கொள்ள முடியுமா? என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார்.அந்த சவாலை ஏற்றுக்கொண்ட சுபாஷ் 50 முட்டைகளை உட்கொண்டால் பரிசாக எவ்வளவு பணம் தருவாய் என்று கேட்டார்.

அதற்கு அவரது நண்பர் ஒரே நேரத்தில் இப்போதே 50 முட்டை உட்கொண்டு விட்டால் 2 ஆயிரம் ரூபா பரிசு தருவதாகத் தெரிவித்தார்.இதையடுத்து இந்த சவாலை சுபாஷ் ஏற்றுக்கொண்டு 50 முட்டைகளைக் கொண்டு வரும்படி கூறினார். 50 அவித்த முட்டைகள் வந்ததும் அவற்றை ஒவ்வொன்றாக சுபாஷ் உட்கொள் ஆரம்பித்தார்.40 முட்டைகளை அவர் அடுத்தடுத்து உட்கொண்டு தனது நண்பரை மிரள வைத்தார்.

ஆனால் 41ஆவது முட்டையை உண்ண ஆரம்பித்த போதுதான் சிக்கல் உருவானது. 41ஆவது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை எழுப்ப நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. உடனடியாக அவரை அந்த பகுதியிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கிருந்த வைத்தியர்கள் அவரை ஜான்பூரில் உள்ள சஞ்சய்காந்தி வைத்திய அறிவியல் கழகம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர்.

அதன்படி அந்த வைத்தியசாலைக்கு சுபாஷ் யாதவை கொண்டு சென்றனர். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி சுபாஷ் உயிரிழந்தார்.இதுகுறித்து வைத்தியர்கள், தெரிவிக்கையில், “முட்டையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டமையால், அவை உணவு குழாயை அடைத்ததோடு சுவாசத்தையும் தடுத்து விட்டது.

இதனால் அவர் சுவாசம் கிடைக்காமல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்” என்றனர்.குறித்த சம்பவம் தொடர்பாக சுபாஷ் குடும்பத்தினர் பொலிஸில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Read more »

10 ஆண்டுகளில் 13 ஆவது சம்பவம் 12 குழந்தைகளில் 2 குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்பு


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 13ஆவது ஆழ்துளை கிணறு விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இவ்விபத்து திருச்சி மாவட்டத்தின் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் நடந்துள்ளது. சுமார் 400 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தையொன்று விழுந்துள்ளது.

தமிழக அரசும் உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த ஆழ்துளை கிணறு விபரீதம் குறித்த விவரம் வருமாறு:

இதேபோன்று 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்தான். அதே ஆண்டு ஓகஸ்ட் 27ம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.

2011 செப்டம்பர் 8ஆம் திகதி நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.

2012ம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா தம்பதியின் குழந்தை குணா (3) ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

2013 ஏப்ரல் 28ஆம் திகதி கரூர் அருகே ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.

2014 ஏப்ரல் 5ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.

அதே ஏப்ரல் 5ஆம் திகதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.

அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

அதே ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இந் நிலையில் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

2018ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் தொடர் கதையாகவே உள்ளது.
Read more »

கொள்கலனில் இறந்த பெண் தாய்க்கு கடைசியாக செய்


வியட்நாமைச் சேர்ந்த பெண்ணொருவர் தாம் இறந்து கொண்டிருப்பதாக, தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி, லண்டன் அருகே சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கொள்கலனுக்குள் வியட்நாமைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லண்டன் அருகே கொள்கலன் லொரியிலிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்தவர்கள் சீனர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வியட்நாமைச் சேர்ந்த பாம் திட்ரா மை என்ற பெண், தாம் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் தான் இறந்து கொண்டிருப்பதாகவும், ஏனெனில் தனக்கு மூச்சுத்திணறுகிறது எனக் கூறியுள்ள அந்த பெண், வெளிநாட்டில் குடியேற தாம் தேர்வு செய்த வழி வெற்றிகரமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார். இதனால் கொள்கலனுக்குள் சடலமாகக் கிடந்தவர்களுள் வியட்நாமியர்களும் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த கொள்கலன் லொரியை ஓட்டி வந்த மரிஸ் ரொபின்சன் என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆட்கடத்தல், கறுப்புப்பண பறிமாற்றம் ஆகிய குற்றங்களுக்காகவும் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பொலிஸ் காவலில் உள்ளனர். கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்கலனில் இறந்தவர்களில் சிலரே அடையாள அட்டைகளும் பிற ஆவணங்களும் வைத்திருந்ததால், அவர்களின் டி.என்.ஏ மற்றும் தழும்புகள் ஆகியவற்றைக் கொண்டே அவர்களை அடையாளம் காணவேண்டிய சூழல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more »

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்


மணப்பாறை சுஜித் சம்பவமே இறுதியாக இருக்க வேண்டும்
ஆழ்துளை கிணறுகள் அமைப்பு மற்றும் பயன்பாட்டை வரைமுறைப்படுத்த வேண்டும்

- எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்*

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுர்ஜித் வில்சன், வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, பயன்பாடற்று திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து, கடந்த 20 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்து வரும் செய்தி மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது.

குழந்தையை மீட்க மீட்பு படைகள் பல மணி நேரங்களாக தொடர்ந்து முயன்று வரும் நிலையில், மீட்புப் பணிகளின் ஒவ்வொரு நகர்வும் ஒட்டுமொத்த மக்களால் உற்று நோக்கப்படுகின்றது. குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரார்த்தனையிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்குகொள்கிறது.

இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறிவிழும் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ள போதும், பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பான விழிப்புணர்வுகள் இன்னும் போதிய அளவில் மக்களை சென்றடையவில்லை என்பதையே குழந்தை சுஜித்திற்கு தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் உணர்த்துகின்றது. ஆகவே, தமிழக அரசு இதுபோன்ற ஆழ்துறை கிணறுகளை உடனடியாக பாதுகாப்பாக மூடும் வகையிலான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதோடு, ஆழ்துளை கிணறுகளில் தவறிவிழும் குழந்தைகளை எளிதில் மீட்கும் வகையிலான கருவிகளை உருவாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் அளப்பெரும் சாதனைகளை நிகழ்த்திவரும் நாம், ஆழ்துளை கிணறுகளில் தவறிவிழும் குழந்தைகளை மீட்கும் கருவிகளை பல படிப்பினைகளை கண்ட பிறகும் கண்டறியாதது பின்னடைவே ஆகும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் அதற்கான முயற்சிகளை உடனடியாக துவக்க வேண்டும்.

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்து 20 மணி நேரத்துக்கும் மேலாக போராடிவரும் குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு இன்னும் வேகமான நடவடிக்கைகளை துவக்க வேண்டும். சுஜித் சம்பவமே இதுபோன்ற சம்பவங்களின் இறுதியாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே துவக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் அமைப்பதையும், அதன் பயன்பாட்டையும் ட்வரமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read more »

மீட்புப் பணியில் மேலும் பின்னடைவு : 26 மணி நேரத்தை தாண்டிய போ ராட்டம் : 100 அடிக்கு கீழே நழுவிச் சென்ற குழந்தை!!


குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் 24 மணி நேரத்தை தாண்டியுள்ள நிலையில், 80 அடியிலிருந்து 85 அடிக்கு நழுவி சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுர்ஜித் என்கிற 2 வயது குழந்தை, நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது, மழையால் பாதிக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு தவறி விழுந்தான்.

முதலில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை நேரம் செல்லச்செல்ல, ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணங்களால் 30, 70, 75, 80, 85 என தற்போது 100 அடி ஆழத்திற்கு கீழே சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
26 மணி நேரத்தை கடந்த நிலையில் பெரும் சவாலுக்கு மத்தியில் மீட்பு படை வீரர்களும் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

அதேசமயம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என தமிழக மக்களும் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








.





முன்னதாக அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தை 48 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more »

ஆபத்தான செல்பி எடுத்த பெண்ணுக்கு உல்லாச கப்பல்களில் வாழ்நாள் தடை


உல்லாசக் கப்பலில் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுத்த பெண்ணுக்கு இனி வாழ்நாள் முழுவதும் உல்லாசக் கப்பலில் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரோயல் கரீபியன் நிறுவனத்தின் உல்லாசக் கப்பல் ஒன்று, ஹைட்டியை நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது. ஒரு பெண் தனது அறைக்கு வெளியில் இருந்த இடத்தில் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். அங்கு எடுக்கும் படங்கள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

அதனால், வெளிப்புற மாடத்தைச் சுற்றி இருக்கும் தடுப்புக் கம்பி மீது ஏறி நின்று அந்தப் பெண் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அவரைக் கவனித்த மற்றொரு பயணி கப்பல் ஊழியர்களுக்கு அதுபற்றித் தகவல் தெரிவித்தார்.





பெண் பயணி என்ன செய்யப் போகிறார் என்பதை ஊகிக்க முடியவில்லை. திடீரென அவர் கடலில் குதித்துவிட்டால் அது ஆபத்தில் முடியலாமென்று அஞ்சிய சகபயணி, உடனடியாக ஊழியர்களிடம் புகார் செய்ய முடிவெடுத்ததாகக் கூறினார்.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலில் ஈடுபட்ட அந்தப் பயணியை அடையாளங்கண்ட அதிகாரிகள் பின்னர் அவரைக் கப்பலை விட்டு வெளியேற்றினர்.
Read more »